Type Here to Get Search Results !

TNPSC 23rd JULY 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

ரூ.20 லட்சத்துக்கு கீழ் உள்ள அரசு ஒப்பந்தங்களை பெறுகிற புதிய தொழில் நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகள் - தமிழக அரசு அறிவிப்பு

  • தமிழகத்தில் புதிதாக தொழில்தொ டங்கும் நிறுவனங்களுக்கு அரசு ஒப்பந்தங்களை வழங்குவதில் முன்னுரிமை அளித்தால், அதிக அளவில் வேலைவாய்ப்புகள் உருவாகும்.
  • இதை பரிசீலித்த தமிழக அரசு,ரூ.20 லட்சத்துக்கு குறைவான ஒப்பந்தங்களில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கு புதிய சலுகைகள் அளிக்க முடிவெடுத்துள்ளது. 
  • அதன்படி, ஒப்பந்தத்தில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கு ஒப்பந்தப் புள்ளி கட்டணம், முன்வைப்புத் தொகை, முந்தைய விற்றுமுதலை காட்டுவது, முந்தைய தொழில் அனுபவம் ஆகியவற்றில் இருந்து விலக்குஅளிக்கப்படுகிறது.
  • அரசுத் துறை நிறுவனங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், கழகங்கள், உள்ளாட்சிகள், கூட்டுறவு நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு உருவாக்கிய சங்கங்கள் ஆகியவற்றில் இருந்து அந்த நிறுவனங்கள் ஒப்பந்தம் பெறலாம்.
  • இந்த நிறுவனங்கள் டான்சிம் அல்லது தொழில் மற்றும் உள்ளூர் வர்த்தக ஊக்குவித்தல் துறையில் (டிபிஐஐடி) பதிவு செய்த புதியதொழில் நிறுவனமாக, தமிழகத்தில் பதிவு செய்த நிறுவனமாக இருக்க வேண்டும். 

தடுப்பூசியை வீணடிக்காமல் கையாண்டதில் தமிழ்நாடு முதலிடம்: மத்திய அரசு

  • 41 லட்சம் கூடுதல் டோஸ்கள் குப்பிகளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு பல்வேறு மாநிலங்களால் பயன்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாட்டால் 5.88 லட்சம் கூடுதல் டோஸ்கள் எடுக்க முடிந்தது. மேற்கு வங்கம் 4.87 லட்சமும், குஜராத் 4.62 லட்சம் கூடுதல் டோஸ்களையும் செலுத்தியுள்ளன. 
  • பீகாரில் அதிகபட்சமாக 1.26 லட்சம் தடுப்பூசி வீணடிக்கப்பட்டது. இது நாட்டில் வீணடிக்கப்பட்ட அளவில் பாதி.
  • கோவிட் தடுப்பூசி திட்டத்திற்கான ரூ.35,000 கோடி பட்ஜெட்டில், தடுப்பூசி கொள்முதலுக்கு ரூ. 8071 கோடி மற்றும் செயல்பாட்டு செலவு என இதுவரை ரூ.9725.15 கோடி செலவிடப்பட்டுள்ளது. 
  • 2021 டிசம்பர் வரை 100.6 கோடி டோஸ்கள் வழங்குவதற்கு ஆர்டர்கள் தரப்பட்டுள்ளன. 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு 2021 டிசம்பருக்குள் தடுப்பூசி போட எதிர்பார்க்கிறோம்.

திருவாரூர் பல்கலைக் கழகம் உட்பட 12 ஒன்றிய பல்கலை.களுக்கு துணை வேந்தர்கள் நியமனம் - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அறிவிப்பு

  • நாடு முழுவதும் செயல்படும் ஒன்றிய பல்கலைக் கழகங்களில் 22 துணை வேந்தர் பதவிகள் காலியாக உள்ளன. இவற்றில் 12 பல்கலைக் கழகங்களுக்கான துணை வேந்தர்களை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நியமித்தார்.
  • தெற்கு பீகாரில் கயா ஒன்றிய பல்கலைக் கழகம், மணிப்பூர், மவுலானா ஆசாத் தேசிய உருது பல்கலைக் கழகம், வடகிழக்கு மாநில பல்கலைக் கழகம், குரு காசிதாஸ் பல்கலைக் கழகம், பிலாஸ்பூர் ஒன்றிய பல்கலைக் கழகங்களுக்கும் புதிய துணை வேந்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
  • தமிழ்நாடு திருவாரூரில் உள்ள ஒன்றிய பல்கலைக் கழகத்துக்கு முத்துகலிங்கன் கிருஷ்ணன் துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். அரியானா-தன்கேஸ்வர் குமார், இமாச்சல்-பிரகாஷ் பன்சால், ஜம்மு - சஞ்சீவ் ஜெயின், ஜார்கண்ட்- கிஷிடிஜ் பூஷன் தாஸ், கர்நாடகா- பட்டு சத்யநாராயணா, ஐதராபாத்-பசுத்கார் ஜே ராவ் ஆகியோர் துணை வேந்தர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

12 முதல் 17 வயது உள்ள சிறார்களுக்கு செலுத்தலாம் - மாடர்னாவின் தடுப்பூசிக்கு ஐரோப்பா ஒப்புதல்

  • 12 முதல் 17 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு மாடர்னாவின் கொரோனா வைரஸ் தடுப்பூசியைப் பயன்படுத்துவதை ஐரோப்பிய மருந்துகள் கண்காணிப்புக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இது ஐரோப்பிய கண்டத்தில் பயன்படுத்தப்படும் இளம் பருவத்தினருக்கான இரண்டாவது தடுப்பூசியாக அமைந்துள்ளது.
  • "12 முதல் 17 வயது வரையிலான குழந்தைகளில் ஸ்பைகேவாக்ஸ் தடுப்பூசி பயன்படுத்துவது 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு பயன்பட்டது போலவே இருக்கும்" என்று ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் (இஎம்ஏ), மாடர்னாவின் பிராண்ட் பெயரைப் (ஸ்பைகேவாக்ஸ் ) பயன்படுத்தி கூறியது.
முதலாம் பராந்தகன் காலத்து கல்வெட்டு!
  • பரகேசரி பரகேரிவர்மன் என்ற பட்டம் கொண்ட முதலாம் பராந்தக சோழன் கி.பி.907 முதல் கி.பி.958 வரை ஆட்சி செய்தவன். அவனுடைய 35வது ஆட்சி ஆண்டிலேயே இந்தக் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. அப்படிப்பார்த்தால் இந்தக் கல்வெட்டு, 942 வது ஆண்டைச் சேர்ந்தது என அறியமுடிகிறது
  • 'மதுரையைக் கொண்ட கோப்பரகேசரி' எனும் முதலாம் பராந்தகச் சோழனின் மெய்க் கீர்த்தி வருகிறது. அவரது ஆட்சிக்காலத்தில் சாத்தனூர் என அழைக்கப்பட்ட இந்தப் பகுதியை சிற்றரசன் குமரன் என்பவர் ஆட்சி புரிந்துள்ளார். 
  • தற்போது இந்த ஊர் ராமசமுத்திரம் என்றே அழைக்கப்படுகிறது. இந்தக் கல்வெட்டு உள்ள இடத்திலிருந்து சுமார் 1 கி.மீட்டருக்கு உள்ளாகவே பெரிய ஏரி ஒன்று உள்ளது. 
  • சமுத்திரம் என்ற சொல்லும் பெரிய நீர் பரப்பை குறிப்பதாகும். இந்தச் சொல் விஜயநகரபேரரசு ஆட்சி காலத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மெய் கீர்த்தியைத் தொடர்ந்து 'வரி' பற்றிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
  • 'காடி' என்ற சொல்லை தஞ்சைப் பகுதியில் பயன்படுத்துவார்கள். தொண்டை மண்டலமான நம் பகுதிகளில் 'கலம்' என்பார்கள். ஒரு கலம் நெல் விளைந்தால்... ஒரு நாழி நெல் எனும் வீதத்தில் ஏரியின் பராமரிப்புக்காக வரி செலுத்தவேண்டும். 
  • அதாவது சுமார் 96 படி நெல் விளைந்தால் ஒரு படி நெல்லை வரியாக ஏரி பராமரிப்புக்கு செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதை பின்பற்றுவோரின் பாதத்தை என் தலைமேல் வைத்து வழிபடுவேன் என்றும்; இந்த தர்மத்தைப் பின்பற்றாதவர்கள், கங்கை முதல் குமரிக்கு இடைப்பட்ட மக்கள் அனைவரும் செய்த பாவத்திற்கு போவார்கள் என்றும் அந்த சிற்றரசனால் எழுதப்பட்ட கல்வெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது" 
இந்தியாவுக்கு 2030-ல்தான் 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் சாத்தியம் - டிபிஎஸ் கணிப்பு
  • 2025-ம் ஆண்டுக்குள் 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக இந்தியா மாறவேண்டும் என மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்திருக்கிறது. ஆனால், 2030-ம் ஆண்டில்தான் இந்த இலக்கை எட்ட முடியும் என டிபிஎஸ் கணித்திருக்கிறது. 2030-ம் ஆண்டில்தான் இந்த இலக்கை இந்தியா எட்டுவது சாத்தியமாகும் என தெரிவித்திருக்கிறது.
  • பொருளாதார அடிப்படையில் பார்த்தால் 2030-ம் ஆண்டு வரையில் டாலர் அடிப்படையிலான ஜிடிபி தொடர்ந்து ஏழு சதவீதமாக இருக்க வேண்டும். அதற்கு ரூபாய் மதிப்பு சீராக இருக்க வேண்டும். 
  • பணவீக்கம் மூன்று சதவிதம் என்னும் அளவில் இருக்க வேண்டும். அப்போதுதான் உண்மையான வளர்ச்சி (Real Growth) 4 சதவீத அளவிலாவது இருக்கும். அடுத்த சில ஆண்டுகளுக்கு இவை சாத்தியமானால் மட்டுமே 5 ட்ரில்லியன் டாலர் என்பது 2030-ல் சாத்தியம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel