Type Here to Get Search Results !

21st May 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


21st May 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

தமிழகத்தில்  '3HP' எனும் காசநோய் சிகிச்சைத் திட்டம் தொடக்கம்
  • நெஞ்சக காசநோய் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு சளி, இருமல் மூலம் பரவக்கூடிய நோயாகும். எனவே, காசநோயாளிகள் இருக்கும் இல்லத்தில் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கு முன்னெச்சரிக்கை மருந்து கொடுக்கும் 3HP எனும் சிகிச்சைத் திட்டம் தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. 
  • சென்னை தனியார் ஓட்டலில் நடைபெற்ற காசநோய் ஒழிப்பு உச்சிமாநாட்டில் மருத்துவத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் இதை தொடங்கி வைத்தார்.
  • இந்த காசநோய் சிலரில் சளி இருமல் என அறிகுறிகள் தென்படாவிட்டாலும், நோய் ஏற்படுத்தும் பாக்டீரியா உடலில் இருப்பது பரிசோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டது.
  • இதனால் காசநோயாளியின் வீடுகளில் இருக்கும் உறுப்பினர்களுக்கு இனி முன்னெச்சரிக்கை மருத்துவ சிகிச்சை மாநிலம் முழுவதும் வழங்கப்படுகிறது. 3HP எனப்படும் மருந்தை வாரத்துக்கு ஒரு முறை என மூன்று மாதங்களுக்கு ஒருவர் உட்கொள்ள வேண்டும்.
  • 2019ம் ஆண்டு 1,08,344 லட்சம் பேர், 2020-ல் 68,922 பேர், 2021ம் ஆண்டு 82,680 பேர், 2022ம் ஆண்டு 91592 பேருக்கு காசநோய் கண்டறியப்பட்டது. 
  • ஆறு மாத கால சிகிச்சைக்கு பிறகு காசநோயாளிகள் குணமடைந்து விடுவார்கள். 2019ல் 91,405 பேர், 2020ல் 57,391 பேர், 2021 68,810 பேர், 2022ல் 50,592 பேர் குணமாகி உள்ளனர்.
துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித் துறை அமைச்சகம், கடல்சார் தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதற்கான சிந்தனைக் கூட்டம் 
  • துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் (MoPSW) 2 நாள் சிந்தனைக் கூட்டத்தை கேரளாவின் மூணாறில் தொடங்கியுள்ளது. 
  • மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் தலைமையேற்று கூட்டத்தைத் தொடங்கி வைத்தார். 
  • துறைக்கான இணை அமைச்சர் திரு ஸ்ரீபத் நாயக், திரு. சாந்தனு தாக்கூர், துறை செயலாளர் திரு சுதான்ஷ் பந்த் மற்றும் அனைத்து முக்கிய துறைமுகங்களின் தலைவர்கள், அமைச்சகத்தின் பிற நிறுவனங்கள்/பொதுத்துறைத் தலைவர்கள் உள்பட பல மூத்த அதிகாரிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
  • சிந்தனைக் கூட்டத்தின் முதல் நாளில், முந்தைய கூட்டங்களில் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகள் மற்றும் சாதனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. 
  • திரு சர்பானந்தா சோனோவால் தலைமையில், துறைமுகங்களின் புதுமையான யோசனைகள் குறித்து பெரிய துறைமுகங்களின் தலைமை அதிகாரிகளுடன் ஒரு பிரத்யேக அமர்வு கவனம் செலுத்தியது. 
  • மற்றைய அமர்வில் கலங்கரை விளக்க சுற்றுலா மற்றும் கப்பல் கட்டுமானத்தில் உலகளாவிய தலைமையாக இந்தியாவை உருவாக்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது. இது தவிர, பல்வேறு நிறுவனங்களின் பங்கேற்பாளர்கள் தங்கள் நுட்பமான ஆலோசனைகளைப் பகிர்ந்து கொண்டனர்.
  • இரண்டாம் நாள் கூட்டத்தில், முக்கிய துறைமுகங்கள் மூலம் சரக்கு கையாளுதல், துறைமுக அழைப்பு நடைமுறைகளை மேம்படுத்துதல் டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் தரப்படுத்துதல், உள்நாட்டு நீர்வழிகள் மற்றும் கடலோரக் கப்பல் போக்குவரத்தை மேம்படுத்துதல் போன்றவற்றில் கவனம் செலுத்தி விவாதிக்கப்பட்டது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel