Type Here to Get Search Results !

TNPSC 19th JULY 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

உலக தடகள சாம்பியன்ஷிப் 2022

  • அமெரிக்காவின் யூஜின் நகரில் உலக தடகள சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான டிரிப்பிள் ஜம்ப்பில் வெனிசுலாவின் யூலிமர் ரோஜாஸ் 15.47 மீட்டர் தூரம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றார். 
  • 2017 மற்றும் 2019-ம் ஆண்டுகளிலும் அவர், தங்கம் வென்றிருந்தார். ஜமைக்காவின் ஷானிகா ரிக்கெட்ஸ் 14.89 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப் பதக்கமும், அமெரிக்காவின் டோரி பிராங்க்ளின் 14.72 மீட்டர் தூரம் தாண்டி வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.
  • ஆடவருக்கான 3,000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் இறுதிப் போட்டியில் இந்தியாவின் அவினாஷ் சேபிள் 11-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தார். 
  • பந்தய தூரத்தை அவர், 8:31.75 விநாடிகளில் கடந்தார். மொராக்கோவின் சோபியான் பந்தய தூரத்தை 8:25.13 விநாடிகளில் அடைந்து தங்கம் வென்றார். எத்தியோப்பியாவின் லமேச்சா கிர்மா (8:26.01) வெள்ளிப் பதக்கமும், கென்யாவின் கான்செஸ்லஸ் கிப்ருடோ (8:27.92) வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.
  • மகளிருக்கான 1500 மீட்டர் ஓட்டத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 12 வீராங்கனைகள் தங்கப் பதக்கத்திற்கு போட்டியிட்டனர். இதில் கென்யாவை சேர்ந்த ஃபெய்த் கிபியேகான் அசுர வேகத்தில் இலக்கை எட்டி முதலிடம் பிடித்தார். 
  • இவர் 3 நிமிடம் 55.96 வினாடிகளில் இலக்கை எட்டி தங்கப்பதக்கம் வென்று குதூகலித்தார். எத்தியோப்பியாவைச் சேர்ந்த கிடாவ் சேகே 3 நிமிடம் 54.52 வினாடிகளில் இலக்கை கடந்து 2ம் இடத்தை பிடித்தார்.
  • மகளிருக்கான ட்ரிபிள் ஜம்ப் போட்டியில் வெனிசுலா வீராங்கனை யூலிமார் ரோஜாஸ் தங்கபதக்கத்தை கைப்பற்றினார். இவர் தனது 2வது வாய்ப்பால் 15.47 மீ தூரம் தாண்டினார். அதுவே அவருக்கு முதலிடத்தை பிடித்து கொடுத்தது. 
  • இந்த பிரிவில் ஜமைக்காவின் ரிக்கெட்ஸ் மற்றும் அமெரிக்காவின் பிராங்க்ளின் ஆகியோர் முறையே வெள்ளி, வெண்கல பதக்கங்களை வென்றனர். 
  • ஆடவருக்கான உயரம் தாண்டுதலில் தங்கத்திற்காக 11 வீரர்கள் களத்தில் குதித்தனர். அதில் கத்தார் நாட்டை சேர்ந்த முத்தாஸ் இஷா மார்ஸம் என்பவர் தனது முதல் வாய்ப்பிலேயே 2.37 மீ உயரம் தாண்டி தங்கம் வென்றனர்.

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் - இந்திய ஜோடிக்கு வெண்கலப் பதக்கம்

  • உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் தொடர் கொரியாவின் சாங்வான் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் 25 மீட்டர் ரேபிட் ஃபயர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் அனிஷ் பன்வாலா, ரிதம் சங்வான் ஜோடி வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் செக் குடியரசின் அனா டெடோவா, மார்ட்டின் போத்ராஸ்கி ஜோடியை எதிர்த்து விளையாடியது.
  • இதில் அனிஷ் பன்வாலா, ரிதம் சங்கவான் ஜோடி 16-12 என்ற கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கம் பெற்றது. உலகக் கோப்பையில் அனிஷ், ரிதம் ஜோடி பதக்கம் வெல்வது இது 2-வது முறையாகும். 
  • கடந்த அண்டு கெய்ரோவில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் இதே பிரிவில் இந்த ஜோடி தங்கம் வென்றிருந்தது. சாங்வான் உலகக் கோப்பை தொடரில் இதுவரை இந்தியா 5 தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.

உலக துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்

  • தென் கொரியாவில் உள்ள சான் குவாங்கில் நடைபெற்று வரும் உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆடவருக்கான ஸ்கீட் இறுதி சுற்றில் கொரியாவின் மின்சு கிம்மை இந்தியாவின் மைராஜ் கான் எதிர் கொண்டார். 
  • மின்சு கிம் 3 முறை உலக சாம்பியன் பட்டத்தையும், 2 முறை ஒலிம்பிக் பதக்கங்களையும் கைப்பற்றியவர் ஆவார். ஆதலால், மைராஜ் கானுக்கு பதக்கம் என்பது சவாலான நிலையில் நேர்த்தியாக சுட்டு மின்சு கிம்மை 40க்கு 37 என்ற கணக்கில் தோற்கடித்தார்.
  • இங்கிலாந்தில் பேன் லிவினின் வெண்கல பதக்கத்தை வென்றார். இந்த வெற்றியின் மூலம் இந்தியாவின் தங்க கணக்கு 5ஆக அதிகரித்துள்ளது. 5 வெள்ளி, 3 வெண்கல பதக்கங்களையும் கைப்பற்றி பதக்க பட்டியலில் இந்தியா தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.
25 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் 68 நகரங்களில் FAME-II இன் கீழ் 2,877 மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களுக்கு ஒப்புதல்
  • கனரகத் தொழில்துறை அமைச்சகம் 25 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த  68 நகரங்களில் 2,877 மின்சார வாகன திறனேற்றல்  நிலையங்களுக்கு  ஃபேம் இரண்டாம் கட்டத்தின் கீழ் ஒப்புதல் வழங்கியுள்ளது. 
  • மேலும், இந்தத் திட்டத்தின் கீழ் 9 விரைவுச் சாலைகள் மற்றும் 16 நெடுஞ்சாலைகளில் 1576 மின் திறனேற்றல் நிலையங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஃபேம் இந்தியா திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ், 01.07.2022 நிலவரப்படி 479 திறனேற்றல்  நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.
  • மின்சார வாகனங்களின் பெரிய அளவிலான பயன்பாட்டிற்கு தேவையான உள்கட்டமைப்பை மேம்படுத்த, அரசாங்கம் 2015 இல் FAME இந்தியா என்ற திட்டத்தை உருவாக்கியது. 
  • தற்போது, FAME India திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஏப்ரல் 01, 2019 முதல் 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படுகிறது. ஃபேம்-இந்தியா திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் ரூ. 1000 கோடி மின்னூட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel