Type Here to Get Search Results !

8th March 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


8th March 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

பிரதமர் மோடி முன்னிலையில் 2-வது முறையாக திரிபுரா முதல்வராக பதவியேற்றார் மாணிக் சாஹா
  • வடகிழக்கு மாநிலமான திரிபுரா இடதுசாரிகளின் கோட்டையாக கருதப்பட்டது. அங்கு கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் முறையாக பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. 
  • இந்நிலையில், கடந்த 2-ம் தேதி வெளியான தேர்தல் முடிவுகளில் பாஜக 32 இடங்களில் வெற்றி பெற்றது. அதன் கூட்டணி கட்சியான ஐபிஎப்டி ஒரு இடத்தில் வென்றது. 
  • திப்ரா மோதா கட்சி பிரத்யோத் கிஷோர் உட்பட 14 இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸ் - இடதுசாரி கூட்டணி 14 இடங்களில் வென்றது.
  • இந்நிலையில், பாஜக எம்எல்ஏ.க்கள் கூட்டம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது. அதில், மாணிக் சாஹா (69) ஒருமனதாக மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 
  • அதன்படி, திரிபுராவின் அகர்தலாவில் நேற்று காலை 11 மணிக்கு பதவியேற்பு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. முதல்வராக 2-வது முறை மாணிக் சாஹா பதவியேற்றார். அவருடன் பெண் ஒருவர் உட்பட 8 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். அனைவருக்கும் ஆளுநர் சத்யதேவ் நாராயண் அரயா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
செயலிழந்த செயற்கைக்கோளை மீட்கும் முயற்சியில் இஸ்ரோ வெற்றி
  • இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையம், ஐரோப்பிய நாடான பிரான்ஸ் விண்வெளி ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து 'மேகா டிராபிக்யூஸ் -- 1' என்ற செயற்கைக்கோளை 2011ல் விண்ணில் செலுத்தியது.
  • பூமியின் பருவநிலை மாற்றங்கள் குறித்து ஆராய அனுப்பப்பபட்ட இச்செயற்கைக்கோளின் ஆயுட்காலம் மூன்று ஆண்டுகள் என்று சொல்லப்பட்ட நிலையில், 10 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கியது.
  • இச்செயற்கைக்கோள் வாயிலாக, காலநிலை மாற்றங்கள் தொடர்பான புகைப்படங்களை உடனுக்குடன் அனுப்பி வந்தது. இந்நிலையில் இச்செயற்கைக்கோளின் பணிக்காலம் நிறைவடைந்ததால், இதை செயலிழக்க செய்ய இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்தனர்.
  • இதன்படி ஏற்கனவே திட்டமிட்டப்படி, மிகவும் சவாலான பணியான, செயற்கைக்கோளை பூமியின் வளிமண்டலத்துக்கு கொண்டு வந்ததுடன், மக்கள் நடமாட்டம் இல்லாத பசிபிக் பெருங்கடல் பகுதியில் வெற்றிகரமாக இஸ்ரோ விஞ்ஞானிகள் அழித்தனர்.
இந்தியாவில் முதல் வெளிநாட்டு பல்கலைக்கழகம் - ஒப்பந்தம் கையெழுத்தானது
  • சுதந்திரம் அடைந்த பிறகு முதன்முறையாக இந்தியாவில் வெளிநாட்டு பல்கலைக்கழகம் 2024ம் ஆண்டு முதல் செயல்பட உள்ளது. இது பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டமாகும். மத்திய பட்ஜெட்டில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
  • இந்நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆஸ்திரேலியா பிரதமர் மற்றும் குஜராத் மாநில ஆளுநர் மற்றும் முதல்வர் முன்னிலையில் டைகின் பல்கலைக்கழகம் நிறுவுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டைகின் பல்கலைக்கழகம் (Deakin University) குஜராத் மாநிலத்தில் துவங்கப்பட உள்ளது. எம்பிஏ, எம்எஸ் என்ற இரண்டு பட்டப்படிப்புகள் துவங்கப்பட உள்ளன. முழு நேரமாக இரண்டு ஆண்டுகளும், பகுதி நேரமாக நான்கு ஆண்டுகளும் பயிலலாம்.
  • 2024 ஆம் ஆண்டு மே மாதம் முதல் வகுப்புகளை துவங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. வெளிநாடு சென்று பயிலும் இந்திய மாணவர்கள் நம் நாட்டில் படித்து பணிபுரிய வேண்டும் என்ற பிரதமர் மோடியின் கனவு திட்டமாகும். 
  • இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் இது மிகவும் பயனளிக்கும். குஜராத் மாநிலம், அகமதாபாத் கிப்ட் சிட்டியில் இந்த வெளிநாட்டு பல்கலைக்கழகம் அமையவுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel