முதல் பெண் போர் விமானியாக அபிலாஷா பராக் பொறுப்பேற்பு
- பிரிட்டன் ராணுவத்தின் ராயல் விமானப் படை, நம் நாட்டில் ராணுவ விமானப் பிரிவை 1942ல் துவங்கியது. இதன் முதல் விமானம் 1947ல் இயங்க துவங்கியது. நம் ராணுவத்துக்கான பிரத்யேக விமானப் படை 1986ல் துவக்கப்பட்டது.
- இதில், போர் விமானியாக பெண்கள் இருந்ததில்லை.இந்நிலையில், நம் ராணுவ விமான படையில் முதல் பெண் போர் விமானியாக அபிலாஷா பராக் பொறுப்பேற்றார். பயிற்சி முடித்த 36 ராணுவ விமானிகளுடன் அபிலாஷாவும் நேற்று பொறுப்பேற்றார்.
ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்தின் மீதமுள்ள 29.5% பங்கும் விற்பனை - ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்
- பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடந்த ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில், ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்தில் அரசுக்கு மீதமுள்ள 29.5 சதவீத பங்கையும் விற்பனை செய்ய முடிவு எடுக்கப்பட்டது.
- இதன் மூலம் அரசுக்கு ₹38 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும். இது, நடப்பு நிதியாண்டில் பொதுத்துறை பங்கு விற்பனை மூலம் ₹65,000 கோடி நிதி திரட்டும் ஒன்றிய அரசின் இலக்கையும் எட்ட உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது.
- கடந்த 2002ம் ஆண்டு வரை ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்தின் 100 சதவீத பங்கை ஒன்றிய அரசு வைத்திருந்தது. பின்னர், அதில் 26 சதவீத பங்குகள் ₹445 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டன. இதை வேதாந்தா குழுமம் வாங்கியது.
- தற்போது ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்தின் 64.92 சதவீத பங்கை வேதாந்தா நிறுவனம் சொந்தமாக்கி உள்ளது. இதில், ஒன்றிய அரசு வசமுள்ள 29.5 சதவீத பங்கையும் தற்போது விற்க உள்ளதால், மொத்த நிறுவனமும் ஒன்றிய அரசின் கையை விட்டு போக உள்ளது.
இந்தியா-பங்களாதேஷ் கடற்படை கூட்டுப்பயிற்சி போங்கோசாகர் தொடங்கியது
- இந்தியா-பங்களாதேஷ் கடற்படை இடையேயான மூன்றாவது போங்கோசாகர் கூட்டுப்பயிற்சி பங்களாதேஷில் உள்ள மோங்கலா துறைமுகத்தில் மே 24, 2022-ல் துவங்கியது.
- துறைமுகப் பயிற்சி மே 24, 25 ஆகிய நாட்களிலும், அதைத் தொடர்ந்து கடற்பயிற்சி வங்கக்கடலின் வடக்குப் பகுதியில் மே 26, 27 ஆகிய நாட்களிலும் நடைபெறுகிறது.
- இருநாட்டு கடற்படையின் திறனை மேம்படுத்தும் நோக்கில் போங்கோசாகர் கூட்டுகடற்படை பயிற்சி நடைபெறுகிறது.
- இந்திய கடற்படை கப்பல் கோரா, உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ஏவுகணை போர்க் கப்பலான கொர்வெட், கடற்படை ரோந்து கப்பலான சுமேதா ஆகியவை பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.
- பங்களாதேஷ் கடற்படை தரப்பில் அபு உபைதா, அலி ஹைதர் ஆகிய போர்கப்பல்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.
- புதுதில்லியில், இந்திய - யுஏஇ கூட்டு பாதுகாப்பு ஒத்துழைப்புக் குழுவின் 11-வது கூட்டம் நடைபெற்றது. இதில், ஐக்கிய அரபு அமீரக பாதுகாப்பு அமைச்சகத்தின் மேம்பாட்டு ராணுவ ஆணைய தலைவர் மேஜர் ஜெனரல் ஸ்டாஃப் ஹசன் முகமது சுல்தான் பானி ஹம்மத், இந்திய பாதுகாப்புத்துறை செயலர் அஜய் குமாரை தில்லியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
- அப்போது, இருநாடுகளுக்கிடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பான வழிகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். மேலும், இருநாடுகளிடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில், இணைந்து செயல்படுவதற்கான புதிய வழிகளை கண்டறியவும், ஆய்வு செய்யவும் முடிவு செய்யப்பட்டது.
- இருநாடுகளிடையே தற்போதுள்ள கூட்டு பயிற்சிகளின் நோக்கம், அதிலுள்ள சிக்கல்களை களைவது ஆகியவை குறித்தும் விவாதிக்கப்பட்டது.