உலகளாவிய பட்டிடார் வணிக உச்சிமாநாட்டைப் பிரதமர் தொடங்கி வைத்தார்
- சர்தார்தாம் ஏற்பாடு செய்திருந்த உலகாளவிய பட்டிடார் வணிக உச்சி மாநாட்டைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
- குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர பாய் படேல், மத்திய அமைச்சர்கள், தொழில்துறை தலைவர்கள் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
- பட்டிடார் சமூகத்தின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், 2026 இயக்கத்தின் கீழ், சர்தார்தாம் இந்த உச்சிமாநாட்டிற்கு ஏற்பாடு செய்திருந்தது.
- இது இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. 2018, 2020 ஆகிய ஆண்டுகளில் முதல் இரண்டு உச்சிமாநாடுகள் காந்திநகரில் நடைபெற்றன. தற்போதைய மாநாடு சூரத்தில் நடைபெற்றது.
- இந்த உச்சிமாநாட்டின் மையப்பொருள் தற்சார்பு சமூகத்திலிருந்து, தற்சார்பு குஜராத் மற்றும் இந்தியா என்பதாகும். இந்த சமூகத்தில் உள்ள சிறு, நடுத்தர, பெரிய தொழில் நிறுவனங்களை ஒருங்கிணைப்பது இம்மாநாட்டின் நோக்கமாகும்.
- இளைஞர்களுக்கு ஊக்கம் அளிக்க புதிய தொழில் முனைவோரை உருவாக்கி ஆதரவு அளிப்பதும், பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புக்கு உதவி செய்வதும் இதன் மற்றொரு நோக்கமாகும்.
- ஏப்ரல் 29 முதல் மே 1 வரை , நடைபெறவுள்ள இந்த மூன்று நாள் உச்சிமாநாடு அரசின் தொழில் கொள்கை. எம்எஸ்எம்இ-க்கள் புதிய தொழில்கள், புதிய கண்டுபிடிப்பு போன்ற பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாகும்.
- செமிகான் இந்தியா மாநாடு 2022-ஐ காணொலி வாயிலாக தொடங்கி வைத்த பிரதமர் திரு நரேந்திர மோடி, தொடக்க விழாவில் தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
- மத்திய அமைச்சர்கள், செமிகண்டக்டர் தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகள், முதலீட்டாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் வெளிநாட்டு தூதர்கள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
இலங்கை மக்களுக்கு உதவ தயார் நிலையில் தமிழ்நாடு அரசு: அனுமதிகோரி பேரவையில் தீர்மானம்
- இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள மக்களுக்கு உதவிட மத்திய அரசு அனுமதி அளிக்கக்கோரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானத்தை முன்மொழிந்துள்ளார்.
- அதைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் அத்தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
- மேலும் ரூ.28 கோடியில் 137 வகையான மருந்துப் பொருட்களை வழங்கவும்; ரூ.15 கோடியில் 500 டன் பால்பவுடர்களை இலங்கை மக்களுக்கு வழங்கவும் தமிழக அரசு தயாராக இருக்கிறது.
- இதைத்தொடர்ந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இப்படியாக இலங்கை மக்களுக்கு உணவு, அத்தியாவசிய பொருட்களை தமிழ்நாட்டில் இருந்து அனுப்பி வைக்க அனுமதி அளிக்க தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.