Type Here to Get Search Results !

TNPSC 5th JANUARY 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

பிரதமரின் சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தின் (பிஎம்ஃஎப்எம்இ) கீழ், ஒரு மாவட்டம், ஒரு தயாரிப்பின் 6 பிராண்டுகள் அறிமுகம்
  • பிரதமரின் சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தின் (பிஎம்ஃஎப்எம்இ) கீழ், ஒரு மாவட்டம், ஒரு தயாரிப்பின் 6 பிராண்டுகளை, மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் திரு. பசுபதி குமார் பரஸ் மற்றும் இணையமைச்சர் திரு. ப்ரஹலாத் சிங் படேல் ஆகியோர் புதுதில்லி பஞ்சஷீல் பவனில் அறிமுகம் செய்தனர்.
  • ஒரு மாவட்டம், ஒரு தயாரிப்பு திட்டத்தின் கீழ் 10 பிராண்ட் உணவு பொருட்களை தயாரிக்க, தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை கூட்டமைப்புடன், மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில் துறை அமைச்சகம் ஒப்பந்தம் செய்தது.
  • இவற்றில் அம்ரித் பஃல் என்ற நெல்லி சாறு, கோரி கோல்டு என்ற மல்லி பொடி, காஷ்மீரி மந்த்ரா என்ற மசாலா , மது மந்த்ரா என்ற தேன், சோம்தானா என்ற ராகி மாவு, மற்றும் தில்லி பேக்ஸின் கோதுமை குக்கீஸ் ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டன.
தேசிய அறிவியல் தினம் 2022-ன் மையப்பொருளை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் வெளியிட்டார்
  • தேசிய அறிவியல் தினம் 2022-ன் மையப்பொருளை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); புவி அறிவியல் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் வெளியிட்டார்.
  • நீடித்த எதிர்காலத்திற்காக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஒருங்கிணைந்த அணுகுமுறை என்பதே தேசிய அறிவியல் தினம் 2022-ன் மையப்பொருளாகும்.
அமெரிக்காவின் அணு ஆயுத கப்பலுக்கு முதன் முதலாக பெண் கேப்டன்
  • அமெரிக்க கடற்படை வரலாற்றில் முதல்முறையாக, அந்நாட்டின் அணு ஆயுதம் தாங்கி கப்பலான, யு.எஸ்.எஸ்., ஆபிரஹாம் லிங்கனுக்கு, பெண் ஒருவர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • அமெரிக்க கடற்படை வரலாற்றில், அணு ஆயுதம் தாங்கி போர் கப்பல்களுக்கு பெண்கள் தலைமை வகித்தது இல்லை. இந்த சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுஉள்ளது.
  • யு.எஸ்.எஸ்., ஆபிரஹாம் லிங்கன் என்ற அணு ஆயுதம் தாங்கி போர் கப்பலுக்கு, ஏமி பார்ன்ஷிமிட் என்ற பெண் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் இந்த கப்பலின் செயல் அதிகாரியாக, 2016 - 19 வரை பணியாற்றினார்.
பிரதான வங்கிகள் பட்டியலில் எஸ்பிஐ, ஐசிஐசிஐ, ஹெச்டிஎஃப்சி - ரிசா்வ் வங்கி
  • உள்நாட்டில் அமைப்பு ரீதியில் பிரதானமாக உள்ள வங்கிகளின் பட்டியலில் (டி-எஸ்ஐபி) எஸ்பிஐ, ஐசிஐசிஐ, ஹெச்டிஎஃப்சி ஆகிய வங்கிகள் இடம்பெற்றிருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. 
  • கடந்த 2020-ஆம் ஆண்டின் பட்டியலிலும் இதே வங்கிகள்தான் பிரதான வங்கிகள் பட்டியலில் இடம்பெற்றிருந்தன என்று ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த 2015 மற்றும் 2016-ஆம் ஆண்டுகளில் டி-எஸ்ஐபி பட்டியலில் எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கிகள் உள்ளதாக ரிசா்வ் வங்கி அறிவித்தது.
  • மேலும், வங்கிகளிடம் சேகரிக்கப்பட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில் எச்டிஎஃப்சி வங்கியும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருப்பதாக கடந்த 2017 மாா்ச் 31-இல் ரிசா்வ் வங்கி அறிவித்தது.
அடல் ஓய்வூதியத் திட்டத்தில் 6 ஆண்டுகளில் 3.68 கோடி பதிவு
  • அடல் ஓய்வூதியத் திட்டத்தில் இதுவரை 3.68 கோடி பதிவு செய்துள்ளனா். நடப்பு நிதியாண்டில் மட்டும் 65 லட்சத்துக்கும் அதிகமான சந்தாதாரா்கள் பதிவு செய்துள்ளனா்.
  • இந்த நிதியாண்டில் இந்த ஓய்வூதியத் திட்டத்தின் செயல்திறன் சிறப்பாக உள்ளது. திட்டம் தொடங்கப்பட்ட 6 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், நடப்பு நிதியாண்டில்தான் அதிகபட்ச எண்ணிக்கையில் சந்தாதாரா்கள் இணைந்துள்ளனா்.
  • ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்தவா்களில் ஆண்கள் 56 சதவீதம், பெண்கள் 44 சதவீதம். இந்த ஓய்வூதிய நிா்வாகத்தின் கீழ் உள்ள சொத்து மதிப்பு சுமாா் ரூ. 20,000 கோடி ஆகும்.
  • இந்திய அரசின் முதன்மையான சமூகப் பாதுகாப்புத் திட்டமாக அடல் ஓய்வூதியத் திட்டம் உள்ளது. குறிப்பாக, அமைப்புசாராத் துறைகளில் உள்ள குடிமக்களுக்கு வயதான காலத்தில் வருமானப் பாதுகாப்பை வழங்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது. பிரதமா் நரேந்திர மோடியால் 2015, மே 9-ஆம் தேதி இத்திட்டம் தொடங்கப்பட்டது.
117 தடகள வீரர்களுக்கான தேசிய முகாமை மார்ச் 31 வரை நீட்டிக்க இந்திய விளையாட்டு ஆணையம் ஒப்புதல்
  • இந்த ஆண்டின் பிற்பகுதியில் பர்மிங்ஹாமில் நடைபெறவுள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், ஹாங்சூவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு வீரர்களை தயார்படுத்த 5 இடங்களில் 45 பயிற்சியாளர்களைக் கொண்டு 117 தடகள வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் தேசிய முகாமை வரும் மார்ச் 31 ஆம் தேதி வரை நீட்டிக்க இந்திய விளையாட்டு ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • 64 வீரர்கள், 53 வீராங்கனைகளுக்கு பாட்டியாலா, திருவனந்தபுரம், பெங்களுரு, புதுதில்லி, பாலுசேரி ஆகிய 5 இடங்களில் முகாம்கள் நடைபெற்று வருகின்றன. 
  • ஓட்டப் பந்தயம், தடையோட்டம், நடைபோட்டி, நீளம் தாண்டுதல், வட்டு எறிதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், மாரத்தான், சுத்தி எறிதல், ஹெப்பதலான் போன்ற போட்டிகளுக்கு பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel