19th OCTOBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
நிலக்கரி அமைச்சகம் அரசு மின் சந்தை கொள்முதலில் ரூ.28665 கோடி என்ற இலக்கைக் கடந்தது
- கடந்த மூன்று நிதியாண்டுகளில், நிலக்கரி அமைச்சகம் மற்றும் இந்திய நிலக்கரி நிறுவனம் அரசு மின் கொள்முதல் சந்தையில் ஆரோக்கியமான நிலையையொட்டி வளர்ச்சி கண்டு வருகிறது. 2020-21-ம் நிதியாண்டிலிருந்து 2023-24-ம் நிதியாண்டு வரை, அரசு மின் கொள்முதல் சந்தை மூலம் கொள்முதல் தொடர்ந்து அதிகரித்துள்ளது.
- 2020-21-ம் நிதியாண்டு முதல் 2022-23-ம் நிதியாண்டு வரை, அரசு மின் கொள்முதல் சந்தை மூலம் கொள்முதல் தொடர்ச்சியான வளர்ச்சியைக் காட்டியுள்ளது.
- 2020-21-ம் நிதியாண்டில், இது மொத்தம் 477 கோடி ரூபாய் மின் கொள்முதலுக்கு வழிவகுத்தது, இது நடப்பு நிதியாண்டில் கணிசமாக அதிகரித்து 28,665 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது 2020-21-ம் நிதியாண்டில் 0.49 சதவீதத்திலிருந்து 2023-24-ம் நிதியாண்டில் (2023 அக்டோபர் 15 வரை) 72 சதவீதமாக அதிகரித்துள்ளது.
- 2023, அக்டோபர் 15 நிலவரப்படி, நிலக்கரி அமைச்சகம் நடப்பு ஆண்டிற்கான அரசு மின் கொள்முதல் இலக்கைக் கடந்து, மொத்த கொள்முதலான ரூ.39,607 கோடியில் ரூ.28,665 கோடியை எட்டியுள்ளது.
- நிலக்கரி அமைச்சகம் மற்றும் சிங்கரேணி நிலக்கரி நிறுவனம் ஆகியவை முறையே அனைத்து அமைச்சகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிடையே ஜி.இ.எம் மூலம் மின்-கொள்முதலில் முன்னிலை வகிக்கின்றன.
- 2023-24-ம் நிதியாண்டில், நிலக்கரி அமைச்சகம் 1012 மில்லியன் டன் நிலக்கரியை உற்பத்தி செய்து நுகர்வோருக்கு அனுப்ப இலக்கு நிர்ணயித்துள்ளது.
- 2023 அக்டோபர் 17 ஆம் தேதி நிலவரப்படி 500 மில்லியன் டன் நிலக்கரியை அமைச்சகத்தால் அனுப்ப முடிந்தது மழைக்காலத்துக்கு இடையிலும் 200 நாட்களில் 500 மில்லியன் டன் நிலக்கரியை அனுப்பியுள்ளது.
- நிதியாண்டின் இரண்டாவது அரையாண்டில், உற்பத்தி மற்றும் அனுப்புதல் விகிதம் பொதுவாக ஆண்டின் முதல் அரையாண்டை விட அதிகமாக இருக்கும். எனவே, இந்த ஆண்டு நிலக்கரி ஏற்றுமதி ஒரு பில்லியன் டன்னைக் கடந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- கடந்த நிதியாண்டில், 2022, நவம்பர் 9 நிலவரப்படி, 500 மில்லியன் டன் நிலக்கரி அனுப்பும் மைல்கல்லை எட்டியுள்ளது. நடப்பாண்டில், 23 நாட்களுக்கு முன்பே, 500 மில்லியன் டன் ஏற்றுமதி என்ற இலக்கை எட்டியுள்ளது.
- 500 மில்லியன் டன் நிலக்கரி ஏற்றுமதியில், 416.57 மில்லியன் டன் மின்துறைக்கும், 84.77 மில்லியன் டன் ஒழுங்குமுறை அல்லாத துறைக்கும் அனுப்பப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- மின் துறைக்கு நிலக்கரி ஏற்றுமதி ஆண்டுக்கு ஆண்டு 7.27 சதவீதமும், ஒழுங்குமுறைப்படுத்தப்படாத துறைகளுக்கு 38.02 சதவீதமும் அதிகரிக்கிறது. 2023 மார்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி 893.19 மில்லியன் டன் நிலக்கரி அனுப்பப்பட்டுள்ளது.
- நிலக்கரி அமைச்சகத்தின் இந்த வரலாற்று சாதனைக்கு இந்திய நிலக்கரி நிறுவனம், சிங்கரேணி நிலக்கரி நிறுவனம், மற்றும் கேப்டிவ் / கமர்ஷியல் சுரங்கங்கள் அனைத்தும் பங்களித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
- மகாராஷ்டிராவில் 511 பிரமோத் மகாஜன் கிராமிய திறன் மேம்பாட்டு மையங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார்.
- மகாராஷ்டிராவின் 34 கிராமப்புற மாவட்டங்களில் நிறுவப்பட்டுள்ள இந்த மையங்கள் கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதற்காக பல்வேறு துறைகளில் திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டங்களை நடத்தும்.
- கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதற்காக கிராமிய திறன் மேம்பாட்டு மையங்கள் பல்வேறு துறைகளில் அதற்கானப் பயிற்சிகளை நடத்தும்.
- ஒவ்வொரு மையமும் குறைந்தது இரண்டு தொழிற்கல்வி படிப்புகளில் சுமார் 100 இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கும். இப்பயிற்சியை தேசிய திறன் மேம்பாட்டு கவுன்சிலின் கீழ் உள்ள தொழில் கூட்டாளிகள் மற்றும் முகமைகள் வழங்கும்.
- இந்த மையங்களை நிறுவுவதன் மூலம் இப்பகுதி மிகவும் திறமையான மனிதவளத்தை வளர்ப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைய உதவும்.