Type Here to Get Search Results !

TNPSC 4th OCTOBER 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

சந்த் கபீர் விருது
  • மத்திய அரசு, நெசவாளர்களுக்கு வழங்கும் மிக உயரிய விருது 'சந்த் கபீர்' விருதாகும். 2018-ம் ஆண்டுக்கான 'சந்த் கபீர்' விருது இந்திய அளவில் 10 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 
  • இதில் காஞ்சிபுரம் மேட்டுப்பாளையம் தெருவைச் சேர்ந்த நெசவாளர் கிருஷ்ணமூர்த்தி பெயரும் இடம் பெற்றுள்ளது. நிறைய நெசவாளர்களுக்கு பயிற்சி அளித்தது, வழக்கமான சேலைகளுக்கு மாற்றாக 114 வடிவமைப்புகளை சேர்த்து சேலை நெய்தது ஆகிய காரணங்களுக்காக இவருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இதேபோல் 2019-ம் ஆண்டுக்கான தேசிய விருது 20 பேருக்கு அறிவிக்கப் பட்டுள்ளது. இதில் 6 பேர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர்கள். காஞ்சிபுரம் தர்மலிங்கம் நகரைச் சேர்ந்த சரளா - கணபதி தம்பதி மற்றும் பிள்ளையார்பாளையத்தைச் சேர்ந்த காமாட்சி - ஹரி தம்பதி இணைந் தும், கணிகண்டீஸ்வர் கோயில் தெருவைச் சேர்ந்த ராம்குமாரி, ராயன்குட்டை பிள்ளை தெருவைச் சேர்ந்த ஹரி ஆகியோர் தனித்தனியாகவும் தேசிய விருதை பெறுகின்றனர். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 6 நெசவாளர்கள் 4 தேசிய விருதுகளை பெறுகின்றனர். 
  • சிறந்த வடிவமைப்பு, சிறந்த தொழில் நுட்பங்களை கைத்தறியில் பயன்படுத்தியது, சிறந்த வண்ணங்கள் ஆகிய காரணங்களுக்காக இவர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய அதிநவீன ஏவுகணை சோதனை வெற்றி

  • மாஸ்கோ-ரஷ்யா 'சிர்கான்' என்ற அதிநவீன 'ஹைபர்சோனிக்' ஏவுகணையை தயாரித்துள்ளது. இது கடற்படை கப்பலில் இருந்து பலமுறை பரிசோதனைக்காக ஏவப்பட்டு இலக்கை துல்லியமாக தாக்கியது.
  • இந்நிலையில் சிர்கான் ஏவுகணையை, 'செவெரோட்டவின்ஸ்க்' எனப்படும் நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவும் பரிசோதனை முதல் முறையாக நடந்தது.

ஜப்பான் புதிய பிரதமராக புமியோ கிஷிடா தேர்வு

  • டோக்கியோ-ஜப்பான் நாட்டின் புதிய பிரதமராக, முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் புமியோ கிஷிடா, 64, தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
  • புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடந்தது. இதில் ஆளும் கட்சி மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.,க்களின் பெரும்பான்மை ஆதரவுடன், புமியோ கிஷிடா வெற்றி பெற்றார். இதையடுத்து ஜப்பானில் பிரதமர் புமியோ கிஷிடா தலைமையில் புதிய அமைச்சரவை அமைந்துள்ளது. 
  • இதில் சுகா அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த 20 பேரில் இருவருக்கு மட்டும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. புமியோ கிஷிடா, 8ம் தேதி பார்லி.,யில் உரையாற்ற உள்ளார். 

காவல் துறையின் பயன்பாட்டிற்காக முக அடையாளம் கண்டறியும் மென்பொருள் - முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

  • காவல்துறையின் பயன்பாட்டிற்காக முக அடையாளம் கண்டறியும் மென்பொருளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார்.
  • இந்த முக அடையாளம் கண்டறியும் மென்பொருளானது, ஒரு தனி நபரின் புகைப்படத்தினை காவல் நிலையங்களில் சிசிடிஎன்எஸ்-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள நபர்களின் புகைப்பட தரவுகளோடு ஒப்பிட்டு அடையாளம் கண்டறிய பயன்படுகிறது. 
  • இதுவரை, 5.30 லட்சம் புகைப்படங்கள் சிசிடிஎன்எஸ்-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த மென்பொருளை காவல் நிலையம் மற்றும், களப்பணியின்போது எப்ஆர்எஸ் செயலியை கைப்பேசியிலும் காவல் அலுவலர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

புதுச்சேரி ராஜிவ்காந்தி, இந்திராகாந்தி சிக்னலில் ரூ.400 கோடியில் புதிய மேம்பாலங்களுக்கு முழு நிதியளிக்க மத்திய அரசு ஒப்புதல்

  • புதுச்சேரி ராஜிவ்காந்தி, இந்திராகாந்தி சிக்னலில் ரூ.400 கோடியில் புதிய மேம்பாலங்கள் கட்டுவதற்கான முழு நிதியளிக்க மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது.
  • இதையடுத்து மத்திய அரசு, புதுச்சேரி அரசுக்கு இதுதொடர்பாக ஒப்புதல் அளித்து வரைபடம், திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel