Type Here to Get Search Results !

TNPSC 14th JANUARY 2023 TAMIL CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

சிறப்பு திட்ட அமலாக்க துறையின் கீழ் திறன் மேம்பாட்டுக் கழகம் - அரசாணை வெளியீடு

  • சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் கடந்த டிசம்பர் 14-ம் தேதி தமிழக அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்பு திட்ட அமலாக்கம், வறுமை ஒழிப்பு ஆகிய துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
  • இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் துறையின் கீழ் கூடுதலாக ஓர் அமைப்பு சேர்க்கப்பட்டுள்ளது. இதன்படி தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகமானது சிறப்பு திட்ட அமலாக்க துறையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த அமைப்பு வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் கீழ் இருந்தது.
இந்தியாவின் புவிசார் சுற்றுச்சூழல் அமைப்பில் புதிய கண்டுபிடிப்பு மற்றும் ஸ்டார்ட்-அப்களை ஊக்குவிக்க “ஜியோஸ்பேஷியல் ஹேக்கத்தானை” மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கிவைத்தார்
  • புதிய, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் இந்தியாவின் எதிர்கால பொருளாதாரத்திற்கு  ஸ்டார்ட்அப்கள் முக்கியமாகும் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் (தனி பொறுப்பு); புவி அறிவியல் துறை இணை அமைச்சர் (தனி பொறுப்பு);  பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்த்தல், ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
  • புதுதில்லியில் “ஜியோஸ்பேஷியல் ஹேக்கத்தானை” தொடங்கிவைத்த டாக்டர் ஜிதேந்திர சிங், இந்தியாவின் புவிசார் சுற்றுச்சூழல் அமைப்பில் புத்தாக்கம் மற்றும் ஸ்டார்ட்அப்களை ஹேக்கத்தான் ஊக்குவிக்கும் என்றார். தேசத்தின் புவிசார் பொருளாதாரத்தைக் கட்டமைப்பதில் பங்களிக்க இளைஞர்களுக்கு அவர் அழைப்புவிடுத்தார்.
வெளி நாடுகளில் சொத்து வாங்க, முதலீடு செய்ய தடை - நேபாள வங்கி உத்தரவு
  • நமது அண்டை நாடான நேபாளத்தில் பிரதமர் புஷ்பா கமல் தஹல் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில், நேபாள நாட்டில் உள்ள நேபாள ராஸ்ட்ரா வங்கி ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 
  • அதில், நேபாள நாட்டைச் சேர்ந்தவர்கள் வெளி நாட்டில் நிலம், வீடு, கடன்பத்திரங்கள், சொத்துகள் உள்ளிட்டவற்றை வாங்க தடை விதித்துள்ளது.
  • அதேபோல், வெளி நாட்டு வங்கிகள், நிதி நிறுவங்களிலும் பணத்தை முதலீடோ, டெபாசிட் செய்ய கூடாது என்று தெரிவித்துள்ளது.
  • தற்போது, நேபாள நாட்டில் வங்கிப் பணப்புழக்கம் நெருக்கடி நிலவுவதால், சொகுசுகார்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் வாங்கவும் இறக்குமதி செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel