Type Here to Get Search Results !

1st JULY 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


1st JULY 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

ஜூன் மாதத்திற்கான ஜிஎஸ்டி வசூல் ரூ.1.61 லட்சம் கோடி
  • நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பை அமல்படுத்தும் வகையில், கடந்த 2017ல் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கொண்டு வரப்பட்டது. 
  • அதிலிருந்து, ஒவ்வொரு மாத ஜிஎஸ்டி வசூல் குறித்து ஒன்றிய நிதி அமைச்சகம் தகவல் வெளியிட்டு வருகிறது. 'ஜூன் மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சத்து 61 ஆயிரத்து 497 கோடி.
  • இதில் ஒன்றிய ஜிஎஸ்டி ரூ.31,013 கோடி. மாநில ஜிஎஸ்டி வசூல் ரூ.38,292 கோடி. ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.80,292 கோடி. செஸ் வரி ரூ.11,900 கோடி. கடந்த ஆண்டு இதே மாதத்தை விட இம்முறை 12 சதவீதம் அதிகமாக வரி வசூலாகி உள்ளது. 
  • ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதில் இருந்து 4வது முறையாக வசூல் ரூ.1.60 லட்சம் கோடியை தாண்டி உள்ளது' என கூறப்பட்டுள்ளது. இதுவரை அதிகபட்சமாக கடந்த ஏப்ரல் மாதம் ரூ.1.87 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலானது. கடந்த மே மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.57 லட்சம் கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா பணிக்காலம் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு
  • மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் பதவியில் 2018, அக்டோபர் 10-ம் தேதி மூத்த வழக்கறிஞர் துஷார் மேத்தா நியமிக்கப்பட்டார். இதையடுத்து இவரது பதவிக்காலம் 2 முறை நீட்டிக்கப்பட்டது.
  • சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவுக்கு, மேலும் 3 ஆண்டுகளுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படுகிறது.
  • இதேபோல், உச்ச நீதிமன்றத்துக்கான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்களான விக்ரம்ஜித் பானர்ஜி, கே.எம்.நடராஜ், பல்பீர் சிங், எஸ்.வி.ராஜு, என்.வெங்கடராமன், ஐஸ்வர்யா பட்டி ஆகியோருக்கும் 3 ஆண்டுகளுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படுகிறது. 
மத்தியப் பிரதேசத்தின் ஷாதோலில் அரிவாள் செல் ரத்தசோகை ஒழிப்பு தேசிய இயக்கத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்
  • பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஷாதோலில் அரிவாள் செல் ரத்தசோகை ஒழிப்பு தேசிய இயக்கத்தைத் தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு செல் மரபணு நிலை அட்டைகளை வழங்கினார்.
  • இந்த இயக்கம், அரிவாள் செல் நோயால் ஏற்படும் சுகாதார சவால்களை, குறிப்பாகப் பழங்குடியின மக்கள் எதிர்கொள்ளும் நோய் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதை நோக்கமாகக் கொண்டதாகும். 
  • 2047 ஆம் ஆண்டுக்குள் இந்த நோயை முற்றிலுமாக ஒழிப்பதே அரசின் முக்கிய நோக்கமாகும். 2023 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் இந்த நோய் ஒழிப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டது. 
  • குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், மேற்கு வங்கம், ஒடிசா, தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா, அஸ்ஸாம், உத்தரப்பிரதேசம், கேரளா, பீகார், உத்தராகண்ட் ஆகிய அதிக கவனம் செலுத்தப்பட வேண்டிய 17 மாநிங்களைச் சேர்ந்த 278 மாவட்டங்களில் இந்த இயக்கம் செயல்படுத்தப்படும். 
  • மத்தியப் பிரதேசத்தில் சுமார் 3.57 கோடி ஆயுஷ்மான் பாரத் பிரதமர் ஜன் ஆரோக்கிய யோஜனா அட்டைகளின் விநியோகத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியின் போது, 16-ம் நூற்றாண்டின் மத்தியில் கோண்ட்வானாவை ஆட்சி செய்த ராணி துர்காவதியை பிரதமர் கௌரவித்தார்.
பஞ்சாப், ஹரியானா, உ.பி. மற்றும் தில்லி மாநிலங்களில் பயிர்க்கழிவுகளைக் கையாளவதற்கான பயிர்க்கழிவு மேலாண்மை வழிகாட்டுதல்களில் திருத்தம்
  • பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், தில்லி ஆகிய மாநிலங்களில் உற்பத்தி செய்யப்படும் பயிர்க்கழிவுகளை சிறப்பாகக் கையாள பயிர்க்கழிவு மேலாண்மை வழிகாட்டுதல்களை அரசு திருத்தியமைத்துள்ளது.
  • திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, விவசாயிகளுக்கும், வைக்கோலைப் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கும் இடையே இரு தரப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும். பயிர்கழிவுகளை மறு சுழற்சி செய்ய உதவும் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை வாங்க அரசு நிதியுதவி அளிக்கும்.
  • திட்ட மதிப்பீட்டில் மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து 65% நிதியுதவி வழங்கும். மறுசுழற்சி செய்யப்படும் மூலப்பொருட்களின் முதன்மை நுகர்வோராக செயல்படும் நிறுவனங்கள் 25% நிதியளிக்கும்.
  • இந்த முயற்சியால் ஏற்படும் நன்மைகள்;
  • மூன்று ஆண்டு காலத்தில், வயல்வெளிகளில் எரிக்கப்பட வேண்டிய 1.5 மில்லியன் மெட்ரிக் டன் பயிர்க்கழிவுகள் சேகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • மரக்கன்றுகளை எரிப்பதால் ஏற்படும் காற்று மாசு கணிசமாகக் குறையும்.
  • இதன் மூலம் கிடைக்கும் வைக்கோல் மின்சாரம், எத்தனால், உயிரி வாயு உற்பத்தி போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது.
  • இதனால் உயிரி எரிபொருள் மற்றும் ஆற்றல் துறைகளில் புதிய முதலீடுகள் ஏற்படும்.
இந்தியா – பிரான்ஸ் இணைந்து விசாகப்பட்டினத்தில் கடல்சார் கூட்டுப் பயிற்சி
  • வங்காள விரிகுடாவில் இந்தியக் கடற்படைக் கப்பல்களான ஐஎன்எஸ் ராணா, ஐஎன்எஸ் சுமேதா ஆகியவை 2023 ஜூன் 30-ம் தேதியன்று பிரான்ஸ் கடற்படைக் கப்பலான FS Surcouf உடன் இணைந்து கடல்சார் கூட்டுப் பயிற்சி மேற்கொண்டன. 
  • ஜூன் 26-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை விசாகப்பட்டினத்தில் இருந்த Surcouf கப்பல், இந்தியக் கடற்படைக் கப்பல்களுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளில் பங்கேற்றது.
  • விசாகப்பட்டினத்திலிருந்து புறப்படும்போது, FS Surcouf கப்பலானது இந்தியக் கடற்படை கப்பல்களான ராணா மற்றும் சுமேதாவுடன் இணைந்து போர் விமானங்களுக்கு எதிரான வான் பாதுகாப்பு மற்றும் கிராஸ் டெக் ஹெலிகாப்டர் செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டது. இந்தியக் கடற்படைக்கும் பிரான்ஸ் கடற்படைக்கும் இடையேயுள்ள வலுவான நட்பை இந்தப் பயிற்சி குறிக்கிறது.
  • இந்த ஆண்டின் தொடக்கத்தில் மார்ச் 10,11 ஆகிய தேதிகளில், FS La Fayette என்ற போர்க்கப்பல் ஐஎன்எஸ் சஹ்யாத்ரியுடன் இணைந்து கடல்சார் கூட்டுப் பயிற்சி மேற்கொண்டது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel