ஆசியக் கோப்பை ஸ்டேஜ் - 3 வில்வித்தையில் இந்தியாவுக்கு 5 தங்கம்
- அமீரகத்தில் உள்ள ஷார்ஜாவில் நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை ஸ்டேஜ்-3 வில்வித்தைப் போட்டியில் இந்திய ஜூனியர் வீரர், வீராங்கனைகள் 5 தங்கம், 3 வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளனர்.
- தனிநபர் மகளிர் பிரிவில் இந்தியாவின் பிரகதி, ஆதித்தி ஸ்வாமி, பர்னீத் கவுர் ஆகியோர் முதல் 3 இடங்களைப் பெற்றனர். காம்பவுண்ட் பிரிவில் இந்தியாவின் பிரியான்ஷ், ஓஜாஸ் டியோடேல் ஆகியோர் முறையே தங்கம், வெள்ளியைக் கைப்பற்றினர். காம்பவுண்ட் அணி பிரிவில் இந்திய ஆடவர், மகளிர் அணியினர் தங்கத்தைக் கைப்பற்றினர்.
- ரிகர்வ் பிரிவில் இந்தியாவுக்கு ஒரு தங்கம், ஒரு வெள்ளி கிடைத்தது. ஆடவர் அணிப் பிரிவில் ஆகாஷ் மிருணாள் சவுகான், பார்த் சாலுங்கே ஆகியோர் அடங்கிய இந்திய அணி தங்கம் வென்றது. ரிகர்வ் கலப்பு அணி பிரிவில் இந்தியாவின் திஷா பூனியா-சாலுங்கே ஜோடி வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றியது.
- கங்கைத் தூய்மைக்கான தேசிய இயக்கத்தின் 46-வது செயற்குழு கூட்டம் தலைமை இயக்குநர் திரு ஜி அசோக்குமார் தலைமையில் 23 டிசம்பர் 2022 நடைபெற்றது.
- அப்போது உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கத்தில் ரூ 2,700 கோடிக்கு மேலான செலவில் கழிவு நீரகற்று உள்கட்டமைப்பின் 12 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- உத்தரப்பிரதேசத்தில் 3 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் பிரயாக்ராஜில் ரூ. 475.19 கோடி செலவில் ஒரு திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
- பீகாரில் ரூ. 42.25 கோடி செலவில் தௌத் நகரிலும், 149.15 கோடி செலவில் மோத்திகரிலும் ஒரு திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது.
- மேற்கு வங்கத்தில் ரூ. 653.67 கோடி செலவில் ஆதிகங்கா ஆற்றின் மறுசீரமைப்பிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- உத்தரகண்ட் மற்றும் பீகாரில் 2022-23-ம் ஆண்டு காடுவளர்ப்பு திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.