Type Here to Get Search Results !

TNPSC 24th SEPTEMBER 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்து வரலாறு படைத்த இந்திய மகளிர் அணி

  • இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய மகளிர் அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து மகளிர் அணியை எதிர்கொண்டது. 
  • முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி மூன்றாவது போட்டியிலும் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்கியது.
  • இங்கிலாந்து லார்ட்ஸ் மைதாத்தில் நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்தியா, 45.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 169 ரன்கள் மட்டுமே குவித்தது. 
  • 170 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து மகளிர் அணி, தொடக்கம் முதலே நிலையான ஆட்டமின்றி தடுமாறியது. இறுதியில் 43.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியுற்றது. 
  • இதன்மூலம் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியை 16 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி கைப்பற்றியது. 
  • ஹர்மன் பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி, இங்கிலாந்தில் முதல்முறையாக ஒருநாள் தொடரைக் கைப்பற்றி வரலாறு படைத்தது. இந்திய மகளிர் அணியின் மூத்த பந்துவீச்சாளர் ஜூலன் கோஸ்வாமியின் கடைசி போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜி20 நாடுகளுடன் இணைந்து இந்தியா செயல்படும் - ஐ.நா.கூட்டத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் உரை
  • அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஐ.நா. பொதுச்சபை-யின் 77-வது கூட்டத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையிலான இந்திய உயர்நிலைக்குழுவினர் கலந்து கொண்டுள்ளனர். 
  • இந்நிலையில், நடைபெற்ற சிறப்புக்கூட்டத்தில் உரையாற்றிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், கடன், உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஜி20 நாடுகளுடன் இணைந்து இந்தியா செயல்படும் என்றார்.
  • உக்ரைன் போர் உலகின் அனைத்து நாடுகளக்கும் கவலையை ஏற்படுத்தி வருவதகாவும், உக்ரைன் போரை உடனடியாக நிறுத்த பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அவர் வலியுறுத்தினார்.
  • உணவுப்பொருள், எரிபொருள், எரிவாயு உள்ளிட்டவைகள் தொலைதூர நாடுகளிலும் ஏற்பட்டு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அணு ஆயுத மிரட்டல்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்றார். 
  • மேலும் காலநிலை நடவடிக்கை, உணவுப்பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான தரவு உள்ளிட்ட பாதுகாப்பு பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஜி20 நாடுகளுடன் இணைந்து இந்தியா செயல்படும் என்றார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ் பரப்புரைக் கழகம் திட்டத்தை தொடங்கி வைத்தார் 
  • செம்மொழியான தமிழை உலகம் முழுவதும் வளர்க்கும் நோக்கத்தில், தமிழ்‌ இணையக்‌ கல்விக் கழகத்தின்‌ சார்பில் தமிழ் பரப்புரைக் கழகம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் விவேகானந்தர் அரங்கில் நடைபெற்றது.
  • இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு 'தமிழ் பரப்புரைக் கழகம்' திட்டத்தை தொடங்கி வைத்தார். அதனுடன் தமிழ் கற்றல், கற்பித்தலுக்கான பாடநூல்கள், கற்றல் மேலாண்மை செயலி மற்றும் துணைக் கருவிகளையும் அவர் வெளியிட்டார்.
தமிழகத்தின் வனப்பரப்பை அதிகரிக்க பசுமை தமிழகம் இயக்கம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
  • தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை வண்டலூரில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் சார்பில் தமிழகத்தின் வனப்பரப்பை அதிகப்படுத்தும் நோக்கில் நடப்பாண்டில் முதற்கட்டமாக 2 கோடியே 80 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை பள்ளி மாணவர்களுடன் 500 உள்ளூர் நாட்டு மரக்கன்றுகளை நட்டு, பசுமை தமிழ்நாடு இயக்கத்தை தொடங்கி வைத்தார். 
  • முன்னதாக பசுமை தமிழ்நாடு இயக்க தொடக்க விழாவில், வனத்துறை சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்குகளில் பொதுமக்கள் மரக்கன்றுகள் நடுதலைப்பற்றி தேவையான விவரங்களை அறிந்து கொள்ளும் வகையில் வைக்கப்பட்டுள்ள எண்ம சுவர் , எண்ம நூல்கள் போன்றவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். மேலும், இந்நிகழ்ச்சியின் போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் பசுமை தமிழ்நாடு இயக்கம் குறித்த ஆவண சிறப்பு மலரை வெளியிட்டார். 
நாட்டுநலப்பணி திட்ட விருதுகளை வழங்கினார் குடியரசு தலைவர்
  • குடியரசு தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று குடியரசு தலைவர் மாளிகையில், 2020-21-ம் ஆண்டுக்கான நாட்டு நலப்பணி திட்ட விருதுகளை வழங்கினார்.
  • 5 பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்பட்டன. சென்னை அண்ணா  பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஆர். ரமேசுக்கு, பல்கலைக்கழகம்/பிளஸ்டூ கவுன்சில் பிரிவில் விருது வழங்கப்பட்டுள்ளது. 
  • யூனிட் திட்ட அலுவலர்கள் பிரிவில் மதுரை ஶ்ரீமீனாட்சி கலைக்கல்லூரிக்கு விருது அளிக்கப்பட்டுள்ளது.
  • தன்னார்வலர்கள் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த திரு ஜெயசீலன், மதுரை மெப்கோ சிலீக் பொறியியல் கல்லூரியின் வரதராஜன் ஆகியோர் விருது பெற்றுள்ளனர்.
‘ஸ்வச் வாயு சர்வேக்ஷன்’ - தேசிய மாசற்ற காற்றுத் திட்டத்தின் (NCAP) கீழ் நகரங்களின் தரவரிசை
  • மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சர்களின் இரண்டு நாள் தேசிய மாநாடு 2022 செப்டம்பர் 23-24 தேதிகளில் குஜராத்தின் ஏக்தா நகரில் நடைபெற்றது. இந்த மாநாட்டை காணொலி காட்சி மூலம் பிரதமர் தொடங்கி வைத்தார்.
  • மாசுபாட்டைக் கட்டுப்படுத்துதல் மற்றும் தடுப்பது தொடர்பாக நடைபெற்ற ஒரு அமர்வின் போது, ‘ஸ்வச் வாயு சர்வேக்ஷன்’ - தேசிய மாசற்ற காற்றுத் திட்டத்தின் (NCAP) கீழ் நகரங்களின் தரவரிசை மற்றும்  வழிகாட்டுதல்கள் குறித்து மாநிலங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.
  • மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சரின் வழிகாட்டுதலின் கீழ், ‘ஸ்வச் வாயு சர்வேக்ஷன்’ தொடங்கப்பட்டு, தேசிய மாசற்ற காற்று திட்டத்தின் (NCAP) கீழ் நகர செயல் திட்டங்களை செயல்படுத்துவதற்காக நாட்டின் 131 நகரங்களுக்கு தரவரிசை வழங்கப்படும்.
  • அந்த 131 நகரங்கள் மக்கள்தொகை அடிப்படையில் மூன்று குழுக்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட முதல் குழுவில் 47 நகரங்கள் உள்ளன.
  • 3 முதல் 10 லட்சம் மக்கள்தொகை கொண்ட இரண்டாவது குழுவில் 44 நகரங்கள் உள்ளன. மூன்றாவது குழுவில் 3 லட்சத்திற்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட 40 நகரங்கள் உள்ளன.
  • பிராணா ஆன்லைன் போர்ட்டல் மூலம் நகரங்கள் சுய மதிப்பீட்டைச் செய்ய வேண்டும். இந்த மதிப்பீடு ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படுகிறது.
  • திடக்கழிவு மேலாண்மை, சாலை தூசு மேலாண்மை, கட்டுமானம் மற்றும் தகர்ப்பு கழிவு மேலாண்மை, வாகன உமிழ்வைக் கட்டுப்படுத்துதல் மற்றும் தொழில்துறை மாசுபாடு ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்ட  நடவடிக்கைகள் மற்றும் செயல்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நகரங்கள் தெரிவிக்க வேண்டும்.
மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள பிட்ஸ்பர்க்கில் நடந்த "உலக தூய்மை எரிசக்தி நடவடிக்கை அமைப்பு 2022" இல் உரையாற்றினார்
  • அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள பிட்ஸ்பர்க்கில் "உலகளாவிய தூய்மையான எரிசக்தி  நடவடிக்கை அமைப்பு -2022" இல், மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயர்மட்ட இந்திய குழுவுக்கு  தலைமை ஏற்றுள்ள மத்திய அமைச்சர்  டாக்டர் ஜிதேந்திர சிங் உரையாற்றினார். 
  • போக்குவரத்துத் துறையில் இருந்து பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதில் நிலையான உயிரி எரிபொருள்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. நிகர பூஜ்ஜிய முயற்சிகளை பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து ஊக்குவித்து கண்காணித்து வருகிறார் என்றார் அவர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel