வங்கதேச பயிற்சியாளராக ஸ்ரீராம் நியமனம்
- ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை மற்றும் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி 20 உலகக் கோப்பைக்கு ஸ்ரீதரன் ஸ்ரீராம் பயிற்சியாளராக செயல்படுவார் என வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
- 46 வயதான ஸ்ரீதரன் ஸ்ரீராம் இந்திய அணிக்காக 2000 முதல் 2004 வரையிலான காலக்கட்டத்தில் 8 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார்.
- ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக நீண்ட காலம் பணியாற்றியுள்ளார். ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் துணை பயிற்சியாளராக இருந்துள்ளார்.
தமிழக மின் வாரியத்திற்கு பெஸ்ட் எக்ஸ்போர்ட்டர் விருது 2022
- ஒடிசா மாநிலத்தில் உள்ள மத்திய அரசின், 'கோல் இந்தியா' நிறுவனத்திற்கு சொந்தமான, 'தால்சர், ஐ.பி.,வேலி' ஆகிய சுரங்கங்களில் இருந்து எடுக்கப்படுகிறது.
- பின், அம்மாநிலத்தில் உள்ள பாரதீப் துறைமுகத்திற்கு அனுப்பப்படுகிறது. அங்கிருந்து, கப்பல்களில் நிலக்கரி ஏற்றி, தமிழகத்திற்கு எடுத்து வரப்படுகிறது.
- பாரதீப் துறைமுக ஆணையம், 2021 - 22ம் நிதியாண்டில், 'பெஸ்ட் எக்ஸ்போர்ட்டர்' என்ற பிரிவின் கீழ் அதிக நிலக்கரியை கையாண்டதற்காக, தமிழக மின் வாரியத்திற்கு விருது வழங்கி உள்ளது.
தேசிய பாதுகாப்பு உத்திகள் (என்எஸ்எஸ்) தொடர்பான மாநாடு
- டெல்லியில் நடந்த தேசிய பாதுகாப்பு உத்திகள் (என்எஸ்எஸ்) தொடர்பான மாநாட்டில் பங்கேற்ற உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில், 'அனைத்து மாநிலங்களும் தேசிய பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்; நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்திற்கான திட்டங்களை வகுத்து ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்.
- எல்லைப் பகுதிகளில் நடைபெறும் மக்கள்தொகை மாற்றங்களை எல்லை மாநிலங்களின் டிஜிபிகள் கண்காணிக்க வேண்டும். மாநில, மாவட்ட எல்லைகளில் அனைத்து தொழில்நுட்ப வசதிகளையும் உள்ளடக்கிய தகவல் தொழில்நுட்பங்களை மேம்படுத்த வேண்டும். ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாத எதிர்ப்பு, வடகிழக்கில் தீவிரவாதக் குழுக்கள் மற்றும் இடதுசாரி தீவிரவாதம் உள்ளிட்டவை கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றன.
- தேசிய தானியங்கி கைரேகை அடையாள அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. போதை பொருளை கண்டுபிடிப்பது மட்டுமின்றி, அதன் வலையமைப்பை முற்றிலுமாக அகற்ற வேண்டும்.
- மாநில காவல்துறையின் பாதுகாப்பு அமைப்பை வலுப்படுத்த 5ஜி தொழில்நுட்பத்தை நன்றாகப் பயன்படுத்த வேண்டும். உளவுத்துறையில் நவீன முறைகளை கையாள வேண்டும். தொழில்நுட்பத்துடன், மனித நுண்ணறிவைப் பயன்படுத்தவும் வேண்டும்' என்றார். இரண்டு நாள் நடந்த இந்த மாநாட்டில், சுமார் 600 அதிகாரிகள் பங்கேற்றனர்.
- தீவிரவாத எதிர்ப்பு, மாவோயிஸ்டுகள் எதிர்ப்பு படை, கிரிப்டோகரன்சி, ட்ரோன் தொழில்நுட்பம், இணையம் மற்றும் சமூக ஊடக கண்காணிப்பு, தீவுகள், துறைமுகங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
- மேலும் 5ஜி தொழில்நுட்பம், மக்கள்தொகை மாற்றங்கள், எல்லைப் பகுதிகளில் வளர்ந்து வரும் தீவிரமயமாக்கல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஆகியன குறித்தும் விவாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- டார்வினில் ஆகஸ்ட் 19 முதல் செப்டம்பர் 8 வரை நடைபெறும் பிட்ச் பிளாக் 2022 ராணுவ பயிற்சியில் பங்கேற்பதற்காக இந்திய விமானப்படைப்பிரிவு ஆஸ்திரேலியா சென்றுள்ளது.
- ஆஸ்திரேலிய விமானப்படையால் பல நாடுகளின் பங்கேற்புடன் இந்தப் பயிற்சி இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. கடந்த முறை இந்தப் பயிற்சி 2018ல் நடைபெற்றது.
- கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக, 2020க்கான பயிற்சி ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டின் பயிற்சியில் பல்வேறு விமானப்படைகளைச் சேர்ந்த 100 போர் விமானங்களும், 2500 ராணுவ வீரர்களும் பங்கேற்கிறார்கள்.
- அணித்தலைவர் ஒய்பிஎஸ் நேகி தலைமையிலான இந்திய விமானப்படையின் அணியில் 100 விமாப்படை வீரர்கள் பங்கேற்கின்றனர். சூ-30 எம்கேஐ விமானப்படை விமானங்கள் நான்கும், சி -17 போர் விமானம் இரண்டும் இடம்பெற்றுள்ளன.
- 2022, ஜூலை மாதத்திற்கான விவசாய மற்றும் கிராமப்புற தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் (அடிப்படை 1986-87=100) 6 புள்ளிகள் அதிகரித்து முறையே 1131 மற்றும் 1143 ஆக உள்ளது.
- அரிசி, கோதுமை- ஆட்டா, கம்பு, தானியங்கள், பால், மீன் வெங்காயம், பச்சை/ காய்ந்த மிளகாய், இஞ்சி, காய்கறிகள், பழங்கள் போன்றவற்றின் விலை உயர்வே, விவசாய மற்றும் கிராமப்புற தொழிலாளர்களுக்கான பொது குறியீட்டு உயர்வுக்கு முக்கிய காரணமாக உள்ளது.
- இந்தக் குறியீட்டு உயர்வு, மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட்டது. விவசாயத் தொழிலாளர்களைப் பொறுத்தவரை, 20 மாநிலங்களில் 1 புள்ளி முதல் 13 புள்ளிகள் வரை உயர்ந்துள்ள வேளையில், 1301 புள்ளிகளுடன் தமிழகம் பட்டியலில் முதலிடத்திலும், 890 புள்ளிகளுடன் இமாச்சலப் பிரதேசம் கடைசி இடத்திலும் உள்ளன.
- கிராமப்புறத் தொழிலாளர்களைப் பொறுத்தவரை, 20 மாநிலங்களில் 1 முதல் 13 புள்ளிகள் அதிகரித்துள்ள நிலையில், தமிழகம் 1290 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், இமாச்சலப் பிரதேசம் 942 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும் உள்ளன.