24th JULY 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
ஜூனியர் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு 2-வது இடம்
- கொரியாவில் உள்ள சாங்வான் நகரில் ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வந்தது. இதன் கடைசி நாளான ஆடவருக்கான 50 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் கமல்ஜீத் 544 புள்ளிகள் குவித்து தங்கப் பதக்கம் வென்றார்.
- உஸ்பெகிஸ்தானின் வெனியமின் நிகிடின் 542 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும், கொரியாவின் கிம் தமின் 541 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.
- 50 மீட்டர் பிஸ்டல் ஆடவருக்கான அணிகள் பிரிவில் கமல்ஜீத், அன்கைத் தோமர்,சந்தீப் பிஷ்னோய் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி 1,617 புள்ளிகள் குவித்து தங்கப் பதக்கம் வென்றது.
- உஸ்பெகிஸ் தான் அணி 1,613 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும், கொரியா அணி 1,600 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கமும் பெற்றன. மகளிருக்கான 50 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் டியானா 519 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
- இந்த தொடரை இந்திய அணி 6 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கலம் என 17 பதக்கங்கள் பெற்று 2-வது இடத்துடன் நிறைவு செய்தது. சீனா 12 தங்கம் உட்பட 28 பதக்கங்கள் பெற்று முதலிடம் பிடித்தது.
- கடந்த 2022-23ம் ஆண்டுக்கான வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை, 8.15 சதவீதமாக வழங்க மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
- மத்திய அரசின் இந்த உத்தரவையடுத்து, இ.பி.எப்.ஓ., எனப்படும் பணியாளர் வருங்கால வைப்புநிதி ஆணையம், தனது 6 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்களின் 2022-23ம் ஆண்டுக்கான வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை 8.15 சதவீதமாக உயர்த்தி வழங்கிட தனது அனைத்து அலுவலகங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.
- நடப்பாண்டு மார்ச் மாதத் தொடக்கத்தில் இந்த வட்டி விகிதத்திற்கு நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
- இதைத் தொடர்ந்து, சந்தாதாரர்களின் கணக்குகளில் உயத்திய வட்டி விகிதத்தை வரவு வைக்கும் செயல்முறைகளை, இ.பி.எப்.ஓ., அலுவலகங்கள் துவக்க உள்ளன.
- கடந்த மார்ச் 2022ல், 2021-22ம் ஆண்டு வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை, முந்தைய ஆண்டான 2020-21ல் வழங்கப்பட்ட 8.50 சதவீதத்தில் இருந்து 8.10 சதவீதமாக குறைத்து வழங்கியது குறிப்பிடத்தக்கது.
- ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனரும், டெஸ்லா கார் நிறுவன தலைமை செயல் அதிகாரியும், உலக பெரும் பணக்காரர்களில் ஒருவருமாக இருப்பவர் எலன் மஸ்க்.
- இவர் கடந்த ஆண்டு முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான டிவிட்டர் நிறுவனத்தை 3.61 லட்சம் கோடி ரூபாய்க்கு வாங்கினார். டிவிட்டர் நிறுவனத்தை வாங்கியது முதலே நிர்வாக சீர்திருத்தம் என்ற பெயரில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வந்தார்.
- ஆயிரக்கணக்கான உயரதிகாரிகள், ஊழியர்களை பணி நீக்கம் செய்து, பின்பு சிலரை மீண்டும் பணியில் சேர்த்துக் கொண்டார். அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்குகளை குறிக்கும் ப்ளூ டிக்குக்கு சந்தா செலுத்துவதை கட்டாயமாக்கினார். டிவிட்டர் லோகோவையும் மாற்றினார்.
- டிவிட்டரில் பதிவிடும் கணக்குகள், டிவிட்டர் பக்கத்தை பயன்படுத்துவோர் ஒருநாளைக்கு எத்தனை பதிவுகளை படிக்கலாம் என்பது உள்ளிட்ட பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வௌியிட்டு வந்தார்.
- தற்போது டிவிட்டர் நிறுவனத்தின் பெயர் மற்றும் லோகோவை எலான் மஸ்க் 'X' என்று மாற்றினார்.