Type Here to Get Search Results !

TNPSC 1st APRIL 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

நகர்ப்புற மகளிர் பாதுகாப்பு கொள்கைகளை உருவாக்க 'பாலின நிகர் மேம்பாடு மற்றும் கொள்கை ஆய்வகம்' - ஆர்.பிரியா தொடங்கிவைத்தார்

  • நகர்ப்புற மகளிர் பாதுகாப்பு தொடர்பான கொள்கைகளை உருவாக்கவும், மகளிர் பாதுகாப்பு திட்டமான நிர்பயா திட்டத்தை கண்காணிக்கவும் மாநகராட்சி சார்பில் 'பாலின நிகர் மேம்பாடு மற்றும் கொள்கை ஆய்வகம்' ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன் சேவையை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா தொடங்கிவைத்தார்.
  • சென்னை மாநகராட்சி சார்பில் பாலின நிகர் மேம்பாடு மற்றும் கொள்கை ஆய்வகம் மற்றும் பயிற்சி கருத்தரங்கம் ரிப்பன் மாளிகை வளாகத்தில் நடைபெற்றது. இதில் மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா பங்கேற்று கருத்தரங்கை தொடங்கிவைத்தார். 

பொருளாதார நெருக்கடி - இலங்கையில் அவசரகால நிலை பிரகடனம்

  • இலங்கை பெரும் பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளப்பட்டது. அதில் வீழ்ந்த அந்த நாட்டின் பொருளாதாரம், தற்போது அதல பாதாளத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. விலை உயர்வு, அத்தியாவசியப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு, மக்கள் போராட்டம் என இலங்கை அரசுக்கு நாலாபக்கமும் நெருக்கடி அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
  • இலங்கையின் பொருளாதாரமென்பது கிட்டத்தட்ட 80% பிற நாடுகளைச் சார்ந்தே இருப்பதால், ரஷ்யா-உக்ரைன் விவகாரத்துக்குக்கிடையில், இலங்கையின் பொருளாதாரமும் அதல பாதாளத்துக்குச் சென்றுகொண்டிருப்பதாகப் பொருளாதார வல்லுநர்களும் கூறிவருகின்றனர்.
  • இதனால் பெட்ரோல், டீசல் தொடங்கி காகிதம் வரை அனைத்து அத்தியாவசியப் பொருள்களும் கடும் விலையுயர்வைச் சந்தித்துள்ளன. மேலும் நாள் ஒன்றுக்குக் கிட்டத்தட்ட 13 மணி நேரம் மின்தடையும் ஏற்பட இலங்கையில் சாமான்ய மக்கள் கடும் அவதிக்குள்ளாகியிருக்கின்றனர்.
  • அதைத் தொடர்ந்து, ஏப்ரல் 1-ம் தேதி முதல் இலங்கையில் அவசரக்கால நிலை பிரகடனம் செய்யப்படுவதாக அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்துள்ளார்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு 'யுனெஸ்கோ' அங்கீகாரம்
  • 'யுனெஸ்கோ' அங்கீகாரம் பெறுவதற்கான பட்டியலில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலும், பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் பொற்கோவிலும் இடம் பெற்றுள்ளதாக, மத்திய கலாசார அமைச்சம் தெரிவித்துள்ளது.
  • உலக அளவில் பாரம்பரிய, கலாசார இடங்களை கண்டறிந்து, அதை யுனெஸ்கோ அமைப்பு அடையாளப்படுத்தி வருகிறது.
மார்ச் 2022 மாதத்துக்கான ஜிஎஸ்டி வசூல்
  • கடந்த மார்ச் மாதத்துக்கான ஜிஎஸ்டி வசூல் விவரங்களை ஒன்றிய நிதி அமைச்சகம் வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது: கடந்த மார்ச் மாதத்தில் மொத்தம் ₹1 லட்சத்து 42 ஆயிரத்து 95 கோடி ஜிஎஸ்டி வசூல் ஆகியுள்ளது.
  • இதில், ஒன்றிய ஜிஎஸ்டி ₹25,830 கோடியாகவும், மாநில ஜிஎஸ்டி ₹32,378 கோடியாகவும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ₹74,470 கோடியாகவும் உள்ளது. ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வசூலில், இறக்குமதி பொருட்கள் மூலம் வசூலான ₹39,131 கோடியும் அடங்கும். 
  • இதுபோல், செஸ் வரி ₹9,417 கோடி வசூலாகியுள்ளது. இதில், இறக்குமதி பொருட்கள் மீதான வரிகள் மூலம் ₹981 கோடி கிடைத்துள்ளது.
  • கடந்த மாத ஜிஎஸ்டி வசூல், முந்தைய ஆண்டு இதே மாதம் வசூலானதை விட 15 சதவீதம் அதிகம். மேலும், ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதில் இருந்து இதுவரை இல்லாத அளவுக்கு ஜிஎஸ்டி வசூலாகி புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. 
  • கடந்த 2017 ஜூலை 1ம் தேதி ஜிஎஸ்டி அமல்படுத்திய பிறகு, அதிகபட்சமாக கடந்த ஜனவரி மாதம் ரூ.1.40 லட்சம் கோடி வசூலானது குறிப்பிடத்தக்கது. 
பஞ்சாபுடன் சண்டிகரை இணைக்க மசோதா
  • பஞ்சாபில், முதல்வர் பகவந்த் மான் தலைமையில், ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்திற்கும், ஹரியானாவுக்கும், ஒரே தலைநகராக சண்டிகர் உள்ளது. 
  • யூனியன் பிரதேசமான சண்டிகரை மேம்படுத்த, மத்திய அரசு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.சமீபத்தில், சண்டிகரில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் அனைவரையும், மத்திய சேவை விதிகளின் கீழ் கொண்டுவரும் அறிவிப்பை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டார்.
  • இந்நிலையில், பஞ்சாப் சட்டசபையில், இன்று (ஏப்.01) ஒரு நாள் சிறப்பு கூட்டத் தொடர் நடந்தது. அதில், சண்டிகரை உடனடியாக பஞ்சாபுடன் இணைக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel