Type Here to Get Search Results !

23rd March 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


23rd March 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

ஆராய்ச்சி வெளியீடுகளில் இந்தியாவுக்கு 4-வது இடம்
  • உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் ஆராய்ச்சி மையங்களில் இந்தியாவும் இடம் பிடித்துள்ளது. ஆனால் ஆராய்ச்சி தொடர்பான அனைத்திலும் இந்த வளர்ச்சி இல்லை என்பது கவலை அளிப்பதாக, ஆராய்ச்சி கட்டுரைகளை கண்காணிக்கும் க்யூஎஸ் தெரிவித்துள்ளது.
  • சர்வதேச அளவில் கடந்த 2017 முதல் 2022 வரையிலான காலத்தில் ஆராய்ச்சி கட்டுரை வெளியீடுகள் சராசரியாக 22% அதிகரித்துள்ளதாக தரவு நுண்ணறிவு நிறுவனமான சைவால் (SciVal) தெரிவித்துள்ளது.
  • இதே காலத்தில் இந்தியாவின் வளர்ச்சி சர்வதேச சராசரியைப்போல 2 மடங்குக்கும் அதிகமாக (54%) அதிகரித்துள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 
  • குறிப்பாக கல்வித் துறையில் முன்னேறிய மேற்கத்திய நாடுகளை விடவும் இந்தியா சிறப்பான முன்னேற்றம் கண்டுள்ளது. ஆராய்ச்சி கட்டுரை வெளியீட்டில் சீனா 45 லட்சத்துடன் முதல் இடத்தில் உள்ளது.
  • இதுபோல அமெரிக்கா (44 லட்சம்) 2-ம் இடத்திலும், பிரிட்டன் (14 லட்சம்) 3ம் இடத்திலும், இந்தியா (13 லட்சம்) 4-ம் இடத்திலும் உள்ளன. இதே வேகத்தில் சென்றால் பல்துறை ஆராய்ச்சி வெளியீடுகளில் பிரிட்டனை பின்னுக்குத் தள்ளி இந்தியா விரைவில் 3-ம் இடத்தைப் பிடித்துவிடும்.
  • இதுபோல 89 லட்சம் மேற்கோள்களை இந்தியா உருவாக்கி உள்ளது. அதேநேரம் வெளியிடப்பட்ட ஆராய்ச்சிகளின் தாக்கத்தைப் பொருத்தவரை, நிதி ஒதுக்குவது மற்றும் ஆதாரங்களை சமர்ப்பிப்பதில் இந்தியா 9-வது இடத்தில் உள்ளது.
  • இந்தியாவின் ஆராய்ச்சிக் கட்டுரைகளில் 52.6% பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்புடையவை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி - இந்திய ஜோடிக்கு வெள்ளிப் பதக்கம்
  • மத்தியபிரதேசத்தின் போபாலில் ஐஎஸ்எஸ்எஃப் பிஸ்டல், ரைபிள் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது.
  • இதன் 2-வது நாளான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் வருண் தோமர், ரிதம் சங்க்வான் ஜோடி தங்கப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் சீனாவின் இயன் வெய், லியு ஜின்யாவோ ஜோடியை எதிர்த்து விளையாடியது.
  • இதில் வருண் தோமர், ரிதம் சங்க்வான் ஜோடி 11-17 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றது. 
  • தொடரின் 2-வது நாளின் முடிவில் சீனா 3 தங்கம், 2 வெண்கலத்துடன் 5 பதக்கங்கள் பெற்று பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்தியா ஒரு தங்கம், ஒரு வெள்ளி, 2 வெண்கலத்துடன் 2-வது இடம் வகிக்கிறது.
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் நிறைவேற்றம்
  • ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. நான்கு மாதங்களுக்குப் பிறகு இந்த மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பினார்.
  • இதையடுத்து, கடந்த மார்ச் 9-ல் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், மீண்டும் மசோதாவை நிறைவேற்றி அனுப்ப முடிவெடுக்கப்பட்டது.
  • அதன்படி, பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இணையவழி சூதாட்டத்தை தடை செய்தல், இணையவழி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துதல் சட்டமசோதாவை தாக்கல் செய்து, அதை மறு ஆய்வு செய்யுமாறு கோரினார். 
  • இறுதியாக, முதல்வர் ஸ்டாலின் சட்டத்தை நிறைவேற்றித் தருமாறு கோரினார். குரல் வாக்கெடுப்பு மூலம், ஒரு மனதாக மசோதா நிறைவேற்றப்பட்டதாக பேரவைத் தலைவர் மு.அப்பாவு அறிவித்தார். 
சென்னை ஐகோர்ட்டிற்கு 3 புதிய நீதிபதிகள் நியமனம் - ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல்
  • சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளின் ஒதுக்கீடு 75. தற்போது 58 நீதிபதிகள் உள்ளனர். இந்நிலையில் உயர் நீதிமன்றத்தில் அதிகாரியாக பணியாற்றி வரும், பி.வடமலையை கூடுதல் நீதிபதியாக நியமனம் செய்து ஜனாதிபதி திரவுபதி முர்மு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளார். 
  • மேலும், ஆந்திர மாநில உயர் நீதிமன்ற நீதிபதி பட்டு தேவானந்த், தெலங்கானா மாநில உயர் நீதிமன்ற நீதிபதி தேவராஜூ நாகார்ஜுன் ஆகியோரை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக மாற்றம் செய்தும் ஜனாதிபதி அறிவிப்பாணை வெளியிட்டுள்ளார்.
  • இதற்கான உத்தரவை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. மூன்று புதிய நீதிபதிகளை நியமனத்தையடுத்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel