Type Here to Get Search Results !

TNPSC 29th DECEMBER 2022 CURRENT AFFAIRS TAMIL PDF TNPSC SHOUTERS

 

போர் விமானத்திலிருந்து பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி

  • இந்திய விமானப்படையைச் சேர்ந்த சகோய் வகை விமானம் பறந்து கொண்டிருக்கும் போது அதிலிருந்து பிரம்மோஸ் ஏவுகணைகளை ஏவும் வகையிலான தொழில்நுட்பத்தை டி.ஆர்.டி.ஓ. எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வடிவமைத்துள்ளது. 
  • இந்த ஏவுகணை விமானப்படைக்கு சொந்தமான சுகோய்-30 ரக போர் விமானத்திலிருந்து வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டது. 
  • அப்போது நிர்ணயித்த. தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழித்ததாக டி.ஆர்.டி.ஓ. வட்டாரங்கள் தெரிவித்தன.
நாட்டிலேயே 2021-ம் ஆண்டு தமிழகத்தில் தான் அதிக சாலை விபத்து
  • நாடுமுழுவதும் 2021-ம் ஆண்டு 4,12,432 சாலை விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாகவும், இதில் 1,53,972 பேர் உயிரிழந்துள்ளனர் என ஒன்றிய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சகம் அறிக்கை அளித்துள்ளது. 
  • நாட்டிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் 55,682 விபத்துகள் பதிவாகியுள்ளன எனவும், உயிரிழப்பில் உத்திரப்பிரதேசத்துக்கு அடுத்த இடத்தில் உள்ள தமிழகத்தில் 15,384 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளது. 
  • நாடு முழுவதும் கார் விபத்தில் உயிரிழந்த 19,811பேரில் 83% பேர் (14,397) சீட்பெல்ட் அணியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று இருசக்கர வாகன விபத்தில் உயிரிழந்துள்ள 69,385 பேரில் 67% பேர் (47,000) தலைக்கவசம் அணியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைக்கவசம் அணியாமல் விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையில் தமிழகம் 2-வது இடம் பிடித்துள்ளது. 
  • நாட்டில் அதிகபட்சமாக உத்திரபிரதேசத்தில் 6,445 பேரும், தமிழ்நாட்டில் 5,888 பேரும் மகாராஷ்டிராவில் 4,966 பேரும் உயிரிழந்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.300 கோடி அங்குல்-பல்ராம் ரயில் இணைப்பு தொடங்கிவைக்கப்பட்டது
  • தல்சார் நிலக்கரி வயல்களில் இருந்து நிலக்கரியை வெளியே கொண்டு வரும் 14 கி.மீ. நீள அங்குல்-பல்ராம் ரயில் இணைப்பு தொடங்கி வைக்கப்பட்டது.  
  • தினசரி 40 ஆயிரம் டன் என்ற நிலக்கரியை கொண்டு செல்லும்  மகாநடி நிலக்கரி வயல்கள் நிறுவனத்தின் திறனை அதிகரிக்க இது வகைசெய்கிறது. 
  • ரூ.300 செலவில் உருவாக்கப்பட்ட இந்த ரயில் இணைப்பு தினசரி 10 பெட்டிகள் அளவுக்கு நிலக்கரியை கூடுதலாக கொண்டு செல்லக்கூடியதாகும்.
  • இந்த ரயில் இணைப்பை மத்திய நிலக்கரி, சுரங்கம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் திரு பிரலாத் ஜோஷி, மத்திய கல்வி, திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், ரயில்வே அமைச்சர் திரு அஸ்விணி வைஷ்ணவ் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
  • அங்குல்-பல்ராம் ரயில் இணைப்பு, 68 கி.மீ. தூர உள்வழித்தடம்- அங்குல்-பல்ராம்-புதுக்கடியா ஜராபதா-டென்டுலோய் ரயில் இணைப்பின் முதல் கட்டமாகும்.
கால்பந்து ஜாம்பவான் பீலே புற்றுநோய் பாதிப்பால் மறைவு
  • கால்பந்து ஜாம்பவான் பீலேவுக்கு கடந்த ஆண்டு பெருங்குடல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மேலும், புற்றுநோய் பாதிப்பு இருந்த நிலையில் கடந்த 2021 செப்டம்பர் முதல் கீமோதெரபி சிகிச்சை எடுத்து வந்தார் பீலே. 
  • ஆனால், கடந்த சில நாட்களாக, அவரின் உடல்நிலை பலவீனமடைந்தது. அவரின் உடல் கீமோதெரபி சிகிச்சைக்கு ஒத்துழைக்கவில்லை. இதனால் சாவோ பாவ்லோ மாகாணத்தில் உள்ள போல்ஹா பகுதியில் உள்ள ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவமனையில் அவர் வாழ்க்கையின் இறுதிகட்ட சிகிச்சை பெற்று வந்தார்.
  • இந்நிலையில், பீலே மரணமடைந்தார். பீலே உயிரிழந்ததை அவரின் மகள் இன்ஸ்டாகிராம் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனமும் பீலேவின் இறப்பை உறுதிப்படுத்தியுள்ளது.
  • கால்பந்து வரலாற்றில் மூன்று உலகக் கோப்பைகளை வென்ற ஒரே வீரர் பீலே. 92 போட்டிகளில் 77 கோல்கள் அடித்து பிரேசிலின் ஆல்-டைம் டாப் ஸ்கோரராக இருக்கும் பீலே, 1940-ம் ஆண்டு பிறந்தவர். 
  • கால்பந்தாட்ட உலகின் மாபெரும் ஜாம்பவனாக இன்றும் விளங்குபவர். ஆயிரத்து இருநூறுக்கும் மேற்பட்ட கோல்கள் மட்டுமின்றி ஹாட்ரிக் கோல்களில் உலக சாதனையும் படைத்துள்ளார்.
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி காலமானார்
  • பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடிக்கு உடல்நிலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel