Type Here to Get Search Results !

TNPSC 17th SEPTEMBER 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

அடுத்த 3 ஆண்டில் ரயில்வேயில் 50,000 பேருக்கு தொழில் திறன் பயிற்சி - ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

  • நாட்டில் இளைஞர்கள், வேலை வாய்ப்பு பெற உதவும் வகையில் தொடங்கப்பட்டுள்ள 'பிரதமரின் இலவச தொழில் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின்'' கீழ் ரயில்வேயில் திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் டெல்லியில் காணொலிமூலம் தொடங்கி வைத்தார்.
  • அதன்படி, நாடு முழுவதும் 75 ரயில்வே பயிற்சி கூடங்களில் இந்த பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன. தெற்கு ரயில்வேயில் சென்னைபெரம்பூர் கேரேஜ் மற்றும் போத்தனூரில் உள்ள தொழிற்கூடங்களில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இதுபோன்ற பயிற்சி சென்னை ஐசிஎப்-லும் தொடங்கப்பட்டுள்ளது.
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சிலின் 45வது கூட்டம்
  • சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சிலின் 45-வது கூட்டம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் லக்னோவில் நடந்தது. 
  • பெட்ரோல், டீசல், இயற்கை எரிவாயு, சமையல் எரிவாயு உள்ளிட்டவற்றை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவதற்கு இது உகந்தநேரம் அல்ல. 
  • இதற்கு பெரும்பாலான மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனால் தற்போதைக்கு அந்த முடிவு கைவிடப்படுகிறது. பயோ டீசல் மீதான வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
  • இ-வே பில், பாஸ்டாக் உள்ளிட்டவற்றை கண்காணிக்கவும், வரிகளை சீரமைப்பது குறித்து பரிந்துரைக்கவும் மத்திய அமைச்சர்களை கொண்ட 2 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்கள் வரி சீரமைப்பு குறித்து 2 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்.
  • கரோனா வைரஸ் தடுப்பு மருந்துகள் அல்லாத விலை உயர்ந்தமருந்துகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஜோல்ங்ஜெல்ஸ்மா மற்றும் விடெப்ஸோ ஆகிய மருந்துகளுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
  • அதேபோல அம்போடெரிசின் பி, டொசிலிஸுமாப் உள்ளிட்ட கரோனா மருந்துகளுக்கான வரி விலக்கு சலுகை வரும் டிசம்பர் 31-ம் தேதி வரை அளிக்கப்படும்.
  • சில மருந்துகள் மீதான வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்தசலுகை டிசம்பர் 31 வரை அளிக்கப்படும். அந்த வகையில் இடோலிஸுமாப், போஸாகோனஸோல், இன்பிளிக்ஸிமமாப், பாம்லனிவிமாப், எட்சிவிமாப், கஸிரிவிமாப், இம்டெவிமாப், 2-டியோக்ஸி-டி-குளுக்கோஸ், பாவிபிரியாவிர் ஆகிய மருந்துகளுக்கு வரி குறைப்பு அளிக்கப்பட்டுள்ளது.
  • மேலும் ஏற்கெனவே மருந்துப் பொருட்களுக்கு அளிக்கப்பட்ட வரி குறைப்பு மற்றும் வரிவிலக்கு உள்ளிட்ட சலுகைகளுக்கான அவகாசம் டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 
  • ஆனால், மருத்துவ உபகரணங்களுக்கு அளிக்கப்பட்ட சலுகைகளுக்கான காலஅவகாசம் நீட்டிக்கப்படவில்லை. குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருந்துகளுக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி முற்றிலுமாக விலக்கப்பட்டுள்ளது.
  • மரபுசாரா மின்னுற்பத்தி கருவிகள் மீதான வரி 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. பேனா மற்றும் உதிரி பாகங்கள் மீதானவரி 18 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தும் திறன் மேம்பாட்டு பயிற்சி மீதான வரி முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. அரசின் நிதி 75சதவீத அளவுக்கு செயல்படுத்தப்படும் பயிற்சி திட்டங்களுக்கும் இந்த சலுகை அளிக்கப்படும்.
  • சரக்குகளை ஏற்றிச் செல்லும் தேசிய பர்மிட் வாகனங்கள் மீது மாநில அரசு விதிக்கும் ஜிஎஸ்டிக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கப்பல் மற்றும் விமானம் மூலம்ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரிக்கு ஓராண்டுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
  • அதேநேரத்தில் சில பொருட்கள் மீதான வரி உயர்வுக்கு கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. இரும்பு, மாங்கனீஸ், தாமிரம், நிக்கல், கோபால்ட், அலுமினியம், ஈயம், துத்தநாகம், குரோமியம் உள்ளிட்ட தாது மற்றும் அவற்றின் அடர்வுகள் மீதான வரி 5 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • ரயில் இன்ஜின் உதிரிபாகங்கள் உள்ளிட்டவை மீதான வரி 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.  செல்போன் செயலி மூலம் உணவு விநியோக நிறுவனங்களாக செயல்படும் ஸ்விக்கி மற்றும் சொமாட்டோ ஆகிய நிறுவனங்கள் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. 
  • இவற்றுக்கு புதிதாக வரி விதிக்கப்படவில்லை. ஆனால் டெலிவரி செய்யும் உணவுப் பொருள் மீதான ஜிஎஸ்டி-யை அவை நேரடியாக செலுத்த வேண்டும். உணவகத்தில் இருந்து வசூலாகும் ஜிஎஸ்டி தொகையில் ஏற்படும் சில முறைகேடுகளைத் தவிர்க்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) (Shanghai Cooperation Organization) 21வது கூட்டம் 
  • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) (Shanghai Cooperation Organization) 21வது கூட்டம் தஜிகிஸ்தானில் நடைபெற்று வரும் நிலையில், காணொளி வாயிலாக கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளில் பிரதிபலிக்க வாய்ப்பு இருப்பதாக கூறினார்.
  • நிச்சயமற்ற நிலை மற்றும் அடிப்படைவாதம் ஆப்கானிஸ்தானில் நீடித்தால் பயங்கரவாதிகளை ஊக்குவிப்பதாக அது அமைந்துவிடும் என்றும் அடிப்படைவாத கொள்கைகளை உலகம் முழுவதும் ஊக்கப்படுத்த ஆப்கானின் சூழல் வழிவகுக்கும் அபாயம் உள்ளது எனவும் தெரிவித்தார்.
  • மேலும், எந்த நாட்டிலும் பயங்கரவாதத்தை பரப்ப ஆப்கானிஸ்தானை பயன்படுத்த கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து நாடுகளின் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கும் மரியாதை இருக்க வேண்டும் என குறிப்பிட்டார். 
  • எஸ்சிஓவில் சீனா, ரஷ்யா, கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel