Type Here to Get Search Results !

TNPSC 24th DECEMBER 2022 CURRENT AFFAIRS TAMIL PDF TNPSC SHOUTERS

 

ஃபிஜியின் புதிய பிரதமராகிறார் சிதிவேனி ரபுகா

  • ஃபிஜி நாட்டின் புதிய பிரதமராக சிதிவேனி ரபுகா, தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் கடந்த 16 ஆண்டு கால ஃபிராங்க் பைனிமராமாவின், ஆட்சி முடிவுக்கு வருகிறது. 
  • பாராளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் 28 வாக்குகளுடன் சிதிவேனி ரபுகா, 27 வாக்குகளைப்பெற்ற பைனிமராமாவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்து ஃபிஜியின் அடுத்த பிரதமராகிறார். 1992 மற்றும் 1999க்கு இடையில் ஏற்கனவே சிதிவேனி ரபுகா பிரதமராக இருந்திருக்கிறார்.
7,000 ரன்கள் கடந்த 7வது இந்திய வீரர் புஜாரா புதிய சாதனை
  • இந்தியா, வங்காளதேசம் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மிர்பூரில் நடைபெற்று வருகிறது.  இந்நிலையில், புஜாரா 12வது ரன் எடுத்தபோது டெஸ்ட் அரங்கில் 7000 ரன்கள் கடந்த வீரர்களில் பிராட்மேனை முந்தினார்.
  • பிராட்மேன் 6,996 ரன்க்ள் எடுத்துள்ளார். மேலும் 7,000 ரன்கள் கடந்த 7வது இந்திய வீரர் புஜாரா என்பது குறிப்பிடத்தக்கது. புஜாரா இதுவரை 98 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி மொத்தம் 7,008 ரன்கள் எடுத்துள்ளார்.
ஒட்டன்சத்திரத்தில் 117 ஏக்கர் நிலத்தில் 4 மணி நேரத்தில் 6 லட்சம் மரக்கன்று நடவு செய்து உலக சாதனை
  • ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு உட்பட்ட இடையகோட்டையில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள திருவேங்கடநாதப் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான 117 ஏக்கர் நிலத்தில் சீமை கருவேல மரங்கள் வளர்ந்திருந்தன. 
  • இதைத் தொடர்ந்து இந்த இடத்தை துய்மைப்படுத்தி மரக்கன்றுகளை நட, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும், உலக சாதனை முயற்சியாக 4மணி நேரத்தில் 6 லட்சம் மரக்கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டது.
  • பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், தன்னார்வலர்கள் உட்பட 16,500 பேர் இணைந்து ஒரே நேரத்தில் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டனர்.
  • நிறைவாக குறுங்காடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மூலிகைப் பூங்காவில் தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2 மரக்கன்றுகளை நட்டார். தொடர்ந்து, அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி, மா. மதிவேந்தன் ஆகியோரும் மரக்கன்றுகள் நட்டனர்.
  • பின்னர் நடந்த விழாவுக்கு ஆட்சியர் ச.விசாகன் தலைமை வகித்தார். அப்போது 6 லட்சம் மரக்கன்றுகள் நட்டு சாதனை படைத்ததற்கான பதக்கம் மற்றும் சான்றிதழை அமெரிக்காவைச் சேர்ந்த எலைட் வேர்ல்டு ரெக்கார்ட் நிறுவன நிர்வாக அதிகாரிகள் ரவி பால்பக்கி,நவுரா ஆகியோர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினர்.
  • இதே போல், ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி, இந்தியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி, தமிழன் புக்ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகிய உலகசாதனை அங்கீகரிப்பு நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகளும் சான்றிதழ்களை வழங்கினர்.
9000 குதிரைத் திறன் கொண்ட மின்சார சரக்குவாகன என்ஜின்கள் உற்பத்தி மற்றும் பராமரிப்புக்கு சீமென் இந்தியா நிறுவனத்திற்கு இந்திய ரயில்வே ஒப்புதல் கடிதம்
  • 9000 குதிரைத் திறன் கொண்ட மின்சார சரக்குவாகன என்ஜின்கள் உற்பத்தி மற்றும் பராமரிப்புக்கு சீமென் இந்தியா நிறுவனத்திற்கு இந்திய ரயில்வே ஒப்புதல் கடிதம் வழங்கியுள்ளது. 
  • தஹோட்டாவில் உள்ள ரயில்வே தொழிற்சாலையில் அதிகப்பட்ச குதிரைத் திறன் கொண்ட (9000 குதிரை திறன்) 1200 மின்சார சரக்கு என்ஜின்கள் 11 ஆண்டுகளுக்கு உற்பத்தி செய்யப்படும். 
  • இந்த எஞ்சின்களை உற்பத்தி செய்வதோடு 35 ஆண்டுகளுக்கு இந்த நிறுவனம் பராமரிக்கவும் செய்யும்.  இதற்கான ஒப்பந்தத்தின் மதிப்பீடு (வரிகள் மற்றும் விலை மாறுபாடு நீங்கலாக)  ரூ. 26,000 கோடி (சுமார் 3.2 பில்லியன் அமெரிக்க டாலர்) என மதிப்பிடப்பட்டுள்ளது.
  • ஒப்புதல் கடிதம் அளிக்கப்பட்ட  30 நாட்களுக்குள் சீமென் இந்தியா நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகும்.  இந்த  என்ஜின்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் விநியோகிக்கப்படும்.  இவற்றைத் தயாரிப்பதற்காகவே தஹோட்டா பிரிவு கட்டப்பட்டுள்ளது.  
  • இந்த என்ஜின்களை பராமரிப்பதற்காக விசாகப்பட்டினம்,  ராய்ப்பூர், கரக்பூர், புனே ஆகிய இடங்களில் பணி மணிகள் இருக்கும் ரயில்வேயின் மனித சக்தியைப் பயன்படுத்தி 35 ஆண்டுகளுக்கு பராமரிப்பு பணியை சீமென் இந்தியா  நிறுவனம் மேற்கொள்ளும். 
  • இது இந்தியாவில் உற்பத்தி என்ற முன் முயற்சி அடிப்படையிலான  திட்டமாகும்.  இந்த திட்டத்தின் மூலம் தஹோட்டா பகுதி மேம்பாட்டுக்கு வழிவகுக்கப்படுவதுடன் வேலை வாய்ப்பையும் உருவாக்கும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel