Type Here to Get Search Results !

8th April 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


8th April 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

அமெரிக்க தடகள போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார் தேஜஸ்வின் சங்கர்
  • அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழக வளாகத்தில் ஜிம் கிளிக் ஷூட்அவுட் தடகள போட்டி நடைபெற்றது. அமெரிக்க தடகள சம்மேளனத்தின் சார்பில் நடத்தப்பட்ட இந்த போட்டியில் இந்திய வீரர்தேஜஸ்வின் சங்கர், டெகத்லானில் பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
  • டெகத்லான் என்பது உயரம் தாண்டுதல், 400 மீட்டர் ஓட்டம், 100 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், 110 மீட்டர்தடைதாண்டும் ஓட்டம், வட்டு எறிதல், போல் வால்ட், ஈட்டி எறிதல், 1500 மீட்டர் ஓட்டம் என 10 வகையிலான போட்டியைஉள்ளடக்கியது. 
  • இதில் தேஜஸ்வின் சங்கர் ஒட்டுமொத்தமாக 7,648 புள்ளிகளை குவித்தார். இது 2011-ம் ஆண்டு பாரதிந்தர் சிங்கின் தேசிய சாதனையான 7,658 -ஐ விட 10 புள்ளிகள் குறைவாகும்.
1260 கோடியில் சென்னை விமான முனையம் - பிரதமர் திறந்து வைத்தார்
  • சென்னை விமான நிலையத்தில் ரூ.1,260 கோடியில், 1.36 லட்சம் சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ள, புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடத்தின் முதல் பகுதியை பிரதமர் மோடி திறந்துவைத்தார். 
  • உலகத் தரத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த முனையம் மூலம், சென்னை விமான நிலையத்தின் பயணிகள் கையாளும் திறன் 2.3 கோடியில் இருந்து, 3 கோடியாக உயர்ந்துள்ளது. 
  • விமான நிலையத்தில் உள்ள வசதிகளை, அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் விமான நிலைய அதிகாரிகள் பிரதமருக்கு விளக்கினர். இந்த நிகழ்வில், ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் பங்கேற்றனர்.
  • சென்னை விமான நிலையத்தில், தமிழகத்தின் முக்கிய கோயில்கள், கலைகளின் வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தஞ்சை ஓவியங்கள், காஞ்சிபுரம் சேலைகள் உள்ளிட்டவையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 
  • இவற்றையும் பிரதமர் மோடி பார்வையிட்டார். பல்லாவரத்தில் உள்ள அல்ஸ்டாம் கிரிக்கெட் மைதானத்தில் மாலையில் நடந்த விழாவிலும் பிரதமர் மோடி பங்கேற்றார்.
  • மதுரை தல்லாகுளம் - செட்டிகுளம் இடையே ரூ.851 கோடி மதிப்பில் 7.3 கி.மீ. தொலைவிலான 4 வழி தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம், ரூ.528 கோடியில் மதுரை நத்தம் - துவரங்குறிச்சி இடையிலான 24 கி.மீ. நெடுஞ்சாலைத் திட்டங்களை தொடங்கி வைத்தார். 
  • மேலும், ரூ.1,077 கோடியில் திருமங்கலம் - வடுகபட்டி இடையிலான 36 கி.மீ. தொலைவு நெடுஞ்சாலை, ரூ.1,328 கோடியில் வடுகபட்டி - தெற்குவெங்கநல்லூர் இடையிலான 35.6 கி.மீ. நெடுஞ்சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
  • திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி இடையே ரூ.294 கோடியில் அமைக்கப்பட்டுள்ள அகல ரயில் பாதை, தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் சேவையையும் தொடங்கி வைத்தார்.
முதல் முறையாக சுகோய் போர் விமானத்தில் பறந்தார் குடியரசுத் தலைவர்
  • அசாம் மாநிலத்துக்கு 3 நாள் சுற்றுப் பயணமாக சென்றுள்ள குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, தேஸ்பூரில் உள்ள விமானப் படை தளத்துக்கு சென்றார்.
  • விமானப்படை வீரர்கள் அளித்த அணிவகுப்பு மரியா தையை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக் கொண்டார். அதன்பின் சுகோய் ரக போர் விமானத்தில் அவர் முதல் முறையாக பறந்தார். அந்த விமானத்தை, குரூப் கேப்டன் நவீன் குமார் இயக் கினார். 
  • அந்த விமானம் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3 கி.மீ உயரத்திலும், மணிக்கு சுமார் 800 கி.மீ வேகத்திலும் பறந்தது. சுகோய் போர் விமானத்தில் சுமார் அரை மணி நேரம் பயணம் செய்த குடியரசுத் தலைவர் பிரம்மபுத்ரா முதல் தேஸ்பூர் வரையில் இமயமலைப் பகுதிகளை பார்வையிட்டு பின் விமானப்படை தளத்துக்கு திரும்பினார்.
  • இதன் மூலம் போர் விமானத்தில் பறந்த 3வது இந்திய குடியரசுத் தலைவர் மற்றும் 2வது பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையை திரவுபதி முர்மு பெற்றுள்ளார். முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் கடந்த 2009-ம் ஆண்டு புனே விமானப்படை தளத்தில் இருந்து சுகோய் விமானத்தில் பறந்தார்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ரூ. 11,300 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார்
  • தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பரேட் மைதானத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி ரூ. 11,300 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதுடன், முடிவுற்ற திட்டங்களையும் தொடங்கி வைத்தார். 
  • இந்தத் திட்டங்களில் பிபிநகரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல், ஹைதராபாத்தில் 5 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள், செகந்திராபாத் ரயில் நிலையத்தின் மறு சீரமைப்புப் பணிகள் ஆகியவை முக்கியமானவையாகும். 
  • ரயில்வே சார்ந்த மற்ற வளர்ச்சித்திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். முன்னதாக இன்று காலை ஹைதராபாத்தில் உள்ள செகந்திராபாத் ரயில் நிலையத்தில், செகந்திராபாத்-திருப்பதி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பிரதமர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel