மாநிலங்கள் இடையேயான கவுன்சில் மாற்றி அமைப்பு
- சர்க்காரியா கமிஷன் பரிந்துரையை அடுத்து, 1990 முதல், மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் அமைக்கப்பட்டது. இது, மத்திய - மாநில அரசுகளுக்கு இடையே எழும் பிரச்னைகளை விவாதித்து தீர்வு காணும். பிரதமர் தலைமையிலான இந்த குழு தற்போது மறுசீரமைக்கப்பட்டுள்ளது.
- இதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைவராக இருப்பார். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள் உறுப்பினர்களாக இருப்பர்.
- இவர்களைத் தவிர, ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிர்மலா சீதாராமன், நரேந்திர சிங் தோமர், ஹர்தீப் சிங் புரி, நிதின் கட்கரி ஆகியோர் உறுப்பினர்களாகவும், மேலும் 10 மத்திய அமைச்சர்கள் நிரந்தர அழைப்பாளர்களாகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
- மேலும், மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சிலின் நிலைக்குழுவும் மறுசீரமைக்கப்பட்டு உள்ளது. இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்
- மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், நரேந்திர சிங் தோமர், வீரேந்திர குமார் மற்றும் கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோர் நிலைக்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
- மேலும், ஆந்திரா, அசாம், பீஹார், குஜராத், மஹாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப் மற்றும் உத்தர பிரதேச முதல்வர்களும் நிலைக்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜப்பானில் பிரதமர் மோடி சுசூகி உள்ளிட்ட முன்னணி தொழில்நிறுவன தலைமை நிர்வாகிகளுடன் ஆலோசனை
- குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ஜப்பான் சென்றுள்ளார். அரசு முறைப் பயணமாக ஜப்பான் நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு பல்வேறு துறைகளைச் சேர்ந்த தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
- இந்த பயணத்தின் ஒருபகுதியாக, டோக்கியோவில் சுசூகி நிறுவனத்தின் மூத்த ஆலோசகர் ஒசாமு சுசூகியை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்
- டோக்கியோவில் ஆடை நிறுவனமான யுனிக்லோவின் தாய் நிறுவனமான ஃபாஸ்ட் ரீடெய்லிங் கோ லிமிடெட்டின் தலைவர் மற்றும் செயல் அதிகாரியான திரு.தடாஷி யனாயை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
டெல்லியின் புதிய துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா
- புதுடெல்லியின் துணை நிலை ஆளுநராக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வினய் குமார் சக்சேனா நியமிக்கப்பட்டுள்ளார். வினய் குமார் நியமனத்தை முறைப்படி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்தார்.
- முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான வினய் குமார், காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் தலைவராக 2015 முதல் பணியாற்றி வந்துள்ளார்.
- இந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை விமரிசையாக கொண்டாடும் மத்திய அரசின் தேசியக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவராகவும் நியமிக்கப்பட்டார்.
தேசிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருது 2021
- ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த புளோரன்ஸ் நைட்டிங்கேல், நர்ஸ் கல்விக்காக போராடியவர். சிறந்த நர்சாக பணியாற்றிய அவருடைய நினைவாக, நம் நாட்டில் ஆண்டுதோறும் சிறந்த நர்சுகளுக்கு விருது வழங்கப்படுகிறது.
- இந்நிலையில், 2021ம் ஆண்டுக்கான தேசிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருதுக்கு, ஒடிசா மாநிலம் பெர்ஹாம்புரில் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரியில் பணியாற்றும் நர்ஸ் ஷிபானி தாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றியதற்காக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவரைத் தவிர, மேற்கு வங்கத்தின் அலிபுர்த்வார் மாவட்டத்தில், தேயிலை தோட்டத்தில் உள்ள பொது சுகாதார நிலையத்தில் பணியாற்றும் ஸ்மிதா கர், புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்தியா-அமெரிக்கா இடையே முதலீட்டு ஊக்குவிப்பு ஒப்பந்தம்
- ஜப்பானில் 'க்வாட்' மாநாடு நடைபெற்ற சமயத்தில் இந்த ஒப்பந்தம் கையொப்பமானது. இந்தியா-அமெரிக்கா வெளியுறவு, பாதுகாப்பு அமைச்சா்கள் பங்கேற்ற 2+2 பேச்சுவாா்த்தை கடந்த மாதம் நடைபெற்றபோது, ஐஐஏ ஒப்பந்தத்துக்கான பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் காணப்படுவதாகத் தெரிவித்திருந்தனா். தற்போது அந்த ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது.
- இந்தியாவில் புதுப்பிக்கத்த எரிசக்தி, வேளாண்மை, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் தனியாா் நிறுவனங்கள் முதலீடுகளை மேற்கொள்வதை டிஎஃப்சி ஊக்குவிப்பதற்கு இந்த ஒப்பந்தம் வழிவகுக்கிறது.
WHO-ன் 'குளோபல் ஹெல்த் லீடர்ஸ்' விருது
- உலக நிறுவனத்தின் 75-வது மாநாடு ஜெனீவாவில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் இந்தியாவில் உள்ள 10 லட்சம் ஆஷா பணியாளர்களுக்கு உலக சுகாதார நிறுவன தலைமை இயக்குனரின் 'குளோபல் ஹெல்த் லீடர்ஸ்' விருது வழங்கப்பட்டுள்ளது.
- உலக அளவில் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் சிறப்பானப் பங்களிப்பு, பிராந்திய அளவில் சுகாதார சேவைகளில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிவர்களுக்கு இந்த விருதை 2019-ம் ஆண்டு முதல் உலக சுகாதார நிறுவனம் வழங்கி வருகிறது.