Type Here to Get Search Results !

TNPSC 26th AUGUST 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

கீழடி அகழாய்வில் தந்தத்தினாலான பகடை கண்டெடுப்பு

  • கீழடியில் நடைபெற்றுவரும் 7-ஆம் கட்ட அகழாய்வில், தந்தத்தில் செய்யப்பட்ட பகடை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக, தமிழக தொல்லியல் துறை அலுவலா்கள் தெரிவித்துள்ளனா்.
  • கீழடி அகழாய்வில், தந்தத்தில் செய்யப்பட்ட அழகிய வேலைப்பாடு கொண்ட சதுர வடிவிலான பகடை கண்டெடுக்கப்பட்டுள்ளது. 
  • இப்பகடையில் ஒவ்வொரு பக்கத்தின் முகங்களும் ஒரு புள்ளியைச் சுற்றி 2 வட்டக் கீறல்கள் முத்திரையிடப்பட்டுள்ளன. 
  • மிக நோத்தியாக ஒன்றன் மேல் ஒன்றாக வரையப்பட்டுள்ள இப்பகடையானது, 4 புறமும் 1.5 செ.மீ. அளவுடையதாகவும், 4 கிராம் எடையுடையதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பழங்கால மக்கள் பொழுதுபோக்குக்காக பகடை ஆடும் பழக்கத்தை வழக்கமாகக் கொண்டிருக்கலாம் என்றனா்.

உலகின் பாதுகாப்பான 50 நகரங்களில் டெல்லி, மும்பை

  • பிரிட்டன் தலைநகர் லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் 'தி எக்னாமிஸ்ட் குரூப்' ஊடக நிறுவனத்தின் புலனாய்வு பிரிவு சார்பில் ஆண்டுதோறும் உலகின் பாதுகாப்பான நகரங்கள் குறித்த பட்டியல் வெளியிடப்படுகிறது. 
  • இதன்படி 2021-ம் ஆண்டுக்கான பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. இதில் டென்மார்க் தலைநகர்கோபன்ஹேகன் முதலிடம் பிடித்தது. கனடாவின் டொராண்டோ, சிங்கப்பூர், சிட்னி, டோக்கியோ ஆகியவை அடுத்தடுத்த இடங்களை பிடித்தன. அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு 12-வது இடம் கிடைத்தது.
  • பிரிட்டன் தலைநகர் லண்டன் 15-வது இடம், சீன தலைநகர் பெய்ஜிங் 36-வது இடம், ரஷ்ய தலைநகர் மாஸ்கோ 38-வது இடத்தைப் பெற்றன. இந்திய தலைநகர் டெல்லி 48-வது இடத்தையும், வர்த்தக நகரான மும்பை 50-வது இடத்திலும் உள்ளன.

கரோனா ஆய்வுக்கு கின்னஸ் சாதனை விருது

  • கரோனா தொடா்பாக இந்திய மருத்துவமனைகளிலும் உலகின் பிற நாடுகளிலுள்ள மருத்துவமனைகளிலும் பிரிட்டனைச் சோந்த நிபுணா்கள் ஆய்வு மேற்கொண்டனா். மொத்தம் 116 நாடுகளில் 1.4 லட்சத்துக்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் இந்த ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டனா்.
  • பிரிட்டனின் பா்மிங்ஹம் பல்கலைக்கழம், எடின்பரோ பல்கலைக்கழததைச் சோந்த நிபுணா்கள் நடத்திய இந்த ஆய்வில், உலகம் முழுவதிலுமிருந்து 15,025 விஞ்ஞானிகள் பங்கேற்றனா்.
  • இந்த ஆய்வு, மிக அதிக ஆய்வாளா்கள் நடத்திய மிகப் பெரிய ஆய்வு என்று கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
  • உலகுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா குறித்து முழுமையான புரிதலை ஏற்படுத்தும் நோக்கில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக ஆய்வில் பங்கேற்ற இந்திய வம்சாளி நிபுணா் அனில் பங்கு தெரிவித்தாா்.
தொழிற்கல்வி படிப்புகளிலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம்

  • இன்ஜினியரிங் படிப்புகளில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு உள்ளது. இதற்கான சட்ட மசோதா, அனைத்து கட்சிகளின் ஆதரவுடன், சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.  
  • இதையடுத்து, நடப்பு கல்வியாண்டிலேயே இந்த ஒதுக்கீடு அமலுக்கு வருகிறது.

tnpsc-26th-august-2021-ca-english
'பம்பர் டூ பம்பர்' காப்பீடு பாலிசி - புதிய வாகனங்களுக்கு கட்டாயம்

  • புதிய வாகனங்களுக்கு, செப்டம்பர் 1 முதல், 'பம்பர் டூ பம்பர்' அடிப்படையில் காப்பீட்டு பாலிசியை கட்டாயமாக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • இந்த உத்தரவை, காப்பீட்டு நிறுவனங்களுக்கு அனுப்பும்படி, போக்குவரத்து துறை கூடுதல் செயலரை அறிவுறுத்தியுள்ளது.
ரூ.11,500 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு
  • தமிழகத்தில் நிகழாண்டில் ரூ.11,500 கோடிக்கு பயிர்க் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் தெரிவித்தார்.
  • மேலும், கூட்டுறவு வங்கிகள் வழங்கும் அளவை 10 சதவீதத்தில் இருந்து அடுத்த 5 ஆண்டுகளில் 25 சதவீதமாக உயர்த் த்தவும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
BSF புதிய இயக்குநராக பங்கஜ் சிங் நியமனம்
  • 1) எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) இயக்குநர் ஜெனரலாக மூத்த ஐபிஎஸ் 5 அதிகாரி "பங்கஜ் சிங்” (Pankaj Kumar Singh) நியமிக்கப்பட்டுள்ளார்.
  • 2) இதேபோன்று இந்தோ-திபெத் எல்லைக் காவல் படையின் (ITBP) புதிய தலைவராக தமிழ்நாட்டின் 1988-ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி "சஞ்சய் அரோரா” (Sanjay Arora) நியமிக்கப்பட்டுள்ளார்.
  • 3) காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவு (BPRD-Bureau of Police Research and Development) புதிய தலைவராக "பாலாஜி ஸ்ரீவத்சவா” (Balaji Srivastav) நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆசிய கோப்பை கூடைப் பந்து போட்டி : இந்திய அணி வீரர் தேர்வு
  • இந்தோனேஷியாவில் நடைபெறவுள்ள ஆசியக் கோப்பை கூடைப் பந்து போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கு தஞ்சாவூர் வீரர் அரவிந்த் அண்ணாதுரை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • சவூதி அரேபியாவில் உள்ள ஜெத்தா நகரில் ஆகஸ்ட் 20 முதல் 22 வரை ஆசிய தகுதி சுற்று கூடைப்பந்து போட்டி நடைபெற்றது. இதில் இவர் வெற்றிபெற்று ஆசிய கோப்பை கூடைப்பந்து போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை உறுதி செய்தார்.
முதல் தங்கத்தை ஆஸ்திரேலியா வென்றது
  • டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் முதல் விளையாட்டுப் முதல் தங்கப் பதக்கத்தை ஆஸ்திரேலிய சைக்கிளிங் வீராங்கனை போட்டியில், பெய்ஜ் கிரேகோ (Paige Greco) வென்றார். 
  • மகளிருக்கான சைக்கிளிங் போட்டியில் “சி1-2-2” 3000 மீட்டர் பிரிவில் பெய்ஜ் கிரேகோ 3 நிமிஷம் 50.81 விநாடிகளில் இலக்கை எட்டி முதலிடம் பிடித்தார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel