Type Here to Get Search Results !

4th JULY 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


4th JULY 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

துலுக்கர்பட்டி அகழாய்வில் தமிழி எழுத்து ஓடுகள்
  • துலுக்கர்பட்டி கிராமத்தில், 36 ஏக்கரில், தொல்லியல் மேடு உள்ளது. இந்தாண்டு அங்கு, இரண்டாம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கின. இதில், 'புலி' என்ற எழுத்துகள் பொறிக்கப்பட்ட, கருப்பு - சிவப்பு நிற பானையோடு கண்டெடுக்கப்பட்டது. 
  • இந்நிலையில், மேலும், மூன்று பானையோடுகளில் தமிழி எழுத்து பொறிப்புகள் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இது, தொடர்ச்சியற்ற உடைந்த பகுதிகளாக உள்ளன. தற்போது கிடைத்துள்ள பானை ஓடுகளில், 'திஈய, திச, குவிர(ன்)' ஆகிய தமிழி எழுத்துப் பொறிப்புகள் உள்ளன. 
23வது ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு 
  • இந்தியா, ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் உட்பட 9 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) சுழற்சி அடிப்படையிலான தலைமைப் பொறுப்பை இந்தியா தற்போது ஏற்றுள்ளது. 
  • இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் 23வது ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு வீடியோ கான்பரன்சிங் மூலம் நேற்று நடந்தது. 
  • இதில் சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாமிடிர் புடின், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உள்ளிட்டோர் வீடியோ கான்பரன்சிங் மூலம் இணைந்தனர்.
தெற்காசிய கால்பந்து - இந்திய அணி சாம்பியன்
  • தெற்காசிய கால்பந்து தொடரின் 14வது சீசன் பெங்களூருவில் நடந்தது. 8 அணிகள் மோதின. பாகிஸ்தான், நேபாளம் உள்ளிட்ட 4 அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறின. லெபனான், வங்கதேச அணிகள் அரையிறுதியுடன் திரும்பின. 
  • பெங்களூரு கன்டீரவா மைதானத்தில் நடந்த பைனலில் உலகத் தரவரிசையில் 100 வது இடத்திலுள்ள இந்திய அணி, 141 வது இடத்திலுள்ள குவைத்தை எதிர்கொண்டது. 
  • முடிவில் போட்டி 1-1 என சமனில் முடிந்தது. இதனால் ஆட்டம் 'பெனால்டி ஷூட் அவுட்டுக்கு' சென்றது. இந்திய அணி 5-4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டது.
  • தெற்காசிய கால்பந்து தொடரில் இந்திய அணி 9வது முறையாக (1993, 1997, 1999, 2005, 2009, 2011, 2015, 2021, 2023) சாம்பியன் ஆனது.
இந்திய கிரிக்கெட் அணி தேர்வுக்குழு தலைவரானார் அஜித் அகார்கர்
  • இந்திய கிரிக்கெட் அணி தேர்வுக்குழுத் தலைவராக இருந்தவர் சேட்டன் சர்மா. சர்ச்சைக்குரிய முறையில் பேசி பதவியை பறிகொடுத்தார். 
  • நிரந்தர தலைவரை தேர்வு செய்யும் பணியில் இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) இறங்கியது. இந்நிலையில், தேர்வுக்குழு தலைவராக இந்திய முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் அகார்கர் தேர்வானார். அகார்கர் 191 ஒரு நாள் (288 விக்.,), 26 டெஸ்ட் (58), 4 'டி-20' (3) போட்டிகளில் விளையாடி உள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel