1st March 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
நைஜீரிய அதிபா் தோதலில் போலா டினுபு வெற்றி
- நைஜீரியாவில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற அதிபா் தோதலில், லாகோஸ் மாகாண முன்னாள் ஆளுநா் போலா டினுபு வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டாா்.
- மிகக் கடுமையான போட்டி நிலவிய இந்தத் தோதலில் போலாவுடன் அடிகு அபுபக்கா், பீட்டா் ஓபி, ரபிபு வாஙக்வாசோ ஆகியோா் போட்டியிட்டனா்.
- இதில், 36.61 சதவீத வாக்குகளைப் பெற்ற ஆளும் கட்சியைச் சோந்த வேட்பாளரான டினுபு வெற்றி பெற்ாக தோதல் ஆணையம் புதன்கிழமை அறிவித்தது.
- கடந்த பிப்ரவரி மாதத்தில் ஜிஎஸ்டியாக ரூ.1,49,577 கோடி வசூலாகியுள்ளது. முந்தைய ஆண்டை விட இது 12 சதவீதம் அதிகம். கடந்த மாதத்துடன் சேர்த்து தொடர்ந்து 12 மாதங்களாக ஜிஎஸ்டி ரூ.1.4 லட்சம் கோடிக்கு மேல் வசூலாகியுள்ளது.
- கடந்த ஜனவரியில் ரூ.1.57 லட்சம் கோடி வசூலானது. நடப்பு நிதியாண்டில் அதிகபட்ச வசூலாக கடந்த ஆண்டு பிப்ரவரியில் ரூ.1.68 லட்சம் கோடி வசூலானது.
- கடந்த பிப்ரவரி மாதம் வசூலான ஜிஎஸ்டி ரூ.1,49,577 கோடியில், மத்திய ஜிஎஸ்டி ரூ.27,662 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ.34,915 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.75,069 கோடி அடங்கும். ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியில் இறக்குமதி பொருட்கள் மூலம் ரூ.35,689 கோடி வசூலாகியுள்ளது. செஸ் வரியாக ரூ.11,931 கோடி வசூலானது.
- கடற்படை வீரர்களுக்கான 3 பயிற்சிக் கப்பல்களை வாங்க லார்சன் & டப்ரோ (எல்&டி) நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- ரூ.3,108.09 கோடி செலவில் வாங்கப்படவுள்ள இந்தக் கப்பல்கள் உள்நாட்டிலேயே வடிவமைத்து மேம்படுத்தப்பட்டு உற்பத்தி செய்யப்படுவது (இந்திய-ஐடிடிஎம்) என்ற பிரிவின் கீழ் வாங்கப்பட உள்ளன. இந்தக் கப்பல்களை 2026-ம் ஆண்டு முதல் எல்&டி நிறுவனம் வழங்கத் தொடங்கும்.
- இந்தக் கப்பல்கள் கடற்படையில் பெண்கள் உள்ளிட்ட பயிற்சி அதிகாரிகளின் பயிற்சித் தேவைகளைப் பூர்த்தி செய்யும். ராஜ்ய உறவுகளை வலுப்படுத்தும் விதமாக நட்பு நாடுகளின் வீரர்களுக்கும் இந்தக் கப்பல் மூலம் பயிற்சியளிக்கப்படும். பேரிடர் மீட்புப்பணிகளின் போது, மக்களை மீட்பது மற்றும் மனிதாபிமான உதவிகளுக்காகவும் இந்தக் கப்பல்கள் பயன்படுத்தப்படும்.
- சென்னை காட்டுப்பள்ளி எல்&டி கப்பல்கள் கட்டும் தளத்தில் வடிவமைக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்டு இந்தக் கப்பல்கள் கட்டமைக்கப்படும். இந்தத் திட்டம் நான்கரை ஆண்டுகளில் 22.5 லட்சம் மனித நாட்கள் வேலைவாய்ப்பை உருவாக்கும்.
