மருத்துவ சிகிச்சை முறைகள் தமிழகம் - மேகாலயா ஒப்பந்தம்
- மேகாலயா மாநிலத்தின் சுகாதாரத் துறை அமைச்சர் ஜேம்ஸ் ஜே.கே.சங்மா, முதன்மை செயலர் சம்பத்குமார், செயலர்கள் ஜோரோம்பேடா, ஆர்.எம்.குர்பா அடங்கிய குழுவினர், இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்து உள்ளனர்.
- இக்குழுவினர், சென்னை ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன், செயலர் செந்தில்குமார் ஆகியோரை நேற்று சந்தித்தனர்.
- அப்போது, ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல அவசர சிகிச்சை, உயிர் காக்கும் மயக்கவியல் திறன், மீயொலி கருவி ஆகிய பயிற்சிகள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
- சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனீஷ்வர்நாத் பண்டாரி கடந்த 12ம் தேதி பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து, உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி எம். துரைசாமியை பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டிருந்தார்.
- நீதிபதி துரைசாமி வரும் 21ம் தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ளார். இதனையடுத்து தற்போது சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதியாக உள்ள நீதிபதி டி.ராஜாவை பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
- இந்திய – கடலோரக் காவல் படையின் கூட்டுப்பயிற்சி “அபியாஸ் - 01/22” சென்னையில் நடைபெற்றது. இரு நாட்டு கடற்படையின் திறன்களை வெளிப்படுத்தும் வகையிலும், கூட்டு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் வகையிலும் இப்பயிற்சி நடைபெற்றது. மேலும் கடலோர தேடுதல் மற்றும் மீட்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையிலும், இந்தப் பயிற்சி நடத்தப்பட்டது.
- கடற்படையின் பல்வேறு உத்திகள், கடத்தப்பட்ட கப்பலில் இருக்கும் ஊழியர்களை மீட்பது, கொள்ளை சம்பவங்களுக்கு எதிரான நடவடிக்கை ஆகியவை தொடர்பாக இப்பயிற்சி முக்கியமாக மேற்கொள்ளப்பட்டது.
- நான்கு நாள் பயணம் மேற்கொள்ளும் அமெரிக்காவின் கடலோர காவல் படையின் கப்பல் கட்டர் மிட்கெட், நல்லெண்ண அடிப்படையில் இன்று சென்னை வந்தடைந்தது.