வரும் நவ.1-ம் தேதி 'உள்ளாட்சிகள் தினம்' - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
- கிராமப்புற மக்களிடையே திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், அரசின் அனைத்து செயல்பாடுகளிலும் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்திடவும், மக்கள் பங்கேற்பை ஊக்குவிக்கவும், இடையில் நடத்தப்படாமல் போன இந்த நிகழ்வு, மக்கள் இயக்கமாக மீண்டும் நவம்பர் 1-ம் தேதி, "உள்ளாட்சிகள் தினமாக"கொண்டாடப்படும்.
- இந்நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி, 2022ம் ஆண்டு முதல் மீண்டும் நவம்பர் 1-ம் தேதி உள்ளாட்சிகள் தினமாக அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் ரூ.31,530 கோடி திட்டம் துவக்கி வைத்தார் பிரதமர் மோடி
- மத்திய அரசு சார்பில், தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட ஐந்து திட்டங்களை, பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். மதுரை - தேனி அகல ரயில் பாதை; தாம்பரம் - செங்கல்பட்டு மூன்றாவது ரயில் பாதை ஆகியவற்றில், ரயில் சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தார். சென்னை - பெங்களூரு விரைவு சாலை உட்பட, புதிதாக ஆறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இவற்றின் மொத்த மதிப்பு, 31 ஆயிரத்து 530 கோடி ரூபாய்.
- சென்னை தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 598 கோடி ரூபாயில் மூன்றாவது ரயில்வே வழித்தட திட்டம்
- சென்னை கலங்கரை விளக்கம் செயல் திட்டத்தின் கீழ், 116 கோடி ரூபாயில், 1,152 வீடுகள் பணி முடிந்து பயனாளிகளிடம்ஒப்படைத்தல்
- மதுரை - தேனி இடையே 506 கோடி ரூபாயில் அகல ரயில்வே வழித்தடம்
- எண்ணுார் - செங்கல்பட்டு இடையே 849 கோடி ரூபாயிலும்; திருவள்ளூர் - பெங்களூரு இடையே 911 கோடி ரூபாயிலும் குழாய் வழியே இயற்கை எரிவாயு எடுத்து செல்லும் திட்டங்கள் துவக்கப்பட்டன.
- சென்னை - பெங்களூரு இடையே 14 ஆயிரத்து 872.32 கோடி ரூபாயில் நான்கு வழி விரைவுச் சாலை
- சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையே 5,852 கோடி ரூபாயில், இரண்டடுக்கு உயர்மட்ட மேம்பால சாலை அமைத்தல்
- திருவள்ளூர் மாவட்டம் மப்பேடில், 1,428 கோடி ரூபாயில், பல்முனை சரக்கு போக்குவரத்து பூங்கா
- தர்மபுரி - பெங்களூரில் உள்ள நெரளூரு இடையே 3,871 கோடி ரூபாயில் நான்கு வழிச்சாலை; அரியலுார் மாவட்டம், மீன் சுருட்டி - கடலுார் மாவட்டம், சிதம்பரம் இடையே 724 கோடி ரூபாயில் இருவழிச்சாலை அமைத்தல்
- சென்னை எழும்பூர், ராமேஸ்வரம், மதுரை, காட்பாடி, கன்னியாகுமரி ரயில் நிலையங்கள், 1,803 கோடி ரூபாயில் மறு சீரமைத்தல் உட்பட, மொத்தம் 31 ஆயிரத்து 530 கோடி மதிப்பிலான திட்டங்களையும், பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
சர்வதேச நீளம் தாண்டுதல் - ஸ்ரீசங்கருக்கு தங்கம்
- உலக தடகள போட்டிக்கு முன்னோட்டமாக நீளம், உயரம் தாண்டுதலுக்கான 12வது சர்வதேச போட்டி கிரீசில் உள்ள கலிதியா நகரில் நடக்கிறது.
- அதன் ஆடவர் நீளம் தாண்டுதல் பிரிவின் இறுதி ஆட்டம் நடந்தது. அதில் இந்திய வீரர் முரளி ஸ்ரீசங்கர் 8.31மீட்டர் தாண்டி புதிய தேசிய சாதனை படைத்ததுடன் தங்கப் பதக்கமும் வென்றார்.
- சுவீடன் வீரர் சோபியாஸ் மான்ட்லர் 8.27மீட்டர் தாண்டி வெள்ளியும், பிரான்ஸ் வீரர் ஜூல்ஸ் பொம்மெரி 8.17மீட்டர் தாண்டி வெண்கலமும் வென்றனர்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி - 'மூடிஸ்' நிறுவனத்தின் கணிப்பு
- புதுடில்லி-நடப்பு ஆண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8.8 சதவீதமாக இருக்கும் என, 'மூடிஸ் இன்வெஸ்டார்ஸ் சர்வீஸ்' நிறுவனம் அறிவித்துள்ளது.
- நடப்பு 2022ம் ஆண்டுக்கான நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 9.1 சதவீதமாக இருக்கும் என முன்னர் கணித்து அறிவித்திருந்த நிலையில், அதை தற்போது குறைத்து, 8.8 சதவீதமாக அறிவித்துள்ளது, மூடிஸ் நிறுவனம்.
தேசிய பெண் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மாநாடு 2022-ஐ குடியரசுத்தலைவர் தொடங்கி வைத்தார்
- தேசிய பெண் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மாநாடு-2022-ஐ குடியரசுத்தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் திருவனந்தபுரத்தில் இன்று (26.05.2022) தொடங்கி வைத்தார். விடுதலைப் பெருவிழாவின் ஒரு பகுதியாக இம்மாநாட்டிற்கு கேரள சட்டப்பேரவை ஏற்பாடு செய்துள்ளது.