Type Here to Get Search Results !

27th March 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


27th March 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

அகமதாபாத், திருவனந்தபுரம் உள்பட ஆறு விமான நிலையங்களை இயக்கி இந்திய விமான நிலையங்கள் ஆணையம் ஒப்புதல்
  • அகமதாபாத், ஜெய்ப்பூர், லக்னோ, குவாஹத்தி, திருவனந்தபுரம், மங்களூரு ஆகிய ஆறு விமான நிலையங்களை 50 ஆண்டுகளுக்கு பொதுத்துறை மற்றும் தனியார் கூட்டாண்மையின் கீழ், இயக்கி, பராமரித்து, மேம்படுத்த இந்திய விமான நிலையங்கள் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. 
  • 2020-2021 ஆம் ஆண்டில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஆறு விமான நிலையங்களின் பரிவர்த்தனையின் விதிமுறைகள், நித்தி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி தலைமையிலான அதிகாரமளிக்கப்பட்ட செயலாளர்கள் குழுவால் முடிவு செய்யப்பட்டது.
  • அதிக போட்டியை உறுதி செய்வதற்கும், ஏலதாரர்களுக்கு அதிக நெகிழ்வுத்தன்மையை வழங்குவதற்கும், பின்வரும் விதிமுறைகள் பின்பற்றப்பட்டன. 
  • விமான நிலைய பராமரிப்பில் முன் அனுபவம் தேவை இல்லை, பங்கேற்கும் நிறுவனம் ஏலம் எடுக்கக்கூடிய விமான நிலையங்களின் எண்ணிக்கைக்கு வரம்பு இல்லை, வருவாயைப் பகிர்வதற்குப் பதிலாக ஏல அளவுருவாக ஒரு பயணிக்கான கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.
வேளாண் துறையில் அதிகளவிலான பெண் தொழிலாளர்களின் பங்களிப்பு இருப்பதாக 2021-22 வருடாந்திர தொழிலாளர் படை ஆய்வறிக்கை
  • வேளாண் துறையில் அதிகளவிலான பெண் பணியாளர்களின் பங்களிப்பு இருப்பதாக 2021-22 வருடாந்திர தொழிலாளர் படை ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வேளாண் துறை சார்ந்த பணிகளில் 62.9 சதவீதம் பெண்கள் பணியாற்றுகிறார்கள். 
  • இதே போல் உற்பத்தித் துறையில் பணியாற்றுபவர்களில் 11.2 சதவீதத்தினர் பெண்கள் ஆவர். வணிகம், உணவு விடுதிகளில் பணியாற்றுபவர்களில் 5.9 சதவீதம் பேர் பெண்கள். மற்ற சேவை சார்ந்த துறைகளில் 13.6 சதவீதம் பெண்கள் பணியாற்றுகிறார்கள்.
  • தொழிலாளர் படையில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன், தரமான வேலைவாய்ப்பை உருவாக்கவும், முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 
  • பெண்களுக்கு சமமான வேலைவாய்ப்பை வழங்குவதுடன், பாதுகாப்பான பணிச்சூழலை உருவாக்கவும், தொழிலாளர் சட்டங்களில் பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. 
  • குறிப்பாக மகப்பேறு விடுப்பாக 12 முதல் 26 வாரங்கள் வரை வழங்கப்படுதல், 50 மற்றும் அதற்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் பணியாற்றும் இடத்தில், அவர்களது 3 வயதிற்குட்பட்ட குழந்தைகளை கட்டாயம் பராமரிக்கும் வசதி, போதிய பாதுகாப்பு வசதிகளுடன் இரவு பணிகளில் பெண்களை ஈடுபடுத்துதல் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
  • பெண் பணியாளர்களின் பணி சார்ந்த திறமைகளை மேம்படுத்துவதற்காக மகளிர் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனங்கள், தேசிய மற்றும் மண்டல அளவிலான தொழிற்கல்வி பயிற்சி நிறுவனங்கள் வாயிலாக பயிற்சிகளை மத்திய அரசு வழங்கி வருகிறது.
  • அரசுத் துறைகளில் பெண் பணியாளர்களின் பங்களிப்பு குறித்த 2021-22 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர தொழிலாளர் படை ஆய்வறிக்கையில், 15 வயதிற்கு மேற்பட்டோர் பெண்களின் பங்களிப்பு அதிகபட்சமாக 19. 1 சதவீதத்துடன் ஹரியானா மாநிலம் முதலிடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel