ஆலிவ் ரெட்லி இன ஆமைகள் (சிற்றாமைகள்) / THE OLIVE RIDLEY SEA TURTLE
TNPSCSHOUTERS
May 05, 2021
- லட்சக் கணக்கான ஆலிவ் ரெட்லி இன ஆமைகள் ருசிகுல்யா நதியின் முகத்துவாரத்தின் அருகே முட்டையிடுவதற்கு வலை அமைக்கும்.
- ஆலிவ் ரெட்லி இன ஆமைகள் முட்டையிடுவதற்காக வலையமைக்கும் காலம் ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரையாகும்.
- இந்த ஆமைகள் அரிபடாஸ் (Aribadas) எனப்படும் தனித்தன்மை வாய்ந்த அதிக எண்ணிக்கையில் முட்டையிடும் நிகழ்விற்குப் பெயர் பெற்றவையாகும்.
- அரிபடாஸ் காலத்தின் போது, ஆயிரக்கணக்கான பெண் ஆமைகள் கடற்கரையில் முட்டையிடுவதற்கு ஒன்றாக திரளும்.
பிரச்சினை
- இந்த ஆண்டு, அவை இன்னும் வலையமைக்கத் தொடங்கவில்லை.
- வலையமைப்பில் தாமதம் ஏற்படுவது சாதாரணமானது என சில அறிவியலாளர்கள் கூறினாலும் வளங்காப்பாளர்கள் இது பற்றி கவலை கொண்டுள்ளனர்.
- ஏனெனில் மே மாதத்தில் வளிமண்டலத்தின் வெப்பநிலை உச்சத்தை அடையும் என்பதால் கடற்கரை மணல் மிகவும் சூடானதாக இருக்கும்.
- எனவே ஆலிவ் ரெட்லி இன ஆமைகளின் அதிக எண்ணிக்கையில் முட்டையிடும் நிகழ்வு இந்த ஆண்டு தவிர்க்கப்பட வாய்ப்பு உள்ளது.
- இதற்கு முன்பு ஆமைகளின் முட்டையிடும் நிகழ்வானது 2002, 2007, 2016 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் தவிர்க்கப் பட்டுள்ளது.