Type Here to Get Search Results !

TNPSC 18th NOVEMBER 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

லடாக்கில் புதுப்பிக்கப்பட்ட போர் நினைவிடம் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்

  • கிழக்கு லடாக்கின் ரெசாங் லா பகுதியில் 1962 நவம்பர் 18-ல் சீனாவுக்கு எதிராக ஒரு பெரிய போர் நடந்தது. 18,000 அடி உயரத்தில் நடந்த இப்போரில் இந்திய ராணுவத்தின் மேஜர் ஷைத்தான் சிங் தலைமையிலான குமாவுன் படைப் பிரிவினர் துணிவுடன் போராடினர்.
  • சீன ராணுவத்துக்கு கடும் இழப்பை ஏற்படுத்தி வெற்றி பெற்றனர். உடல் முழுவதும் குண்டு காயங்களுடன் ஷைத்தான் சிங் வீரமரணம் அடைந்தார். மறைவுக்குப் பிறகு இவருக்கு நாட்டின் மிக உயரிய பரம் வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது.
  • இந்நிலையில் ரெசாங் லா போரின் 59-வது நினைவு தினத்தைமுன்னிட்டு, அங்கு புதுப்பிக்கப்பட்ட போர் நினைவிடத்தை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்துவைத்தார். 

கூகுளுடன் இணைந்து எம்எஸ்எம்இகளுக்கு ரூ.110 கோடி கடன்: சிறு நிறுவனங்கள் மேம்பாட்டு வங்கி திட்டம்

  • இந்திய சிறு நிறுவனங்கள் மேம்பாட்டு வங்கி (சிட்பி) கூகுள் நிறுவனத்துடன் இணைந்து எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு ரூ.110 கோடி (15 மில்லியன் டாலர்) கடன்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
  • இந்த ஒப்பந்தத்தின்படி ரூ.5 கோடி வரை ஆண்டு விற்பனைஉள்ள எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு குறைந்த வட்டியில் ரூ.25 லட்சம் முதல் ரூ.1 கோடி வரைகடன் வழங்க சிட்பி திட்டமிட்டுள்ளது.
  • இந்த ஒப்பந்தத்தின் பிரதான நோக்கம் பெண் தொழில் முனைவோர்களின் நிறுவனங்களுக்கு வட்டிச் சலுகையுடன் கடன்உதவி வழங்குவது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் 2021
  • வங்கதேசத்தின் டாக்கா நகரில் ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான காம்பவுண்ட் பிரிவு இறுதி சுற்றில் இந்தியாவின் ஜோதிசுரேகா, முன்னாள் உலக சாம்பியனான கொரியாவின் ஓ யூஹ்யூனை எதிர்த்து விளையாடினார். இதில் ஜோதி சுரேகா 146-145 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றார்.
  • முன்னதாக நடைபெற்ற காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் ரிஷப் யாதவுடன் இணைந்து வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார் ஜோதி சுரேகா. இறுதி சுற்றில் இந்திய ஜோடி 154-155 என்ற கணக்கில் கொரியாவின் கிம் யுன்ஹீ, சோய் யோங்கி ஜோடியிடம் தோல்வி கண்டது.
  • வங்காளதேசத்தின் டாக்கா நகரில் ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் 2021 போட்டிகள் நடந்து வருகின்றன. 6 அணிகளே இடம்பெற்றிருந்த மகளிா் அணிகள் பிரிவில் இந்தியா 'பை' வாய்ப்பு பெற்று நேரடியாக அரையிறுதிக்கு வந்தது.
  • இதில் அங்கிதா பகத், மது வேத்வான், ரிதி ஆகியோா் அடங்கிய இந்திய மகளிா் அணி 6-0 (51-48, 56-50, 53-50) என்ற கணக்கில் வியத்னாம் மகளிா் அணியை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. 
  • இதில், இன்று நடந்த கலப்பு இரட்டையர் போட்டி ஒன்றில், கொரிய நாட்டின் கிம் யுன்ஹீ, சோய் யாங்ஹீ இணை மற்றும் இந்தியாவின் ரிஷப் யாதவ், ஜோதி சுரேகா வென்னம் இணை விளையாடின.
  • இந்த போட்டியில், 155-154 என்ற புள்ளி கணக்கில் கொரிய இணை, இந்திய இணையை வீழ்த்தி வெற்றி பெற்று தங்க பதக்கம் தட்டி சென்றது. இந்திய இணை வெள்ளி பதக்கம் வென்றது.

இந்திய திரைத் துறையில் சிறந்த ஆளுமைக்கான விருது ஹேமமாலினிக்கு அறிவிப்பு
  • ஆண்டுதோறும் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில், இந்திய திரைத் துறையில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு, சிறந்த ஆளுமைக்கான விருது வழங்கப்படுவது வழக்கம்.
  • நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்டோருக்கு இந்த விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த ஆண்டிற்கான சிறந்த இந்திய திரைப்பட ஆளுமைக்கான விருது, நடிகையும், மதுரா தொகுதி எம்.பி.,யுமான ஹேமமாலினி மற்றும் இந்திய திரைப்பட தணிக்கை குழு தலைவரும், பிரபல பாடலாசிரியருமான பிரசூன் ஜோஷிக்கும் வழங்கப்பட உள்ளது. 
'யுனெஸ்கோ' செயற்குழு இந்தியா மீண்டும் தேர்வு
  • யுனெஸ்கோ நிறுவனத்தின், 193 உறுப்பு நாடுகளில், 58 நாடுகள் செயற்குழு உறுப்பினராக உள்ளன. இந்நிலையில் யுனெஸ்கோ செயற்குழு உறுப்பினர் பதவிக்கான தேர்தல் நடந்தது. இதில் 164 ஓட்டுகள் பெற்று இந்தியா மீண்டும் செயற்குழு உறுப்பினராக தேர்வானது. 
  • இந்தியா 2021 - 25ம் ஆண்டு வரை இந்த பதவியில் நீடிக்கும். ஆசிய - பசிபிக் நாடுகளில் சீனா, ஜப்பான், பிலிப்பைன்ஸ், வியட்னாம், குக் தீவுகள் ஆகியவையும் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு தேர்வாகி உள்ளன. 
அரசுப் பணியில் விளையாட்டு வீரர்களுக்கான 3% இட ஒதுக்கீட்டில் சிலம்பம் சேர்ப்பு
  • தமிழக அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்களில் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான 3 சதவீத இட ஒதுக்கீடு தற்போது நடைமுறையில் உள்ளது. 
  • அதன்படி, சி.ஏ.பவானிதேவி (வாள் சண்டை), எ.தருண் (தடகளம்), லஷ்மண் ரோஹித் மரடாப்பா (படகோட்டுதல்), தனலட்சுமி, (தடகளம்), வி.சுபா (தடகளம்) மற்றும் டி.மாரியப்பன் ஆகியோருக்குத் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
  • இந்நிலையில், மேற்படி திட்டத்தின் கீழ் ரோலர் ஸ்கேட்டிங், ஸ்குவாஷ், கபடி உள்ளிட்ட விளையாட்டுகளும் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன், தமிழ்நாட்டின் பாரம்பரிய மற்றும் வரலாற்றுக்கு முந்தைய இந்திய தற்காப்புக் கலைகளில் ஒன்றான சிலம்பம் விளையாட்டு 3 விழுக்காடு விளையாட்டு இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்பட்டு, அதற்கான அரசாணை (நிலை) எண்.46, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் (எஸ்1) துறை, நாள்.29.10.2021-ன் மூலம் ஆணையிட்டுள்ளது.
வ.உ.சி. பன்னூல் திரட்டு, வ.உ.சி. திருக்குறள் உரை நூல்களை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
  • தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் (18.11.2021) தலைமைச் செயலகத்தில், விடுதலைப் போராட்ட வீரர் வ.உ.சி.யின் 150-வது ஆண்டு பிறந்த நாள் கொண்டாட்டத்தின் முன்னெடுப்பாக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் வெளியிடப்பட்டுள்ள வ.உ.சி. பன்னூல் திரட்டு - முதல் தொகுதி மற்றும் வ.உ.சி. திருக்குறள் உரை -இரண்டாம் தொகுதி ஆகிய நூல்களை வெளியிட்டார்.
மருந்துத் துறையின் முதல் உலகளாவிய புதுமைகள் உச்சி மாநாட்டை பிரதமர் தொடங்கி வைத்தார்
  • நவம்பர் 18, 2021 அன்று மருந்துத் துறையின் முதல் உலகளாவிய கண்டுபிடிப்பு உச்சி மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார். 
  • இரண்டு நாள் உச்சிமாநாட்டில் 12 அமர்வுகள் மற்றும் 40 க்கும் மேற்பட்ட தேசிய மற்றும் சர்வதேச பேச்சாளர்கள் பல்வேறு பாடங்களைப் பற்றி விவாதிக்கின்றனர். ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியாவும் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel