மத்திய ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீ சர்பானந்தா சோனோவால் காந்திதாமில் 'ஆயுஷ் வான்' ஐ தொடங்கி வைத்தார்
- மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் மற்றும் ஆயுஷ் அமைச்சரான ஸ்ரீ சர்பானந்த சோனோவால், தீன்தயாள் துறைமுக அறக்கட்டளையில் (DPT) - ரோட்டரி வனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆயுர்வேத தாவரங்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஆயுஷ் வானை திறந்து வைத்தார்.
- நகர்ப்புறத்தில் பசுமையை மேம்படுத்தவும், கட்ச் பிராந்தியத்தில் மரங்களின் அடர்த்தியை அதிகரிக்கவும் மரம் நடவு செய்யப்படும் பசுமை-பெல்ட் பகுதியில் டிபிடியால் ஒதுக்கப்பட்ட 30 ஏக்கர் நிலத்தில் ஆயுஷ் வேன் அமைக்கப்பட்டது. திறப்பு விழாவை முன்னிட்டு மத்திய அமைச்சர் மரக்கன்றையும் நட்டார்.
- நாட்டின் 75-ம் ஆண்டு சுதந்திரத்தை குறிக்கும் விடுதலையின் அம்ரித் மகோத்ஸவ வாரத்தின் ஒரு பகுதியாக புவி அறிவியல் அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); புவி அறிவியல் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங், காற்றின் தரம் குறித்த விரைவு எச்சரிக்கை அமைப்பைத் தொடங்கி வைத்தார்
- இந்திய தொழில் கூட்டமைப்பான - சிஐஐ ஏற்பாடு செய்த "எதிர்கால தொழில்நுட்பம் 2021" என்ற டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் பற்றிய சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சியின் தொடக்க அமர்வில் மின்னணு & தகவல் தொழில்நுட்பம், திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைதல் இணை அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் காணொலி மூலம் கலந்து கொண்டார்.
- 2021 அக்டோபர் 19 முதல் 27 வரை இந்த நிகழ்ச்சி திட்டமிடப்பட்டுள்ளது. உத்தி, வளர்ச்சி, உறுதி, உள்ளடக்கம், நம்பிக்கை எனும் ஐந்து கருப்பொருள்களை இது மையமாகக் கொண்டதாகும்.
கீழடியில் கண்டெடுக்கப்பட்ட சுடுமண் உறை கிணற்றில் மீன் சின்னம்
- சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை,அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் 7-ம்கட்ட அகழாய்வுப் பணிகள் பிப்.19-ம் தேதியில் இருந்து செப்.30-ம் தேதி வரை நடந்தன.
- இதில் பல ஆயிரம் தொல்பொருட்கள் கண்டறியப்பட்டன. தற்போது கண்டறிந்த பொருட்களை ஆவணப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
- ஏற்கெனவே 6 கட்ட அகழாய்வுகளில் தோண்டப்பட்ட குழிகள் மூடப்பட்டன. ஆனால் 7-ம்கட்ட அகழாய்வில் தோண்டப்பட்ட குழிகள் மூடப்படாது.
- அப்படியே, பொதுமக்கள் பார்வையிடும் வகையில் திறந்தவெளி 'அகழ் வைப்பகம்' ஏற்படுத்தப்படும். அகழாய்வு குழிகள் திறந்தநிலையில் வைப்பது இதுவே முதல்முறை.
- மேலும் திறந்தவெளியில்பார்வைக்கு வைக்கும்போது, கட்டுமானங்களைப் பாதுகாக்கும் தொழில்நுட்பம் சென்னை ஐஐடி மூலம் மேற்கொள்ளப்படும்.
- 8-ம்கட்ட அகழாய்வு குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை. மேலும் 7-ம்கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்ட சுடுமண் உறைகிணற்றில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கு 50 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமை இந்தியா வழங்குகிறது
- ஆப்கானிஸ்தானில் உணவு பொருட்களின் நெருக்கடியை கருத்தில் கொண்டு, 50 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமை மற்றும் மருத்துவ உபகரணங்களை இந்தியா நன்கொடையாக வழங்க திட்டமிட்டுள்ளது.'
- தலிபானுடனான இந்தியாவின் உறவை பொருட்படுத்தாமல் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு தடையற்ற மற்றும் மனிதாபிமான அடிப்படையில் உதவிகள் செய்யப்படும்.