Type Here to Get Search Results !

27th April 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


27th April 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு புதிய விதிகள் - தமிழக அரசு வெளியீடு
  • தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான புதிய விதிகள் 2023 என்ற பெயரில் புதிய விதிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
  • அந்த புதிய விதிகளில் மக்கள் தொகை அடிப்படையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தேர்வு செய்ய வேண்டிய கவுன்சிலர்களின் எண்ணிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
  • அதன்படி, 80 லட்சத்திற்கும் அதிகமாக மக்கள் தொகை உள்ள மாநகராட்சியில் 230 கவுன்சிலர்கள் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 60 முதல் 80 லட்சம் வரை மக்கள் தொகை உள்ள மாநகராட்சிகளில் 200 கவுன்சிலர்கள் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 2 லட்சத்து 25 ஆயிரத்துக்கும் மேல் மக்கள் தொகை உள்ள நகராட்சிகளில் 52 கவுன்சிலர்களும், 30 ஆயிரத்திற்கும் குறைவாக உள்ள நகராட்சிகளில் 22 கவுன்சர்களும் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மேலும், 25 ஆயிரத்துக்கும் மேல் மக்கள் தொகை உள்ள பேரூராட்சிகளில் 21 கவுன்சிலர்களும், பத்தாயிரம் முதல் 15 ஆயிரம் வரை மக்கள் தொகை உள்ள பேரூராட்சிகளில் 12 கவுன்சிலர்கள் வரை இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண்ணை இயந்திரத் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை மத்திய வேளாண் அமைச்சர் தொடங்கிவைத்தார்
  • இந்திய தொழில்நுட்பக் கூட்டமைப்பு, டிராக்டர் மற்றும் இயந்திர சங்கம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்த பண்ணை இயந்திரத் தொழில்நுட்ப உச்சிமாநாட்டை மத்திய வேளாண் அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் தொடங்கி வைத்தார். 
  • நிகழ்ச்சியில் பேசிய திரு தோமர் 85 சதவீத சிறு விவசாயிகள் இயந்திரம் மற்றும் தொழில்நுட்பங்களால் பயனடைவதாகக் கூறினார். இந்த நோக்கத்தின் அடிப்படையிலேயே மத்திய அரசு தொடர்ந்து பணியாற்றி வருவதாகக் குறிப்பிட்ட அவர், கடந்த 2014-15-ம் நிதியாண்டு முதல் 2022-23-ம் நிதியாண்டு வரையிலான காலக்கட்டத்தில் ரூ.6,120 கோடி நிதியை மாநிலங்களுக்கு விடுவித்திருப்பதாகக் கூறினார். 
  • இந்த நிதி வேளாண்மை இயந்திர மயமாக்கல் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான பயிற்சி வேளாண் பரிசோதனை மையம், உயர் தொழில்நுட்ப மையங்கள் மற்றும் பண்ணை இயந்திர வங்கிகள் ஆகியவற்றுக்கு செலவிடப்படுகிறது.
இந்தியா – இங்கிலாந்து கூட்டு ராணுவப் பயிற்சி “அஜயா வாரியர் - 2023”
  • இந்தியா – இங்கிலாந்து இடையே 7-வது கூட்டு ராணுவப் பயிற்சி “அஜயா வாரியர்-2023” இங்கிலாந்தின் சாலிஸ்பரி சமவெளியில் ஏப்ரல் 27 முதல் மே 11,2023 வரை நடைபெறுகிறது. 
  • இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அஜயா வாரியர் கூட்டு ராணுவப் பயிற்சி இங்கிலாந்திலும், இந்தியாவிலும் நடைபெறுவது வழக்கமாகும். கடந்த முறை உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள சௌபாட்டியாவில் 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்றது.
  • இப்பயிற்சியில் இங்கிலாந்தைச் சேர்ந்த 2 ராயல் கூர்கா ஃரைபிள் பிரிவைச் சேர்ந்த ராணுவ வீரர்களும், பீகார் ரெஜிமெண்ட் பிரிவைச் சேர்ந்த இந்திய ராணுவ வீரர்களும் பங்கேற்கின்றனர். 
  • இதற்காக இந்திய ராணுவ வீரர்கள் குழு, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களுடன் இந்திய விமானப்படையின் சி-17 விமானம் மூலம் ஏப்ரல் 26, 2023 அன்று பிரிஸ் நார்ட்டான் சென்றடைந்தனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel