Type Here to Get Search Results !

TNPSC 6th DECEMBER 2022 CURRENT AFFAIRS TAMIL PDF TNPSC SHOUTERS

 

இந்தியா மற்றும் மத்திய ஆசிய நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டம் 2022

  • இந்தியா மற்றும் மத்திய ஆசிய நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டம் புதுடில்லியில் நடந்தது. 
  • நம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் பங்கேற்றனர். 
  • துர்க்மெனிஸ்தான் சார்பில் இந்தியாவுக்கான அந்த நாட்டின் தூதர் பங்கேற்றார். பயங்கரவாதத்தை தடுக்க கூட்டாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, இந்தியா மற்றும் மத்திய ஆசிய நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி உயர்த்தி அறிவித்தது உலக வங்கி
  • கடந்த அக்டோபரில், உலக வங்கி, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என, அதற்கு முன் கணித்திருந்த 7.5 சதவீதத்திலிருந்து குறைத்து அறிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது 6.5 சதவீதத்திலிருந்து, 6.9 சதவீதமாக உயர்த்தி அறிவித்துள்ளது. 
  • உலகளாவிய பொருளாதார பாதிப்புகளிலில் இருந்து மீட்சியடைவது மற்றும் எதிர்பார்த்ததை விட இரண்டாவது காலாண்டில் அதிக வளர்ச்சி ஆகியவை காரணமாக, இந்தத் திருத்தத்தை மேற்கொண்டிருப்பதாக, உலக வங்கி தெரிவித்துள்ளது.
  • உலக கொந்தளிப்புகளுக்கு மத்தியில், ஒரு சர்வதேச நிறுவனம், இந்தியாவின் வளர்ச்சி குறித்த கணிப்பை மாற்றி உயர்த்தி அறிவித்துள்ளது, இதுவே முதல் முறையாகும்.
  • 'பிட்ச் ரேட்டிங்ஸ்' நிறுவனம், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில் 7 சதவீதமாக இருக்கும் என்ற கணிப்பில் மாற்றம் எதுவும் செய்யவில்லை என தெரிவித்துள்ளது.
பன்னாட்டு சுகாதார மாநாடு 2022
  • தமிழ்நாடு அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறையின் நூற்றாண்டு நிறைவு, பன்னாட்டு சுகாதார மாநாடு தொடக்க விழா மாமல்லபுரத்தில் நடந்தது.
  • மாநாட்டில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று, சர்வதேச மாநாட்டை துவக்கி வைத்தார். பின்னர், மருத்துவத்துறையின் நூற்றாண்டு அஞ்சல் தலை மற்றும் கொரோனா தொற்று சிறப்பு காணொலி குறுந்தகட்டினை வெளியிட்டார். 
திருமணத்திற்கு முந்தைய உடலுறவு, லிவிங் டுகெதரை சட்டவிரோதமாக்கிய இந்தோனேஷியா அரசு
  • இந்தோனேஷியா ஒரு சர்ச்சைக்குரிய புதிய குற்றவியல் சட்டத்தை இயற்றியுள்ளது, அதில் திருமணத்திற்கு முந்தைய உடலுறவு மற்றும் சேர்ந்து வாழ்வதை சட்டவிரோதமாக அறிவித்துள்ளது.
  • புதிய சட்டங்கள் இந்தோனேசியர்கள் மற்றும் வெளிநாட்டினர் இருவருக்கும் பொருந்தும் என்று அந்நாட்டு அரசு குறிப்பிபட்டுள்ளது. பாராளுமன்றத்தால் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்ட புதிய குற்றவியல் சட்டம், 1946 இல் இந்தோனேசியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து நடைமுறையில் இருந்த கட்டமைப்பை மாற்றி அமைப்பதாக உள்ளது.
  • முன்மொழியப்பட்ட புதிய சட்டம் 2019 செப்டம்பரில் ஒரு முழு வரைவு வெளியிடப்பட்டபோது மாணவர்கள் தலைமையிலான குழு அதை எதிர்த்து போராடியது. 
  • இது தனிப்பட்ட சுதந்திரங்களைக் குறைக்கும் என்றும் குறிப்பிட்டது. அந்த போராட்டத்தில் குறைந்தது 300 பேர் காயமடைந்தனர். பின்னர் தற்காலிகமாக கிடப்பில் போடப்பட்ட வரைவு தற்போது சட்டமாக மாற்றப்பட்டுள்ளது.
சிறந்த பாரா வீராங்கனையாக மனீஷா ராமதாஸ் தோவு
  • சா்வதேச பாட்மின்டன் சம்மேளனத்தின் 2022-ஆம் ஆண்டுக்கான சிறந்த பாரா பாட்மின்டன் வீராங்கனை விருதை இந்தியாவின் மனீஷா ராமதாஸ் வென்றுள்ளாா்.
  • 17 வயதான மனீஷா, நடப்பாண்டில் அனைத்து போட்டிகளிலுமாக 11 தங்கம், 5 வெண்கலம் என 16 பதக்கங்கள் வென்று அசத்தியிருக்கிறாா். இதில் உலக சாம்பியன்ஷிப்பில் எஸ்யு5 பிரிவில் வாகை சூடியதும் அடக்கம். இந்த விருதுக்கான போட்டியில் மற்ற இந்திய வீராங்கனைகளான நித்யஸ்ரீ சுமதி, மானசி ஜோஷி ஆகியோரும் இருந்தனா். 
  • சிறந்த பாரா வீரா் பிரிவில் இந்தியாவின் பிரமோத் பகத்தும் போட்டியில் இருந்த நிலையில், அந்த விருது டபிள்யூஹெச்2 உலக சாம்பியனும், நடப்பு பாராலிம்பிக் சாம்பியனுமான ஜப்பானின் டாய்கி கஜிவாராவுக்கு கிடைத்தது. 
  • மாற்றுதிறனாளிகள் அல்லாத சாதாரண போட்டியாளா்கள் பிரிவில் ஆடவா் தரப்பில் ஒலிம்பிக் சாம்பியனும், டென்மாா்க் வீரருமான விக்டா் அக்ஸெல்சென் சிறந்த வீரா் விருது பெற்றாா். 
  • அதற்கான போட்டியில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரணாய் பெயரும் இருந்தது. சிறந்த வீராங்கனை விருதை ஜப்பானின் அகேன் யமகுச்சி வென்றாா்.
11.66% அதிகரிப்புடன் நவம்பரில் மொத்த நிலக்கரி உற்பத்தி 75.87 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது
  • இந்தியாவின் மொத்த நிலக்கரி உற்பத்தி 2021 நவம்பரில் 67.94 மில்லியன் டன்னாக இருந்ததுடன் ஒப்பிடும்போது, 2022 நவம்பரில் 11.66% அதிகரித்து 75.87 மில்லியன் டன்னாக இருந்தது. 
  • நிலக்கரி அமைச்சகத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்கள்படி 2022 நவம்பரில் இந்திய நிலக்கரி நிறுவனம் 12.82% வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளது, அதேசமயம் சிங்கரேணி கூலரீஸ் கம்பெனி நிறுவனமும் மற்ற சுரங்கங்களும் முறையே 7.84% 6.87% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.
  • நிலக்கரி உற்பத்தியில் முதன்மையான 37 சுரங்கங்களில் 24 சுரங்கங்கள் 100 சதவீதத்திற்கும் அதிகமாக உற்பத்தி செய்தன. ஐந்து சுரங்கங்களின் உற்பத்தி 80 முதல் 100 சதவீதம் வரை இருந்தது.
  • மின்சார உற்பத்திப் பயபாட்டுக்கு அனுப்பப்படுவதில் கடந்த ஆண்டு 60.20 மில்லியன் டன்னுடன் ஒப்பிடும் போது, நவம்பர் 2022ல் 3.55% அதிகரித்து 62.34 மில்லியன் டன்னாக உள்ளது.
  • நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி நவம்பர் 2021 உடன் ஒப்பிடும்போது நவம்பர் 2022ல் 16.28% வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளது. மேலும் நவம்பர் 2021ல் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தை விட நவம்பர் 2022ல் ஒட்டுமொத்த மின் உற்பத்தி 14.63% அதிகமாக உள்ளது.
இந்தியாவின் தேசிய தொலை மருத்துவம் சேவையான - இ-சஞ்சீவனி 8 கோடி தொலைத் தொடர்புகளை எட்டியுள்ளது
  • மத்திய அரசின் கட்டணமில்லா தொலை மருத்துவம் சேவையான இ-சஞ்சீவனி, குறிப்பிடத்தக்க சாதனையாக, 8 கோடி தொலைத்தொடர்புகளைக் கடந்து வியக்கத்தக்க வகையில் மற்றொரு மைல்கல்லைத் தாண்டியுள்ளது. 
  • கடைசி 1 கோடி ஆலோசனைகள் குறிப்பிடத்தக்க காலக்கெடுவில் சுமார் 5 வாரங்களில் பதிவு செய்யப்பட்டவை. இது டெலிமெடிசின் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டதைக் காட்டுகிறது.
  • மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் இ-ஹெல்த் முன்முயற்சியான, இ-சஞ்சீவனி ஒரு தேசிய டெலிமெடிசின் சேவையாகும். இது வழக்கமான நேரடி உடல்நல ஆலோசனைகளுக்கு மாற்றாக இணையதளம் வழியாக ஆலோசனை வழங்க முயற்சிக்கிறது.
  • இந்த முன்முயற்சி, 3 ஆண்டுகளுக்குள், உலகின் மிகப்பெரிய அரசுக்கு சொந்தமான டெலிமெடிசின் தளம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இது இரண்டு சிறப்பங்களைக் கொண்டுள்ளது. 
  • ஒன்று அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள நோயாளிகளை வெற்றிகரமாக சென்றடைந்துள்ளது. மற்றொன்று தேசத்தின் தொலைதூர பகுதிகளில் அதன் இருப்பை உணர்த்துகிறது.
  • இ-சஞ்சீவனி புறநோயாளி பிரிவு, 2,22,026 நிபுணர்கள், மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுடன் 1,144 இணையதளப் புறநோயாளி பிரிவுகளைக் கொண்டுள்ளது. இந்தத் தளம் ஒரே நாளில் 4.34 லட்சம் நோயாளிகளுக்கு சேவைசெய்து சாதனை படைத்துள்ளது.
  • இந்தத் தளத்தைப் பயன்படுத்துவதில் முன்னணியில் இருக்கும் பத்து மாநிலங்கள்: ஆந்திரப் பிரதேசம் (28242880), மேற்கு வங்கம் (10005725), கர்நாடகா (9446699), தமிழ்நாடு (8723333), மகாராஷ்டிரா (4070430), உத்தரப் பிரதேசம் (3763092), மத்தியப் பிரதேசம் (3283607), பீகார் (2624482), தெலங்கானா (2452529), குஜராத் (1673888).

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel