Type Here to Get Search Results !

TNPSC 29th DECEMBER 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

அய்யம்பாளையத்தில் 6 சமணர் படுக்கைகள் கண்டெடுப்பு
  • திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள அய்யம்பாளையம் கிராமத்தில் 6 சமணர் படுக்கைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சம்புவராயர் ஆய்வுமைய அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
  • தி.மலை மாவட்டத்தில், தற்போது கண்டெடுக்கப்பட்ட சமணர் படுக்கைகளுடன் சேர்ந்து மொத்தம் 12 சமணர் படுக்கைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 
  • தமிழகத்திலேயே தி.மலை மாவட்டத்தில்தான் சமணர் அடையாளங்கள் அதிகளவு காணப்படுவது சிறப்பாகும். அக்காலத்தில் சமணத் துறவிகளை மன்னர்கள் மதித்து வந்துள்ளனர். 
ஆளுநரின் துணை வேந்தரை நியமிக்கும் அதிகாரத்தை குறைக்கும் மகாராஷ்ட்ரா அரசு
  • வழக்கமாக, அனைத்து மாநிலங்களிலும் பல்கலைக்கழகங்களுக்கு அந்தந்த மாநிலத்தின் ஆளுநரே வேந்தராக செயல்படுவார். தேடுதல் குழுவின் பரிந்துரைப்படி துணை வேந்தரை நியமிக்கும் அதிகாரம் ஆளுநருக்கே உண்டு. 
  • இந்நிலையில், ஆளுநரின் அதிகாரத்தை குறைக்கும் மசோதாவை மகாராஷ்டிரா அரசு நிறைவேற்றியுள்ளது. இதன்படி தேடுதல் குழு, துணை வேந்தர் பதவிக்காக 5 பேரின் பெயர்களை மாநில அரசுக்கு அனுப்ப வேண்டும். 
  • அரசு அதில் இருந்து இருவரை தேர்வு செய்து ஆளுநருக்கு அனுப்பும். அடுத்த 30 நாட்களுக்குள் அதில் ஒருவரை ஆளுநர் துணைவேந்தர் நியமிக்க வேண்டும் என மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
  • இது தவிர இணை வேந்தர் பதவி உருவாக்கப்பட்டு, உயர்கல்வித்துறை அமைச்சருக்கு அந்த பொறுப்பு வழங்கப்படும் என்றும் வேந்தருக்கு இணையான பணிகளை அவர் மேற்கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
தமிழகத்தில் 2020ம் ஆண்டுக்கான சிறந்த போலீஸ் ஸ்டேஷன்கள் பட்டியல்
  • தமிழகத்தில், 2020ம் ஆண்டுக்கான சிறந்த போலீஸ் ஸ்டேஷன்கள் தேர்வு செய்யும் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் தெற்கு போலீஸ் ஸ்டேஷன் முதலாவதாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.இரண்டாவதாக திருவண்ணாமலை தாலுகா ஸ்டேஷனும், மூன்றாவதாக, மதுரை சிட்டி அண்ணா நகர் (இ-3) ஸ்டேஷனும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 
சிபிஐ இணை இயக்குநராக வித்யா குல்கர்னி நியமனம்
  • தமிழகக் காவல் துறையில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை ஐஜியாகப் பணியாற்றியவர் வித்யா குல்கர்னி. இந்நிலையில், அவர் கடந்த நவம்பரில் மத்திய அரசு பணிக்குச் சென்றார்.
  • இதற்கிடையே அவரை சென்னை மண்டல சிபிஐ இணை இயக்குநராக நியமித்து மத்திய பணியாளர் தேர்வாணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
  • இவருடன் ஒடிசா காவல்துறை ஐபிஎஸ் அதிகாரி ஞான்சிஷியாம் உபாத்யா, மகாராஷ்டிரா காவல்துறை ஐபிஎஸ் அதிகாரி நாவல் பஜாஜ் ஆகியோரும் சிபிஐ இணை இயக்குநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
புனேவில் எலெக்ட்ரிக் வாகன உற்பத்திக்கான ஆலையை அமைக்கும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம்
  • இந்திய இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில் முதன்முதலில் என்ட்ரி கொடுத்து பஜாஜ் நிறுவனம்தான். கடந்த ஆண்டு செட்டாக் (Chetak) எலெக்ட்ரிக் வாகனத்தை அறிமுகம் செய்திருந்தது.
  • இந்த ஆலையில் ஆண்டுக்கு 5 லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளது பஜாஜ். அதற்காக சுமார் 300 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாம். 
  • வேண்டுமானால் கூடுதலாக 250 கோடி ரூபாய் முதலீடு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாம். வரும் 2022 ஜூன் முதல் இந்த ஆலையில் உற்பத்தியாகும் வாகனங்கள் சந்தைக்கு வரும் எனத் தெரிகிறது.
பெரிய மாநிலங்கள் பட்டியலில் முதலிடம் - தெலங்கானாவில் 100% முதல் டோஸ்
  • தெலங்கானா மாநிலத்தில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் முதல் டோஸ் தடுப்பூசி 100 சதவீதம் போடப்பட்டது. பெரிய மாநிலங்களின் பட்டியலில் உள்ள தெலங்கானா மாநிலம் முதன்முறையாக சாதனை படைத்துள்ளது. 
  • ஏற்கனவே அந்தமான் நிக்கோபார் தீவுகள், சண்டிகர், தாதர் நகர் ஹவேலி, கோவா, இமாச்சல பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், லட்சத்தீவுகள், சிக்கிம் போன்ற சிறிய மாநிலங்கள் இந்த சாதனையை படைத்துள்ளன. 
உலக ரேபிட் செஸ் - கோனெரு ஹம்பிக்கு 6-ஆம் இடம்
  • உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப்பில் நடப்புச் சாம்பியனாக இருந்தவரும், இந்தியாவைச் சேர்ந்தவருமான கோனெரு ஹம்பி மகளிர் பிரிவில் 7.5 புள்ளிகளுடன் 6-ஆம் இடம் பிடித்தார். ஓபன் பிரிவில் இந்திய கிராண்ட்மாஸ்டர் டி.குகேஷ் 9 புள்ளிகளுடன் 9-ஆம் இடம் பிடித்தார்.
  • மகளிர் பிரிவில் ஆர்.வைஷாலி 7 புள்ளிகளுடன் 14-ஆவது இடமும், வந்திகா அகர்வால் 6 புள்ளிகளுடன் 38-ஆவது இடமும், பத்மினி ரெளத் 5.5 புள்ளிகளுடன் 49-ஆவது இடமும் பிடித்தனர். இப்பிரிவில் ரஷியாவின் அலக்ஸாண்ட்ரா கொஸ்டெனியுக் 7 வெற்றி, 4 டிராவுடன் 9 புள்ளிகள் பெற்று சாம்பியன் ஆனார். கஜகஸ்தானின் பிபிசரா அசெளபுயேவா 2ஆம் இடமும், ரஷியாவின் வாலென்டினா குனினா 3-ஆம் இடமும் பிடித்தனர்.
  • ஓபன் பிரிவில் மித்ரபா குஹா 8.5 புள்ளிகளுடன் 15-ஆவது இடம் பிடிக்க, விதித் குஜராத்தி 7.5 புள்ளிகளுடன் 45-ஆவது இடமும், ஹரீஷ் பாரதகோடி 7 புள்ளிகளுடன் 60-ஆவது இடமும் பிடித்தனர். ஹரி கிருஷ்ணா 6.5 புள்ளிகளுடன் 99-ஆவது இடம் பிடித்தார். இப்பிரிவில் உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்துசாதோரோவ், டை பிரேக்கரில் சாம்பியன் ஆனார். 
  • ரஷியாவின் இயான் நெபோம்னியாட்சி வெள்ளியும், நார்வே வீரரும் நடப்பு உலக சாம்பியனுமான மேக்னஸ் கார்ல்சென் வெண்கலமும் வென்றனர்.
மத்தியப்பிரதேசத்தின் மோவ்-ல் இந்திய ராணுவம் குவான்டம் சோதனைக்கூடத்தை நிறுவியுள்ளது
  • மத்தியப்பிரதேசத்தின் மோவ்-ல் உள்ள தொலைத் தகவல் தொடர்பு பொறியியலுக்கான ராணுவக் கல்லூரியில் தேசிய பாதுகாப்புக் கவுன்சில் செயலகத்தின் உதவியுடன் இந்திய ராணுவம் அண்மையில் குவான்டம் சோதனைக்கூடத்தை நிறுவியுள்ளது. 
  • இதே நிறுவனத்தில் செயற்கை நுண்ணறிவு மையத்தையும், இந்திய ராணுவம் நிறுவியுள்ளது. குவான்டம் தொழில்நுட்பத்தில் இந்திய ராணுவத்தால் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சி, அடுத்த தலைமுறை தகவல் தொடர்புக்கு பாய்ச்சல் வேகத்தில் உதவும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel