Type Here to Get Search Results !

TNPSC 2nd JANUARY 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

உத்தர பிரதேச மாநிலம் மீரட் நகரில் தயான்சந்த் விளையாட்டு பல்கலைக்கழகம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்
  • ரூ.700 கோடி செலவில் மேஜர் தயான்சந்த் விளையாட்டுப் பல்கலைக்கழகம் அமைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
  • ஹாக்கி விளையாட்டில் புகழ்பெற்ற மேஜர் தயான்சந்த் நினைவாக உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரில் இந்தப் பல்கலைக்கழகம் அமையவுள்ளது. ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான ஆடவர் மற்றும் மகளிர் இங்கு பட்டம் பெறவுள்ளனர்.
  • இந்தப் பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் 1,080 விளையாட்டு வீரர்களுக்கு (540 ஆடவர், 540 மகளிர்) பயிற்சி அளிக்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. 
  • உலகத் தரத்தில் நவீன வசதிகள் இங்கு அமைக்கப்படவுள்ளன. இந்த பல்கலைக்கழக வளாகத்தில் நவீன சிந்தெடிக் ஹாக்கி மைதானம், கால்பந்து மைதானம், கூடைப்பந்து, வாலிபால், ஹேண்ட்பால் மைதானங்கள், கபடி ஆடுகளம் ஆகியவையும் அமைக்கப்படவுள்ளன.
நேரம் தவறாத விமான சேவை - உலகளவில் சென்னை விமான நிலையத்துக்கு 8-வது இடம்
  • கடந்த ஆண்டில் பல்வேறு பிரிவுகளின் கீழ் சிறப்பாக செயல்பட்ட விமான நிலையங்கள் குறித்து சிரியம் என்ற நிறுவனம் கணக்கெடுப்பை நடத்தியுள்ளது. இந்த பட்டியலில் 96.51 சதவீதத்துடன் ஜப்பானின் இட்டாமி விமான நிலையம் முதல் இடத்தில் உள்ளது.
  • இந்த பட்டியலில் இந்தியாவில் இருந்து ஒரே ஒரு விமான நிலையம்தான் இடம் பெற்றுள்ளது. இந்த பட்டியலில் சென்னை சர்வதேச விமான நிலையம் 8-வது இடத்தில் உள்ளது. சென்னை விமான நிலையத்தில் 98.32 சதவீதம் சரியான நேரத்திற்கு விமானங்கள் இயக்கப்பட்டதாக சிரியம் நிறுவனம் கூறியுள்ளது.
நீரஜ் சோப்ரா பயிற்சியாளர் கிளாஸ் பார்டோனிட்ஸின் ஒப்பந்தம் 2024 ஒலிம்பிக் வரை நீட்டிப்பு
  • நீரஜ் சோப்ரருக்கு வரும் 2024 பாரிஸ் ஒலிம்பிக் வரை அவரது தற்போதைய பயிற்சியாளர் கிளாஸ் பார்டோனிட்ஸ் (Klaus Bartonietz) பயிற்சி அளிப்பார் எந்த தெரிவித்துள்ளது இந்திய தடகள கூட்டமைப்பு.
  • 'வரும் 2024 பாரில் ஒலிம்பிக் வரை 'தங்கமகன்' நீரஜீன் பயிற்சியாளராக கிளாஸ் பார்டோனிட்ஸ் செயல்படுவார். அதனை தற்போது தக்க வைத்துள்ளோம்' என இந்திய தடகள கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மாதா வைஷ்ணவ தேவி கோயிலில் நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்க பிரதமர் ஒப்புதல்
  • மாதா வைஷ்ணவ தேவி கோயிலில் நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்க பிரதமர் திரு.நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார்.
  • மாதா வைஷ்ணவ தேவி கோயிலில் நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். காயமடைந்தோருக்கு ரூ.50,000 வழங்கப்படும்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel