Type Here to Get Search Results !

TNPSC 25th MAY 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

முதல் பெண் போர் விமானியாக அபிலாஷா பராக் பொறுப்பேற்பு

  • பிரிட்டன் ராணுவத்தின் ராயல் விமானப் படை, நம் நாட்டில் ராணுவ விமானப் பிரிவை 1942ல் துவங்கியது. இதன் முதல் விமானம் 1947ல் இயங்க துவங்கியது. நம் ராணுவத்துக்கான பிரத்யேக விமானப் படை 1986ல் துவக்கப்பட்டது. 
  • இதில், போர் விமானியாக பெண்கள் இருந்ததில்லை.இந்நிலையில், நம் ராணுவ விமான படையில் முதல் பெண் போர் விமானியாக அபிலாஷா பராக் பொறுப்பேற்றார். பயிற்சி முடித்த 36 ராணுவ விமானிகளுடன் அபிலாஷாவும் நேற்று பொறுப்பேற்றார். 

ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்தின் மீதமுள்ள 29.5% பங்கும் விற்பனை - ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

  • பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடந்த ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில், ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்தில் அரசுக்கு மீதமுள்ள 29.5 சதவீத பங்கையும் விற்பனை செய்ய முடிவு எடுக்கப்பட்டது. 
  • இதன் மூலம் அரசுக்கு ₹38 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும். இது, நடப்பு நிதியாண்டில் பொதுத்துறை பங்கு விற்பனை மூலம் ₹65,000 கோடி நிதி திரட்டும் ஒன்றிய அரசின் இலக்கையும் எட்ட உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது.
  • கடந்த 2002ம் ஆண்டு வரை ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்தின் 100 சதவீத பங்கை ஒன்றிய அரசு வைத்திருந்தது. பின்னர், அதில் 26 சதவீத பங்குகள் ₹445 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டன. இதை வேதாந்தா குழுமம் வாங்கியது. 
  • தற்போது ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்தின் 64.92 சதவீத பங்கை வேதாந்தா நிறுவனம் சொந்தமாக்கி உள்ளது. இதில், ஒன்றிய அரசு வசமுள்ள 29.5 சதவீத பங்கையும் தற்போது விற்க உள்ளதால், மொத்த நிறுவனமும் ஒன்றிய அரசின் கையை விட்டு போக உள்ளது.

இந்தியா-பங்களாதேஷ் கடற்படை கூட்டுப்பயிற்சி போங்கோசாகர் தொடங்கியது

  • இந்தியா-பங்களாதேஷ் கடற்படை இடையேயான மூன்றாவது போங்கோசாகர் கூட்டுப்பயிற்சி பங்களாதேஷில் உள்ள மோங்கலா துறைமுகத்தில் மே 24, 2022-ல் துவங்கியது. 
  • துறைமுகப் பயிற்சி மே 24, 25 ஆகிய நாட்களிலும், அதைத் தொடர்ந்து கடற்பயிற்சி வங்கக்கடலின் வடக்குப் பகுதியில் மே 26, 27 ஆகிய நாட்களிலும் நடைபெறுகிறது.  
  • இருநாட்டு கடற்படையின் திறனை மேம்படுத்தும் நோக்கில் போங்கோசாகர் கூட்டுகடற்படை பயிற்சி நடைபெறுகிறது.
  • இந்திய கடற்படை கப்பல் கோரா, உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ஏவுகணை போர்க் கப்பலான கொர்வெட், கடற்படை ரோந்து கப்பலான சுமேதா ஆகியவை பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.  
  • பங்களாதேஷ் கடற்படை தரப்பில் அபு உபைதா, அலி ஹைதர் ஆகிய போர்கப்பல்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.
11-வது இந்திய, யுஏஇ கூட்டு பாதுகாப்பு ஒத்துழைப்பு குழு கூட்டம் தில்லியில் நடைபெற்றது
  • புதுதில்லியில், இந்திய - யுஏஇ கூட்டு பாதுகாப்பு ஒத்துழைப்புக் குழுவின் 11-வது கூட்டம் நடைபெற்றது.  இதில், ஐக்கிய அரபு அமீரக பாதுகாப்பு அமைச்சகத்தின் மேம்பாட்டு ராணுவ ஆணைய தலைவர் மேஜர் ஜெனரல் ஸ்டாஃப் ஹசன் முகமது சுல்தான் பானி ஹம்மத், இந்திய பாதுகாப்புத்துறை செயலர் அஜய் குமாரை தில்லியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
  • அப்போது, இருநாடுகளுக்கிடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பான வழிகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். மேலும், இருநாடுகளிடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில், இணைந்து செயல்படுவதற்கான புதிய வழிகளை கண்டறியவும், ஆய்வு செய்யவும் முடிவு செய்யப்பட்டது.
  • இருநாடுகளிடையே தற்போதுள்ள கூட்டு பயிற்சிகளின் நோக்கம், அதிலுள்ள சிக்கல்களை களைவது ஆகியவை குறித்தும் விவாதிக்கப்பட்டது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel