Type Here to Get Search Results !

TNPSC 7th MARCH 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

ரூ.1,000 கோடியில் சர்வதேச பர்னிச்சர் பூங்கா முதல் அமைச்சர் அடிக்கல் நாட்டினார்

  • தூத்துக்குடி சிப்காட் தொழில்பேட்டை வளாகத்தில் 1,156 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,000 கோடியில் சர்வதேச அறைகலன் பூங்கா அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. 
  • விழாவுக்கு தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமை தாங்கினார். 

ரூ.4,755 கோடியில் புதிய தொழில்கள் தொடங்க 33 புரிந்துணர்வு ஒப்பந்தம்

  • தூத்துக்குடியில் அறைகலன் பூங்கா அடிக்கல் நாட்டு விழா நடந்தது. அப்போது அந்த பூங்காவில் தொழில் தொடங்குவதற்காக 8 நிறுவனங்களுடன் ரூ.2 ஆயிரத்து 845 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது.
  • இதுதவிர தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை பெருக்கவும், வேலைவாய்ப்பை உருவாக்கவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.1,910 கோடி முதலீட்டில் புதிய தொழில்கள் தொடங்க 25 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
  • தொழில் துறை சார்பில் ரூ.1,643 கோடி முதலீடு மற்றும் 3 ஆயிரத்து 653 பேருக்கு புதிய வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் 6 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, அதிகாரிகள் மற்றும் நிறுவன பிரதிநிதிகள் ஒப்பந்த நகல்களை பரிமாறிக்கொண்டனர்.
  • இதே போன்று குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் தொழில் துறை சார்பில் ரூ.267 கோடி முதலீடு மற்றும் 2 ஆயிரத்து 373 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் 19 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அதிகாரிகள் மற்றும் நிறுவன பிரதிநிதிகள் ஒப்பந்த நகல்களை பரிமாறிக்கொண்டனர்.
  • இதன் மூலம் நடந்த விழாவில் மொத்தம் ரூ.4 ஆயிரத்து 755 கோடி முதலீடும், 17 ஆயிரத்து 476 பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் வகையில் 33 திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
மேகாலயாவுக்கும் அசாமுக்கும் இடையே எல்லைப் பிரச்னை
  • வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில், முதல்வர் கன்ராட் சங்மா தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மேகாலயாவுக்கும், அதன் அண்டை மாநிலமான அசாமுக்கும் இடையே, பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்னை நிலவி வருகிறது. 
  • இரு மாநில எல்லையோரம் அமைந்துள்ள 36 கிராமங்களை, மேகாலயா உரிமை கோரியது. எனினும், அதை ஏற்க அசாம் மறுத்தது.பின், அதற்கு தீர்வு காண, இரு மாநில அமைச்சர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டன. 
  • இந்தக் குழு, எல்லையை வரையறுக்கும் பணிகளில் ஈடுபட்டது.  சர்ச்சைக்குரிய எல்லை கிராமங்களுக்கு, இரு மாநில குழுவினர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். எல்லையை வரையறுக்க, சிறப்பு தொழில்நுட்ப சாதனங்கள் பயன்படுத்தப்பட்டன.
  • இதில், உரிமை கோரப்பட்ட 36 கிராமங்களில், ஆறு கிராமங்களைத் தவிர, மீதமுள்ள 30 கிராமங்களும் மேகாலயா மாநிலத்தின் அங்கமாக இருக்க, குழுவினர் ஒருமனதாக சம்மதம் தெரிவித்துள்ளனர்.
  • இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம், இரு மாநிலங்களுக்கும் இடையே, கடந்த ஜனவரியில் கையெழுத்தானது. 
மான்டெரே ஓபன் டென்னிஸ் தொடர்
  • மெக்சிகோவில் நடைபெற்ற மான்டெரே ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், கனடா வீராங்கனை லெய்லா பெர்னாண்டஸ் மீண்டும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி கோப்பையை தக்கவைத்துக் கொண்டார்.
  • இறுதிப் போட்டியில் கொலம்பியாவின் கமிலா ஒசாரியோவுடன் (20 வயது, 35வது ரேங்க்) மோதிய நடப்பு சாம்பியன் லெய்லா (19 வயது, 21வது ரேங்க்) 6-7 (5-7), 6-4, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் 2 மணி, 52 நிமிடம் போராடி வென்றார். 
  • மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில் அவர் 5 முறை கமிலாவிடம் இருந்து சாம்பியன்ஷிப் பாயின்ட்டை பறித்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டும் இத்தொடரில் லெய்லா பட்டம் வென்றிருந்தார்.

மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையத்தை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

  • தூத்துக்குடி முத்தையாபுரத்தில் செயல்பட்டு வரும் Spic தனியார் உரத் தொழிற்சாலையின் பயன்பாட்டுக்காக ரூ.150.4 கோடி செலவில் 75 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் சோலார் உற்பத்தி நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 
  • தினமும் 22 மெகா வாட் என ஆண்டுக்கு 42 மி.யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறனுடையது மின்நிலையம் என்று கூறப்படுகிறது. உற்பத்தியாகும் அனைத்து மின்சாரமும் ஸ்பிக், க்ரீன் ஸ்டார் உரங்களின் உற்பத்திக்காக பயன்படுத்தப்பட உள்ளது.
இலங்கை & இந்தியா கூட்டுகடற்படை பயிற்சி – ஸ்லைநெக்ஸ் 2022
  • இந்தியா- இலங்கை இடையே 9-வது கூட்டு கடற்படை பயிற்சி இன்று தொடங்கி வரும் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இரண்டு கட்டங்களாக இந்தப் பயிற்சி நடத்தப்பட உள்ளது. 
  • முதல்கட்டப் பயிற்சி விசாகப்பட்டினம் துறைமுகத்தில்  இன்றும் நாளையும் நடைபெறவிருக்கிறது. அதன் பின் இரண்டாம் கட்ட பயிற்சி வங்காள விரிகுடாவில் 9 மற்றும் 10-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. 
  • இலங்கை கடற்படையின், ரோந்து கப்பலான எல்எல்என்எஸ் சயூரலா, இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் கிர்ச் கப்பல் ஆகியவை பயிற்சியில் இடம் பெற்றுள்ளன. 
  • முன்னதாக கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இரு நாடுகளுக்கு இடையேயான கூட்டு கடற்படை பயிற்சி திரிகோணமலையில் நடைபெற்றது.
  • இருநாட்டு கடற்படைகளுக்கு இடையே புரிந்துணர்வு, அனுபவ பகிர்வு, கடல் சார் நடவடிக்கைகள், ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கில் இக்கூட்டு கடற்படை பயிற்சி நடைபெறுகிறது.
2021-22 முதல் 2025-26 வரையிலான நிதியாண்டுகளில் எஸ்எஸ்எஸ்ஒய் தொடர்வதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஒப்புதல்
  • 2021 மார்ச் 31-க்கு பின்னரும் 2021-22 முதல் 2025-26 வரையிலான நிதியாண்டுகளில் ஸ்வதந்த்ரதா சைனிக் சம்மான் யோஜனா என்று அழைக்கப்படும் எஸ்எஸ்எஸ்ஒய் திட்டத்தைத்  தொடர்வதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மொத்த நிதி மதிப்பீடு ரூபாய் 3,274.87 கோடி ஆகும்.
  • மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமையிலான உள்துறை அமைச்சகத்திடம் இருந்து இத்திட்டத்தை தொடர்வதற்கான முன்மொழிதல் பெறப்பட்டது. 
  • சுதந்திரப்  போராட்ட வீரர்களின் தியாகங்களை நினைவு கூர்வதற்கும், விடுதலையின் அமிர்தப்  பெருவிழாவின் போது அவர்களிடம் இருந்து ஊக்கம் பெறுவதற்குமான அரசின் உறுதியை இந்த முடிவு வெளிப்படுத்துகிறது.
  • பின்னணி விடுதலைப்  போராட்ட வீரர்கள் மற்றும் தகுதியுடைய அவர்களது சார்ந்தோருக்கு ஸ்வதந்த்ரதா சைனிக் சம்மான் யோஜனா ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. 
  • தற்போது நாடு முழுவதும் உள்ள 23,566 பயனாளிகள் இதைப்  பெற்று வருகின்றனர். ஓய்வூதியத்  தொகை அவ்வப்போது திருத்தி அமைக்கப்டுவதோடு 2016 ஆகஸ்ட் 15 முதல் அகவிலைப்படியும் வழங்கப்படுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel