Type Here to Get Search Results !

TNPSC 29th OCTOBER 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

பழங்கள் மற்றும் காய்கறிகளின் சர்வதேச ஆண்டு 2021 நிகழ்ச்சி
  • 2021-ம் ஆண்டை சர்வதேச பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆண்டாக ஐ.நா அமைப்பு அறிவித்தது. இதை முன்னிட்டு, வேளாண்துறை அமைச்சகம், ஐ.நா வேளாண் அமைப்புடன் இணைந்து நடத்திய ‘‘பழங்கள் மற்றும் காய்கறிகளின் சர்வதேச ஆண்டு 2021’’ நிகழ்ச்சியில், மத்திய வோளாண் அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் பங்கேற்றார்.
  • ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கை முறைக்கு, பழங்கள் மற்றும் காய்கறிகளின் ஊட்டச்சத்து பயன்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் இந்தாண்டின் கருப் பொருள். மனித ஊட்டச்சத்து, ஆரோக்கியம், உணவு பாதுகாப்பில் பழங்கள் மற்றும் காய்கறிகளின் முக்கிய பங்கு பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், ஐ.நா.வின் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதும்தான் இந்த கருத்தரங்கின் நோக்கம்.
  • தோட்டக்கலை பயிர்கள் உற்பத்தியில், இந்தியா 2வது பெரிய நாடாக உள்ளது. உலகளாவிய பழங்கள் மற்றும் காய்கறி உற்பத்தியில் 12 சதவீதம் இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது. 
  • 2019-20 நாம் அதிக அளவாக 320.77 மில்லியன் மெட்ரிக் டன்கள் காய்கறி, பழங்களை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளோம். 2020-21ம் ஆண்டில் காய்கறிகள் மற்றும் பழங்கள் உற்பத்தி 329.86 மில்லியன் மெட்ரிக் டன்கள் இருக்கும் என மதிப்பிடப்பட்டள்ளது.
டெல் அவிவ் நகரில் 15வது இந்தியா-இஸ்ரேல் கூட்டு பணிக்குழு கூட்டம்
  • இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான இந்தியா-இஸ்ரேல் கூட்டுப் பணிக்குழு (JWG) ஒத்துழைப்பின் புதிய பகுதிகளை அடையாளம் காண ஒரு விரிவான பத்தாண்டு கால வரைபடத்தை உருவாக்க ஒரு பணிக்குழுவை உருவாக்க ஒப்புக்கொண்டுள்ளது.
  • அக்டோபர் 27, 2021 அன்று இஸ்ரேலின் டெல் அவிவில் நடைபெற்ற 15வது JWG கூட்டத்தில் இது முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டத்திற்கு பாதுகாப்பு செயலாளர் டாக்டர் அஜய் குமார் மற்றும் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகத்தின் இயக்குனர் ஜெனரல் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அமீர் எஷல் ஆகியோர் தலைமை தாங்கினர்.
  • JWG என்பது இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பின் அனைத்து அம்சங்களையும் விரிவாக மறுஆய்வு செய்வதற்கும் வழிகாட்டுவதற்கும் இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சகம் ஆகியவற்றுக்கு இடையேயான உச்ச அமைப்பாகும்.
DRDO & IAF இணைந்து நீண்ட தூர வெடிகுண்டை வெற்றிகரமாக சோதனை செய்தன
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) மற்றும் இந்திய விமானப்படை (ஐஏஎஃப்) குழு இணைந்து 29 அக்டோபர் 2021 அன்று வான்வழி தளத்தில் இருந்து உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட நீண்ட தூர வெடிகுண்டை (எல்ஆர்பி) வெற்றிகரமாக சோதனை செய்தது. 
  • ஐஏஎஃப் போர் விமானத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு எல்ஆர் குண்டு, குறிப்பிட்ட வரம்புகளுக்குள் துல்லியத்துடன் நீண்ட வரம்பில் நிலம் சார்ந்த இலக்குக்கு வழிகாட்டப்படுகிறது. அனைத்து பணி நோக்கங்களும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டன. 
  • வெடிகுண்டின் விமானம் மற்றும் செயல்திறன் ஆகியவை எலக்ட்ரோ ஆப்டிகல் டிராக்கிங் சிஸ்டம் (EOTS), டெலிமெட்ரி மற்றும் ரேடார் உள்ளிட்ட பல ரேஞ்ச் சென்சார்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது.
  • எல்ஆர் வெடிகுண்டு ஐதராபாத்தில் உள்ள டிஆர்டிஓ ஆய்வகமான ரிசர்ச் சென்டர் இமாரத் (ஆர்சிஐ) மற்ற டிஆர்டிஓ ஆய்வகங்களுடன் இணைந்து வடிவமைத்து உருவாக்கியுள்ளது.
இந்திய கடற்படை போர்க்கப்பல் துஷில் ரஷ்யாவில் தொடக்கம்
  • பி 1135.6 வகையை சேர்ந்த ஏழாவது இந்திய கடற்படை போர்க்கப்பல், ரஷ்யாவில் உள்ள கலினின்கிராடில் அமைந்துள்ள யந்தர் கப்பல் தளத்தில் ரஷ்யாவுக்கான (மாஸ்கோ) இந்திய தூதர் திரு டி பால வெங்கடேஷ் வர்மா மற்றும் ரஷ்ய கூட்டமைப்பு மற்றும் இந்திய கடற்படை அதிகாரிகளின் முன்னிலையில் தொடங்கி வைக்கப்பட்டது.
  • கப்பலுக்கு துஷில் என்று திருமதி டத்லா வித்யா வர்மா பெயரிட்டார். துஷில் என்றால் சமஸ்கிருதத்தில் பாதுகாப்பு கவசம் என்று பொருள்.
  • கோவா ஷிப்யார்ட் லிமிடெட்டில் இரண்டு கப்பல்களும் ரஷ்யாவில் இரண்டு 1135.6 கப்பல்களும் கட்டமைப்பதற்கான இந்திய குடியரசு மற்றும் ரஷ்ய கூட்டமைப்பின் அரசாங்கத்திற்கு இடையேயான ஒப்பந்தத்தின் அடிப்படையில், இரண்டு கப்பல்கள் கட்டுவதற்கான ஒப்பந்தம் அக்டோபர் 18-ம் தேதி இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கையெழுத்தானது.
ஹர்தீப் சிங் பூரி 14வது நகர்ப்புற நகர்வு மாநாட்டை 2021இல் தொடங்கி வைத்தார்.
  • மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் மற்றும் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஸ்ரீ ஹர்தீப் எஸ். பூரி 2021 ஆம் ஆண்டின் அர்பன் மொபிலிட்டி இந்தியா (யுஎம்ஐ) மாநாட்டின் 14வது பதிப்பை இன்று இங்கு தொடங்கி வைத்தார். 
  • இந்த ஆண்டு மாநாட்டின் முக்கிய கருப்பொருள் "அனைவருக்கும் நடமாட்டம்" ஆகும், இது சமமான அணுகலை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது மற்றும் நகர்ப்புற போக்குவரத்தை ஊக்குவிக்கிறது.
  • இது மலிவு, சுத்தமான, பாதுகாப்பான, தகவல், திறமையான மற்றும் அணுகக்கூடிய போக்குவரத்து அமைப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும், குறிப்பாக சிறப்புத் திறனாளிகள், முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள்.
தூய்மையான கங்கைக்கான தேசிய இயக்கத்தின் 38-வது செயற்குழு கூட்டம்
  • தூய்மையான கங்கைக்கான தேசிய இயக்கத்தின் 38-வது செயற்குழு கூட்டம் அதன் தலைமை இயக்குநர் திரு ராஜீவ் ரஞ்சன் மிஸ்ரா தலைமையில் நடைபெற்றது. மேற்கு வங்கம், உத்தரகாண்ட் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் சில முக்கிய திட்டங்களுக்கு கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.
  • மேற்கு வங்கத்தில் உள்ள வடக்கு பாரக்பூர் நகராட்சியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட பணிகளுக்கான விரிவான திட்ட அறிக்கை கூட்டத்தின் போது மதிப்பீடு செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. தற்போதைய நிலவரப்படி, நகரத்தில் மையப்படுத்தப்பட்ட கழிவுநீர் அமைப்பு இல்லை என்பதால், கழிவுநீர் கங்கை நதியில் பாய்கிறது. திட்டத்திற்கான மதிப்பீடு ரூ 215 கோடி ஆகும்.
  • பீகாரில் உள்ள டெஹ்ரி-ஆன்-சோனில் மூன்று புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளிட்ட திட்டங்களுக்கும் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டன. இவற்றிலொன்று சிவபெருமான் கோவிலுக்கு அருகிலும், மற்றொன்று டால்மியா நகரிலும், இன்னொன்று இஸ்லாம் கன்ஜ் அருகிலும் அமையவுள்ளன. திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ 63.89 கோடி ஆகும்.
மாநிலங்களுக்கு கடைசி தவணை ரூ.44,000 கோடி ஜிஎஸ்டி இழப்பீடு
  • சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அறிமுகப்படுத்தப்பட்டதால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்புத் தொகையாக 2021-22-ம் நிதி ஆண்டுக்கு ரூ.44 ஆயிரம் கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.
  • மத்திய அரசுக்காக ரிசர்வ் வங்கி இந்த கடன்தொகையை திரட்டி வழங்க முடிவு செய்யப்பட்டது. அனைத்து மாநிலங்களுக்காக ஒருங்கிணைந்த வகையில் கடன் திரட்டப்பட்டது. இந்த கடன் தொகைக்கான வட்டி மற்றும் அசல் தொகை ஜிஎஸ்டி இழப்பீட்டு வரி நிதியத்துக்கு செலுத்த ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியா - இத்தாலி பிரதமர்கள் அதிகாரபூர்வ சந்திப்பு
  • வெள்ளிக்கிழமை (அக்டோபர் 29) ரோமில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டிற்காக இத்தாலி சென்றிருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இத்தாலிய பிரதமர் மரியோ டிராகியுடன் முதன்முறையாக நேரில் சந்தித்துப் பேசினார்.
  • தேசத்தந்தை மகாத்மா காந்திக்கு ரோமில் அமைந்துள்ள பியாஸ்ஸா காந்தி (Piazza Gandhi) சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பிரதமர் மோடியை, சமஸ்கிருத முழக்கங்களை எழுப்பிய வெளிநாடு வாழ் இந்திய மக்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
ஆழ்கடல் ஆராய்ச்சிக்கான நீர்மூழ்கி ஆய்வு கலன் 'சமுத்ரயான்' அறிமுகம்
  • கடலுக்கு அடியில் மனிதர்களுடன் 6,000 மீட்டர் ஆழம் வரை சென்று, ஆழ்கடல் ஆய்வுகளை மேற்கொள்ளும் நீர் மூழ்கி கலன் ஒன்றை, என்.ஐ.ஓ.டி., என்ற தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம், உள்நாட்டு தொழில்நுட்பத்தில் வடிவமைத்துள்ளது.
  • அதற்கு, 'சமுத்ரயான்' என பெயரிடப்பட்டுள்ளது.இதன் அறிமுக விழா மற்றும் தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்தின் துவக்க நாள் விழா, சென்னை பள்ளிக்கரணையில் உள்ள நிறுவன வளாகத்தில் நடந்தது.
  • இந்த கலன் வாயிலாக ஆழ்கடலில், 5,500 மீட்டர் ஆழம் வரை உள்ள பகுதிகளில், உயிரினம் அல்லாத தாது வளங்களை கண்டறிய ஆய்வு பணிகளை மேற்கொள்ளலாம். 
  • இது, மத்திய புவி அறிவியல் துறைக்கு உதவிகரமாக இருக்கும். அடுத்த ஆண்டு இறுதியில், இந்த நீர்மூழ்கி கலன், 500 மீட்டர் வரையிலான ஆழமற்ற பகுதியில், கடலடி ஆராய்ச்சி ஒத்திகையை மேற்கொள்ள உள்ளது.
  • மனிதர்களுடன் கூடிய மற்றொரு நீர்மூழ்கி கலனான, 'மத்ஸ்யா- 6,000'ஐ வடிவமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நிறைவடைந்து விட்டன. இந்த கலன், 2024ம் ஆண்டு ஒத்திகையை மேற்கொள்ள தயாராக இருக்கும்.
தேசிய கம்பெனி சட்ட 2 தீர்ப்பாயங்களுக்கு தலைவர்கள் நியமனம்
  • தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்திற்கு (என்சிஎல்ஏடி) உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி அசோக் பூஷணும், தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்திற்கு (என்சிஎல்டி) மேகாலயா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ராமலிங்கம் சுதாகரும் தலைவர்களாக நியமிக்க, அமைச்சரவையின் பணி நியமன குழு ஒப்புதல் வழங்கியிருப்பதாக அரசாணை வெளியிடப்பட்டது.
ஆா்பிஐ ஆளுநா் சக்திகாந்த தாஸின் பதவிக் காலம் மூன்றாண்டுகள் நீட்டிப்பு
  • ஆா்பிஐ ஆளுநராக இருந்த உா்ஜித் படேல் தனது பதவியை ராஜிநாமா செய்ததையடுத்து, கடந்த 2018-ஆம் ஆண்டு ஆா்பிஐ-யின் 25-ஆவது ஆளுநராக சக்திகாந்த தாஸ் நியமிக்கப்பட்டாா். 3 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்ட அவரது பதவிக் காலம் டிசம்பா் 10-ஆம் தேதியுடன் நிறைவடைவதாக இருந்தது.
  • இந்நிலையில், அவரது பதவிக் காலத்தை பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான நியமனங்களுக்கான குழு மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது. 
  • இதன்மூலமாக ஆா்பிஐ-யின் தலைமைப் பொறுப்பை 2024-ஆம் ஆண்டு டிசம்பா் வரை சக்திகாந்த தாஸ் வகிக்க வழி ஏற்பட்டுள்ளது.
ஆண்டிபட்டி அருகே 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய வளரி வீரனின் பாறை ஓவியம் கண்டுபிடிப்பு
  • தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகாவில் புள்ளிமான்கோம்பை அருகே, மூணாண்டிபட்டி கிராமம் உள்ளது. இப்பகுதியில், வைகை தொல்லியல் பண்பாட்டுக்கழக நிறுவனர் பாவெல் பாரதி, சில தினங்களுக்கு முன் மேலாய்வு செய்தார்.  
  • அப்போது 2,500 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய, தமிழரின் தொல் ஆயுதமான வளரி ஏந்திய வீரனின் பாறை ஓவியத்தை கண்டறிந்தார்.
  • தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் பாறை ஓவியங்களில் வில், அம்பு, வாள், வேல், தடி ஏந்திய வீரர்களின் உருவமே இதுவரை கிடைத்துள்ளது. வளரி ஆயுதம் கிடைத்ததாக தெரியவில்லை. வளரி என்று தெளிவாக தெரியும் பாறை ஓவியம் இதுவே.
  • தென் தமிழ்நாட்டிலும், ஆஸ்திரேலியப் பழங்குடிகளிடமும் வழக்கத்தில் இருந்த பழமையான ஆயுதம் வளரியாகும். இதை ஆஸ்திரேலியாவில் பூமராங் என அழைப்பர். தமிழகத்தில் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் பகுதிகளில் 1,801 வரை வளரி ஆயுதம் பயன்பாட்டில் இருந்தது. 
  • இதன் மூலம் நவாப்களையும், ஆங்கிலேயர்களையும், அப்பகுதி வீரர்கள் தாக்கியதாக, ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி ஆவணங்களில் பதிவு உள்ளது.  1802 முதல் வளரி ஆயுதம் பயன்படுத்துவது ஆங்கிலேயர்களால் தடை செய்யப்பட்டது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel