Type Here to Get Search Results !

TNPSC 11th JUNE 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

இந்திய கடலோரக் காவல்படை புதிய ஐ.ஜி. பொறுப்பேற்பு

  • இந்திய கடலோரக் காவல்படையின் கிழக்கு பிராந்திய புதிய ஐ.ஜி.யாக ஆனந்த் பிரகாஷ் படோலா பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன்பு ஐ.ஜி.யாக இருந்த எஸ்.பரமேஷ், இந்திய கடலோரக் காவல் படையின் மேற்கு பிராந்திய கமாண்டராக மாற்றப்பட்டார்.
  • புதிதாக பொறுப்பேற்றுள்ள ஆனந்த் பிரகாஷ், இந்திய கடலோரக் காவல் படை பணியில் 1990-ம் ஆண்டு சேர்ந்தார். உத்தராகண்ட் மாநிலத்தை சேர்ந்த ஆனந்த் பிரகாஷ், கடலோரக் காவல்படையில் சிறப்பாக பணியாற்றியதற்காக, குடியரசுத் தலைவரின் தட்ரக்‌ஷக் விருதை கடந்த ஆண்டு பெற்றார்.

ஜி7 உச்சி மாநாடு தொடக்கம்

  • அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜொமனி, இத்தாலி மற்றும் ஜப்பான் இடம்பெற்றுள்ள ஜி7 நாடுகளின் உச்சிமாநாடு பிரிட்டனில் உள்ள காா்ன்வால் நகரில் ஜூன் 11 முதல் 13-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 
  • இந்த மாநாட்டை பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சன் வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தாா். அப்போது அவா் பேசியதாவது: கரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து பாடம் கற்க வேண்டும் என்பதால் இந்தக் கூட்டம் நடந்தாக வேண்டும் என்பது எனது எண்ணம்.
  • தொற்று பரவ ஆரம்பித்த பின்னா் கடந்த 18 மாதங்களில் நாம் புரிந்த சில தவறுகளை மீண்டும் செய்யாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
  • அத்துடன் பொருளாதாரம் மீண்டெழுவதற்கு தேவையான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும். நோய்த்தொற்றால் நோந்த பிரச்னைகள் என்ன, இந்தத் தொற்று நீடித்த தழும்பானால் ஏற்படும் அபாயங்கள் என்ன, தொற்று ஏற்படுத்திய பாதிப்புகள் ஏற்றத்தாழ்வுகளை ஆழமாக வேரூன்றியுள்ளதா என்பதை நாம் கண்டறிய வேண்டும்.
  • தொற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளில் இருந்து நாம் சிறந்த முறையில் மீண்டெழ வேண்டும். அதைச் செய்வதற்கான வாய்ப்பு நம்மிடம் உள்ளது. ஏனெனில் பருவநிலை மாற்றப் பிரச்னைக்கு தீா்வு, தூய்மையான பசுமையான உலகை நிா்மாணிப்பது உள்ளிட்டவற்றில் ஜி7 நாடுகள் ஒன்றிணைந்துள்ளன.
  • கடந்த 2008-ஆம் ஆண்டு உலக அளவில் ஏற்பட்ட மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வருவது ஜி7 நாடுகளில் சீராக நடைபெறவில்லை. அப்போது நாம் இழைத்த தவறுகளை மீண்டும் செய்யாமல் இருப்பது முக்கியம் என்று தெரிவித்தாா்.
  • இந்த மாநாட்டில் ஐரோப்பிய யூனியனும் கலந்துகொள்கிறது. இதுதவிர இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, தென் கொரியா நாடுகளுக்கு மாநாட்டில் கலந்துகொள்ள சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
  • கரோனா தடுப்பூசிகளுக்கான காப்புரிமையை தற்காலிகமாக ரத்து செய்யும் இந்தியாவின் பரிந்துரைக்கு பிரான்ஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.