- இந்திய கப்பல் கட்டும் துறையில் உள்ள நிறுவனங்கள், அது தொடர்பான குறு, சிறு நடுத்தர நிறுவனங்களுக்கு இத்திட்டம் அதிக வாய்ப்புகளை அளித்து ஊக்கவிக்கும்.
- இந்தக் கப்பல்களுக்கான பெரும்பாலான உபகரணங்கள் உள்நாட்டு நிறுவனங்களால் தயாரிக்கப்படுவதால் மத்திய அரசின் முன்முயற்சியான தற்சார்பு இந்தியா மற்றும் மேக்-இன் இந்தியா திட்டங்களுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் இருக்கும்.
- லெஃப்டினன்ட் ஜெனரல் எம் வி சுசீந்திர குமார் ராணுவத் துணைத் தலைமை தளபதியாக 2023, மார்ச் 1 அன்று பொறுப்பேற்றார். இதற்கு முன்பு இப்பொறுப்பில் வகித்த லெஃப்டினன்ட் ஜெனரல் பி எஸ் ராஜு ஜெய்ப்பூரை தலைமையிடமாகக் கொண்ட தென்மேற்குப் படைப்பிரிவின் (சப்த சக்தி) தலைவராக நியமிக்கப்பட்டதையடுத்து, திரு சுசீந்திர குமார் இப்பொறுப்புக்கு நியமிக்கப்பட்டார்.
- இதற்கு முன்பு திரு எம்வி சுசீந்திர குமார் ராணுவத் தலைமையகத்தில் துணைத் தளபதியாக பொறுப்பு வகித்து வந்தார். பிஜப்பூர் சைனிக் பள்ளி மற்றும் தேசிய பாதுகாப்பு அகாடமியில் பயின்ற அவர், 1985-ம் ஆண்டு அசாம் படைப்பிரிவில் பணியைத் தொடங்கினார்.
- இந்திய விமானப்படைக்கு ரூ 6,828.36 கோடி செலவில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் (எச்ஏஎல்) நிறுவனத்திடமிருந்து 70 எச்டிடி-40 அடிப்படை பயிற்சி விமானத்தை வாங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த விமானம் 6 ஆண்டு காலத்தில் வழங்கப்படும்.
- இந்த விமானம் 56% உள்நாட்டு உபகரணங்களைக் கொண்டு உற்பத்தி செய்யப்படுவதாகும் இது 60% வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் எம்எஸ்எம்இ-கள் உட்பட இந்திய தனியார் தொழில்துறையினரை வழங்கல் தொடரில் ஈடுபடுத்த உள்ளது.
- இந்த விமானக் கொள்முதல் மூலம் 100-க்கும் அதிகமான எம்எஸ்எம்க்களில் 1500 பேர் நேரடியாகவும் 3000 பேர் வரை மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுவார்கள்.
- எச்டிடி-40 கொள்முதல் செய்வது இந்திய விண்வெளி பாதுகாப்புக்கு வலுசேர்ப்பதாகவும் தற்சார்பு இந்தியாவை நோக்கிய முயற்சிகளுக்கு ஊக்கமளிப்பதாகவும் இருக்கும்.
- வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார கூட்டமைப்பான பிம்ஸ்டெக் முன்முயற்சிகள் எரிசக்தி மையத்தின் முதல் நிர்வாகக்குழுக் கூட்டத்தை பெங்களூருவில் 2023, பிப்ரவரி 27-ந் தேதி இந்தியா நடத்தியது.
- மின்சார அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திரு அஜய் திவாரி இந்த மையத்தின் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளை வரவேற்று, உறுப்பு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு நடவடிக்கை குறித்து விரிவாகப் பேசினார்.
- இந்த அமைப்பில் பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மியான்மர், நேபாளம், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் உறுப்பு நாடாக உள்ளன.
- இந்தியாவில் இந்த அமைப்பின் எரிசக்தி மையம் தொடங்கவிருப்பது குறித்து தெரிவிக்கப்பட்டது. இந்த மையத்திற்கு தலைவராக ஞான்ஷாம் பிரசாத் நியமிக்கப்பட்டிருக்கிறார்.