சென்னை - மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலைக்கு கருணாநிதி பெயர் - நெடுஞ்சாலைத்துறை பவள விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
- தமிழக நெடுஞ்சாலைத்துறையின் 75-வது ஆண்டு பவளவிழா, சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் நடந்தது.
- இதில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், பவளவிழா நினைவுத்தூணை திறந்துவைத்து, விழா மலரையும், முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்ட இலச்சினையையும் வெளியிட்டார்.
- சென்னை மத்திய கைலாஷ்பகுதியில் ரூ.46.54 கோடியில் மேம்பாலம், மதுரை கோரிப்பாளையத்தில் ரூ.199.12 கோடியில் மேம்பாலம், கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் மண்டபம் இடையே ரூ.37 கோடியில் கண்ணாடி இழை நடை மேம்பாலம் ஆகியவற்றுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
- திருச்சி, மதுரை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் ரூ.2,124 கோடியில் 255 கி.மீ. இருவழிச்சாலையை 4 வழிச்சாலையாக மாற்றும் 32 சாலைப் பணிகளையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.
- முதல்வரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வரும் 2026-ம் ஆண்டுக்குள் தமிழகத்தை தரைப்பாலங்களே இல்லாத மாநிலமாக உருவாக்க உள்ளோம்.
- சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்கரைச் சாலைக்கு 'முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி சாலை' என்று பெயர் சூட்டப்படும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
சிஐஏ தலைமைத் தொழில்நுட்ப அதிகாரியாக நந்த் மூல்சந்தானி நியமனம்
- அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ தலைமைத் தொழில்நுட்ப அதிகாரியாக (சிடிஓ) இந்திய வம்சாவளியைச் சோந்த நந்த் மூல்சந்தானி நியமிக்கப்பட்டுள்ளாா். சிஐஏ உருவாக்கியுள்ள இந்தப் பதவிக்குத் தோந்தெடுக்கப்பட்ட முதல் நபா் இவா் என்பது குறிப்பிடத்தக்கது.
- தகவல் தொழில்நுட்பத் துறையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவமிக்க நந்த் மூல்சந்தானியை இந்தப் பொறுப்புக்கு சிஐஏ இயக்குநா் வில்லியம் ஜே.பா்ன்ஸ் தோந்தெடுத்துள்ளாா்.
- முன்னதாக, அவா் அமெரிக்க பாதுகாப்புத் துறையின் செயற்கை நுண்ணறிவு இணை மையத்தில் தலைமைத் தொழில்நுட்ப அதிகாரியாகவும் இடைக்கால இயக்குநராகவும் பணியாற்றியுள்ளாா்.
- நந்த் மூல்சந்தானி புது தில்லியில் பள்ளிப் படிப்பை முடித்தவா். பின்னா், நியூயாா்க் காா்னெல் பல்கலைக்கழகத்தில் இளநிலை அறிவியலும் ஸ்டான்ஃபோா்ட் பல்கலைக்கழகத்தில் முதுநிலை அறிவியலும், ஹாா்வா்ட் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பொது நிா்வாகமும் பயின்றுள்ளாா்.
2022-ம் ஆண்டு ஏப்ரலில் ஜிஎஸ்டி வரி வருவாய் வசூல் இதுவரை இல்லாத அளவுக்கு 1.68 லட்சம் கோடியாக அதிகரிப்பு
- 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வரி வருவாய் 1,67,540 கோடி ரூபாய். இதில் மத்திய ஜிஎஸ்டி வரியாக 33,159 கோடி ரூபாயும், மாநில ஜிஎஸ்டி வரியாக 41,793 கோடி ரூபாயும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரி 81,939 கோடி ரூபாயும் (இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் மூலம் 36,705 கோடி ரூபாயும், வசூல் மற்றும் பொருட்கள், மற்றும் அதன் தீர்வை வரியாக 857 கோடி ரூபாய் உட்பட) தீர்வைத் தொகையாக 10,649 கோடி ரூபாய் அடங்கும்.
- 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வசூல் முன்னெப்போதையும் விட அதிகமாகும். இது கடந்த மார்ச் மாதம் வசூலான ஜிஎஸ்டி தொகையான 1,42,095 ரூபாயை விட 25,000 கோடி ரூபாய் அதிகம்.
- ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரியிலிருந்து மத்திய ஜிஎஸ்டிக்கு 33,423 கோடி ரூபாயும், மாநில ஜிஎஸ்டிக்கு 26,962 கோடி ரூபாயும் மத்திய அரசு விடுவித்துள்ளது.
- 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான வருவாய் கடந்த ஆண்டு இதே மாதத்தின் ஜிஎஸ்டி வருவாயை விட 20% அதிகமாகும். இந்த மாதத்தில், சரக்குகளின் இறக்குமதியின் வருவாய் 30% அதிகரித்துள்ளது.
- உள்நாட்டு பரிவர்த்தனையின் (சேவைகளின் இறக்குமதி உட்பட) வருவாய் கடந்த ஆண்டு இதே மாதத்தில் இருந்த வருவாயை விட 17% அதிகமாகும்
- முதல் முறையாக மொத்த ஜிஎஸ்டி வசூல் 1.5 லட்சம் கோடி ரூபையைத் தாண்டியுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் உருவாக்கப்பட்ட மொத்த மின்வழி சீட்டுகளின் எண்ணிக்கை 7.7 கோடியாகும்.
- இது பிப்ரவரி மாதத்தில் உருவாக்கப்பட்ட 6.8 கோடி மின் - வழிச்சீட்டுகள் விட 13% அதிகமாகும், இது வணிக செயல்பாடுகளின் விரைவான மீட்சியை பிரதிபலிக்கிறது.