'டிரைவிங் லைசென்ஸ்' விதி மத்திய அரசு அதிரடி மாற்றம்

  • அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் ஓட்டுனர் பயிற்சி பெறுவோர், ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் வாகனங்களை இயக்காமல், 'லைசென்ஸ்' பெறுவதற்கான புதிய விதிகளை, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.
  • அரசு அங்கீகாரம் பெற்ற பயிற்சி பள்ளிகளில் ஓட்டுனர் பயிற்சி பெற்றவர்கள், ஆர்.டி.ஓ., எனப்படும், வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், வாகனத்தை முறையாக ஓட்டினால் மட்டுமே தற்போது லைசென்ஸ் வழங்கப்பட்டு வருகிறது. 
  • இந்த நடைமுறைகளில், மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் மாற்றங்களை செய்துள்ளது. புதிய விதிகளில் கூறப்பட்டுள்ளதாவது: இதன்படி, அங்கீகாரம் பெற்ற ஓட்டுனர் பயிற்சிப் பள்ளிகள், 2 ஏக்கர் பரப்பளவில் பயிற்சி எடுப்பதற்கான கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டும்.
  • அவர்களிடம் பயிற்சி வாகன வடிவமைப்புடன் கூடிய வசதி இருக்க வேண்டும். பயிற்சியளிப்பவர், மத்திய அரசின் அங்கீகாரம் பெற்றவராக இருக்க வேண்டும். 
  • போக்குவரத்து சின்னங்கள், போக்குவரத்து விதிகள், வாகன கட்டமைப்பு, பொதுத் தொடர்பு, முதலுதவி உள்ளிட்டவை குறித்த வகுப்புகளை நடத்த வேண்டும். வாகனம் ஓட்டுவதற்கு மலை, கிராமம், நகரம், மேடு, பள்ளம் போன்ற அமைப்புகளில் கற்பிக்க வேண்டும்.
  • இதுபோன்ற பயிற்சிக்கு பின், 'சென்சார்' ஓடுபாதையில் வாகனம் ஓட்டும் சோதனையில் வெற்றி பெறுவதுடன், அதனை, 'வீடியோ' பதிவு செய்ய வேண்டும். 
  • இந்த சான்றுகளுடன் ஆர்.டி.ஓ., அலுவலகம் சென்று, வாகனம் ஓட்டிக் காட்டாமலேயே அவர்கள் லைசென்ஸ் பெறலாம். இந்த புதிய நடைமுறை, அடுத்த மாதம், 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. 

வேலையாட்களுக்கு பாதுகாப்பு இந்தியா - குவைத் ஒப்பந்தம்

  • மத்திய கிழக்கு நாடான குவைத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசிக்கின்றனர். இங்கு வீட்டு தொழிலாளர்களாக பணியாற்றும் இந்தியர்களை ஒரு சட்ட கட்டமைப்பின் கீழ் கொண்டு வருவது தொடர்பாக ஒப்பந்தம் உருவாக்கப்பட்டு உள்ளது.
  • இதில் அந்நாட்டிற்கான இந்திய துாதர் சிபி ஜார்ஜ் மற்றும் குவைத் வெளியுறவு துறை துணை அமைச்சர் மஜ்தி அஹ்மத் அல் தபிரி ஆகியோர் கையெழுத்திட்டனர். 
  • அப்போது நம் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஷேக் அஹ்மத் நாசர் அல் முகமது அல்- சபா ஆகியோர் உடன் இருந்தனர்.
  • குவைத் நாட்டினர் இந்தியர்களை வீட்டு வேலைகளில் சேர்ப்பதை ஒழுங்குபடுத்துதல் மற்றும் பணியில் சேர்வோருக்கு சட்ட பாதுகாப்பை வழங்க இந்த ஒப்பந்தம் வழி செய்கிறது.
  • இதன் வாயிலாக வேலை வழங்குவோர் மற்றும் வீட்டு தொழிலாளிகளின் உரிமை மற்றும் கடமைகளை உறுதி செய்வதற்கான வேலைவாய்ப்பு ஒப்பந்தம் அறிமுகம் செய்யப்படும். இங்குள்ள தொழிலாளர்களுக்கு 24 மணி நேர உதவிக்கான அமைப்பு உருவாக்கப்படும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel