Type Here to Get Search Results !

TNPSC 19th JUNE 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

பிரகதி மைதான ஒருங்கிணைந்த போக்குவரத்து வழித்தட திட்டத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்

  • பிரகதி மைதான ஒருங்கிணைந்த போக்குவரத்து வழித்தட திட்டத்தின் பிரதான சுரங்கப்பாதை மற்றும் ஐந்து சுரங்கப்பாதைகளை பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். 
  • ஒருங்கிணைந்த போக்குவரத்து வழித்தட திட்டமானது பிரகதி மைதான மறுமேம்பாட்டு திட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும். மத்திய அமைச்சர்கள் திரு பியூஷ் கோயல், திரு ஹர்தீப் சிங் பூரி, திரு சோம் பிரகாஷ், திருமதி அனுப்ரியா படேல் மற்றும் திரு கவுஷல் கிஷோர் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்தியாவில் பள்ளிக் கல்வியில் தகவல் தொடர்பு தொழில்நுட்ப பயன்பாடு யுனெஸ்கோவின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது
  • மத்திய கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வித் துறையின் பிரதமரின் இ-வித்யா என்ற விரிவான முன்முயற்சியின் கீழ், குறிப்பாக பெருந்தொற்று காலத்தில் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தைப்  பயன்படுத்தியது,  
  • யுனெஸ்கோவின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. 2020 மே 17 அன்று கல்வி அமைச்சகத்தால் தற்சார்பு இந்தியா  திட்டத்தின் ஒரு பகுதியாக பிரதமரின் இ-வித்யா தொடங்கப்பட்டது, 
  • இது தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கல்வியை வழங்குவதற்கான பல முறை அணுகலை செயல்படுத்த டிஜிட்டல்/ஆன்லைன்/ஆன்-ஏர் கல்வி தொடர்பான அனைத்து முயற்சிகளையும் ஒருங்கிணைக்கிறது. 
  • கற்றல் இழப்புகளை குறைக்க. மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையின் கீழ் தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (என்சிஇஆர்டி) ஒரு அங்கமான மத்திய கல்வித் தொழில்நுட்ப நிறுவனம் யுனெஸ்கோவின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. 
  • 2021 ஆம் ஆண்டிற்கான கல்வியில் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதற்காக யுனெஸ்கோவின் மன்னர் ஹமத் பின் இசா அல்-கலிஃபா பரிசு வழங்கப்பட்டது.
  • இந்த விருது "நிலையான வளர்ச்சிக்கான 2030 நிகழ்ச்சி நிரல் மற்றும் கல்விக்கான 4-ம் இலக்கின் படி, அனைவருக்கும் கல்வி மற்றும் வாழ்நாள் முழுவதும் கற்றல் வாய்ப்புகளை விரிவுபடுத்த புதிய தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதில் புதுமையான அணுகுமுறைகளை அங்கீகரிக்கிறது. 

மாமல்லபுரத்தில் நடைபெறும் போட்டிக்கான செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

  • சர்வதேச ஒலிம்பிக் சங்கமான எப்.ஐ.டி.ஈ ஒலிம்பிக் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக, செஸ் ஒலிம்பியாட் ஜோதி தொடர் ஓட்டத்தை தொடங்கியுள்ளது. 
  • செஸ் விளையாட்டில் இந்தியாவிற்கு உள்ள தொடர்பை மேலும் உச்சத்திற்கு எடுத்துச் செல்லும் விதமாக, செஸ் ஒலிம்பியாட்டுக்கான ஜோதி தொடர் ஓட்டம் இனி எப்போதும் இந்தியாவிலிருந்தே தொடங்கி போட்டி நடைபெறும்.
  • டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விளையாட்டரங்கில் நடந்த விழாவில், எப்.ஐ.டி.ஈ தலைவர் அர்கடி துவார்கோவிச் ஒலிம்பியாட் ஜோதியை பிரதமர் மோடியிடம் வழங்க, அவர் அதனை கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்திடம் ஒப்படைத்தார். 
  • இந்த ஜோதி நாடு முழுவதும் 40 நாட்களுக்குள் 75 நகரங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் ஏற்றிவைக்கப்படும். அனைத்து இடங்களிலும் அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டர்கள் இந்த ஜோதியை பெற்றுக் கொள்வார்கள்.

83-ஆவது தேசிய ஜூனியா், யூத் டேபிள் டென்னிஸ் நித்யஸ்ரீ சாம்பியன்

  • கேரளத்தில் நடைபெறும் 83-ஆவது தேசிய ஜூனியா், யூத் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில், 19 வயதுக்கு உள்பட்ட மகளிா் பிரிவில் தமிழகத்தின் நித்யஸ்ரீ சாம்பியன் ஆனாா்.
  • இறுதிச்சுற்றில் அவா் 4-1 என்ற கணக்கில் தெலங்கானாவின் ரிஷா மஞ்சந்தானியை வீழ்த்தி முதலிடம் பிடித்தாா். இதற்கு முன் மண்டல அளவில் பட்டம் வென்றிருக்கும் நித்யஸ்ரீக்கு, தேசிய அளவில் இது முதல் பட்டமாகும். கோப்பையுடன் ரொக்கப் பரிசாக அவருக்கு ரூ.72,000 வழங்கப்பட்டது.
  • அதேபோல், 17 வயதுக்கு உள்பட்ட மகளிா் பிரிவு இறுதிச்சுற்றில் மகாராஷ்டிரத்தின் தனீஷா கொடிசா 4-0 என்ற கணக்கில் மேற்கு வங்கத்தின் சுபாங்கிரிதா தத்தாவை தோற்கடித்து சாம்பியன் ஆனாா். அவருக்கும் இது முதல் தேசிய பட்டமாகும். இவருக்கு ரூ.60,000 ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel