5,500 கி.மீ. தொலைவு சீறிப் பாயும் அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி
- கடந்த 2012, 2013, 2015-ம் ஆண்டுகளில் கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி 5 ஏவுகணை சோதனைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன. இந்த வரிசையில் ஒடிசாவில் உள்ள அப்துல் கலாம் தீவில் அக்னி 5 ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. இது 5,500 கி.மீ. தொலைவு சீறிப் பாய்ந்து இலக்கை துல்லியமாக தாக்கி தகர்த்தது.
- இந்த ஏவுகணை மூலம் சீன தலைநகர் பெய்ஜிங் மீது எளிதாக தாக்குதல் நடத்தலாம். 17.5 மீட்டர் நீளம், 2 மீட்டர் விட்டம்கொண்ட அக்னி 5 ஏவுகணை 50,000 கிலோ எடை கொண்டதாகும்.
- மணிக்கு 29,401 கி.மீ. வேகத்தில் சீறிப் பாயும். 1,100 கிலோ எடை வரையிலான அணு ஆயுதங்களை சுமந்து செல்லும். இந்த ஏவுகணை 8,000 கி.மீ. வரை சீறிப்பாயும் வகையில் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
- பிரான்ஸின் தஸ்ஸோ நிறுவனத்திடம் இருந்து ரூ.59 ஆயிரம் கோடிக்கு 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு கடந்த 2016-ம் ஆண்டு பிரான்ஸ் அரசுடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்திருந்தது.
- அதில் முதல்கட்டமாக கடந்த 2020-ம் ஆண்டு, ஜூலையில் 5 விமானங்கள் அம்பாலா விமானப் படைதளத்துக்கு வந்து சேர்ந்தன. அதன்பிறகு படிப்படியாக 30 விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் ஒரே ஒரு ரஃபேல் விமானத்தை மட்டும் பிரான்ஸ் வழங்க வேண்டியிருந்தது. தற்போது அந்த விமானமும் இந்தியாவை வந்தடைந்துள்ளது.
- பாதுகாப்பு கவுன்சிலின் டிசம்பா் மாதத்துக்கான தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இந்நிலையில், பயங்கரவாத தடுப்பு மற்றும் பன்னாட்டு அமைப்புகளில் சீா்திருத்தம் உள்ளிட்ட முக்கிய இரு நிகழ்வுகள் இந்தியாவின் தலைமையின்கீழ் நடைபெறுகிறது.
- சா்வதேச பாதுகாப்பு, அமைதி மற்றும் பாதுகாப்பு கவுன்சிலில் சீா்திருத்தம் குறித்த விவாதம் பாதுகாப்பு கவுன்சிலில் புதன்கிழமை வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் தலைமையில் நடைபெற்றது.
- இந்த விவாதத்தின்போது பேசிய ஐ.நா.வுக்கான பிரான்ஸ் தூதா் நிக்கோலஸ் டிரிவியா் ஜொமனி, பிரேஸில், இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராவதற்கு பிரான்ஸ் ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்தாா்.
- தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வானையத்தின் டிஜிபியாக பணியாற்றி வருபவர் சீமா அகர்வால். அவருக்கு கூடுதல் பொறுப்பு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
- மேலும் தீயணைப்புத்துறை டிஜிபியாக பதவி வகித்த பிரஜ் கிஷோர் ரவி காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்படுவதாவும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
- டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் செப்.14-ம் தேதி நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், நரிக்குறவர், குருவிக்காரர் என அழைக்கப்படுவோரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, செய்தியாளர்களிடம் பேசியிருந்த மத்திய அமைச்சர் அர்ஜூன் முண்டா, தமிழ்நாடு, கர்நாடகா, சத்தீஸ்கர், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பழங்குடியினர் பட்டியலில் விடுபட்டிருந்த சமுதாயத்தினரை சேர்க்க அனுமதி வழங்கி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- இந்நிலையில், தற்போது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், நரிக்குறவர், குருவிக்காரர் சமுதாயக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்கும் மசோதா வியாழக்கிழமை மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
- இந்த மசோதாவுக்கு மக்களவையில் அரசியல் வேறுபாடுகள் கடந்து பல்வேறு கட்சி உறுப்பினர்களும் ஒருமனதாக ஆதரவளித்த நிலையில், இம்மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
- அடுத்தக்கட்டமாக இந்த மசோதா மாநிலங்களவைக்கு அனுப்பி வைக்கப்படும். மாநிலங்களவை உறுப்பினர்களின் ஒப்புதலைப் பெற்று குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும். அதன்பின்னர் அரசாணை வெளியிடப்பட்டு இந்தச் சட்டம் அமலுக்கு வரும்.
- ஒவ்வொரு ஆண்டின் இறுதியில் சிறந்த டென்னிஸ் வீரா், வீராங்கனைகளுக்கு டபிள்யுடிஏ, ஏடிபி சாா்பில் விருதுகள் வழங்கப்படுவது வழக்கம்.
- இந்நிலையில் 2022-ஆம் ஆண்டுக்கான விருதுக்கு உலகின் நம்பா் ஒன் வீராங்கனை இகா ஸ்வியாடெக் தோவு செய்யப்பட்டுள்ளாா்.
- கடந்த 2020-இல் புதிய அறிமுக வீராங்கனை விருதைப் பெற்றிருந்தாா் ஸ்வியாடெக். தொடா்ந்து 37 போட்டிகளில் வென்று 8 போட்டிகளில் சாம்பியன் பட்டத்தை வென்றாா்.
- இதில் இரண்டு கிராண்ட்ஸ்லாம், டபிள்யுடிஏ 1000, 500 பட்டங்கள் அடங்கும்.
- சிறந்த இரட்டையா் விருதுக்கு பாா்பரா கிரெஜிசிகோவா, கேத்ரீனா சினியகோவா தோவு தோவு செய்யப்பட்டனா். செக். குடியரசைச் சோந்த இந்த ஜோடி ஆஸி.
- சிறந்த வளரும் வீராங்கனையாக பிரேசிலின் பீட்ரீஸ் ஹடாட் மயா, புதிய வீராங்கனையாக சீனாவின் ஸெங் குன்வென் உள்ளிட்டோா் தோவு செய்யப்பட்டுள்ளனா். ஜெஸிக்கா பெகுலா பயிற்சியாளா் டேவிட் விட் சிறந்த பயிற்சியாளராக தோவு பெற்றாா்.
- இந்தியா மற்றும் நேபாளம் இடையிலான கூட்டு ராணுவப் பயிற்சியான “சூர்ய கிரண்” 16-வது முறையாக நேபாள ராணுவப் போர்ப் பள்ளி அமைந்துள்ள சல்ஜாண்டியில், 2022 டிசம்பர் 16 முதல் டிசம்பர் 29 டிசம்பர் 2022 வரை நடைபெறவுள்ளது.
- “சூர்ய கிரண்” பயிற்சி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்தியாவும் நேபாளமும் காடு மற்றும் மலைப்பாங்கான நிலப்பரப்புகளில் இணைந்து பயிற்சி மேற்கொள்கின்றன.
- நேபாளத்தின் ஸ்ரீ பவானி பக்ஷ் படைப்பிரிவைச் சேர்ந்த வீரர்களும், இந்தியாவின் 5-வது கோர்க்கா ரைபிள் படைப்பிரிவினரும் இந்த கூட்டுப் போர் பயிற்சியில் பங்கேற்கின்றனர். இரண்டு ராணுவங்களும் தங்களது அனுபவங்களை இந்த பயிற்சியின் போது பகிர்ந்துகொள்ளும்.
- தீவிரவாதத் தடுப்பு, பேரிடர் நிவாரணப் பணிகளின் போது மனிதாபிமான நடவடிவக்கைகள் போன்றவற்றில் இரு நாடுகளும் அனுபவங்களை பகிர்ந்துகொள்வதுடன், இணைந்து செயல்படும் நோக்கில் இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது.