Type Here to Get Search Results !

TNPSC 1st JUNE 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

ஆசிய கோப்பை ஹாக்கி: தென் கொரியா சாம்பியன் - இந்தியாவுக்கு வெண்கலம்

  • இந்தோனேசியாவின் ஜகார்தாவில் நடந்த இத்தொடரின் லீக் சுற்றில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்றன.  இறுதிப் போட்டியில் தென் கொரியா 2-1 என்ற கோல் கனக்கில் மலேசியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. மலேசியா வெள்ளிப் பதக்கம் பெற்றது.
  • முன்னதாக, 3வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்தியா - ஜப்பான் மோதின.  இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் வென்று 3வது இடம் பிடித்த மனநிறைவுடன் நாடு திரும்புகிறது. 

உக்ரைனுக்கு நவீன ராக்கெட் - அமெரிக்கா ஒப்புதல்

  • கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது.
  • இந்நிலையில், ரஷ்ய படைகளை சமாளிக்க உக்ரைனுக்கு 4,900 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெலிகாப்டர்கள், பீரங்கி எதிர்ப்பு தளவாடங்கள் உள்ளிட்டவற்றை வழங்க அமெரிக்க பார்லி., ஒப்புதல் வழங்கியுள்ளது. 

தேசிய அளவில் கல்வி அமைச்சர்களுக்கான மாநாடு - தமிழக அரசு புறக்கணிப்பு

  • குஜராத்தில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில், தேசிய அளவில் கல்வி அமைச்சர்களுக்கான இரண்டு நாள் மாநாடு புதன் (ஜூன் 1) மற்றும் வியாழக்கிழமைகளில் (ஜூன் 2) நடைபெறுகிறது. 
  • இந்த மாநாட்டில் பங்கேற்க தமிழ்நாடு உட்பட இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் கல்வி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு மத்திய அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
  • குஜராத்தில் நடைபெறும் இந்த கல்வி அமைச்சர்கள் மாநாட்டில், புதிய தேசிய கல்விக் கொள்கை, பள்ளி கட்டமைப்புகள் மேம்பாடு போன்ற விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது. 
  • மேலும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது குறித்து இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ள கல்வி அமைச்சர்களுடன் கலந்தாலோசிக்கிறார்.
  • இந்தநிலையில், இன்று முதல் நாள் மாநாடு நடைபெற்ற நிலையில், இந்த மாநாட்டை தமிழக அரசு புறக்கணித்துள்ளது. தமிழகத்தில் இருந்து யாரும் இந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை. 
  • தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இருவரும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை. 
  • மேலும் தமிழக அரசு சார்பில் கல்வித்துறை செயலாளர்கள் யாரும் மாநாட்டில் கலந்துக்கொள்ளவில்லை.

மே 2022 மாதம் ஜி.எஸ்.டி., வசூல் 1.41 லட்சம் கோடி ரூபாய்

  • கடந்த மே மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.41 லட்சம் கோடி ரூபாயாகும். இது, கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடும்போது 44 சதவீதம் அதிகமாகும்.
  • கடந்த ஆண்டு மே மாதத்தில் 97 ஆயிரத்து, 821 கோடி ரூபாய் வசூல் ஆகியிருந்தது. இருப்பினும், கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது, இது குறைவாகும். 
  • கடந்த ஏப்ரலில் வரலாற்று சாதனை அளவாக 1.68 லட்சம் கோடி ரூபாய் வசூலாகி இருந்தது. இதற்கு முந்தைய மார்ச்சில், 1.42 லட்சம் கோடி ரூபாய் வசூலாகி இருந்தது. 
  • வரி வசூலை பொறுத்த வரை, ஜி.எஸ்.டி., அறிமுகம் ஆனதிலிருந்து, நான்காவது மாதமாக 1.40 லட்சம் கோடி ரூபாயை தாண்டி, மே மாதத்தில் வசூல் ஆகியுள்ளது.

இந்தியாவிலேயே அதிக கோயில்கள் கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் - மும்பை ஐஐடி ஆய்வில் தகவல்

  • நாட்டில் உள்ள கோயில்கள் குறித்து மும்பை ஐஐடி மாணவர்கள் ஆய்வு ஒன்றை நடத்தினர். இதில் தமிழகத்தில் அதிகமாக 79,154 கோயில்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. 
  • இதற்கு அடுத்தப்படியாக மகாராஷ்டிராவில் 77,283 கோயில்களும், கர்நாடகாவில் 61,232 கோயில்களும், மேற்கு வங்கத்தில் 53,658 கோயில்களும், குஜராத்தில் 49,995 கோயில்களும் உள்ளதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.
  • தமிழகத்தில் 1 லட்சம் பேருக்கு 103 கோயில்களும், மகாராஷ்டிராவில் 1 லட்சம் பேருக்கு 62 கோயில்களும் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவுகள் கோயில்களை மையப்படுத்தி சுற்றுலா தளங்களை ஈர்க்க வாய்ப்பாக அமையும் என தமிழக அரசின் சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel