சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் பாபர் அசாம் முதலிடம்
- சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையை வெளியிட்டுள்ளது சர்வதேச கிரிக்கெட் வாரியம். இந்த தரவரிசையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளார் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அஸாம்.
- கோலியை 8 புள்ளிகள் கூடுதலாக பெற்று முதலிடத்திற்கு முன்னேறி உள்ளார் பாபர். கோலி தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளார். 1258 நாட்களாக விராட் கோலி முதலிடத்தை தக்க வைத்திருந்தார்.
- அவரை தொடர்ந்து மற்றொரு இந்திய வீரரான ரோகித் ஷர்மா மூன்றாவது இடத்தில் உள்ளார். பாகிஸ்தான் அணியின் ஃபக்கர் ஜாமன் 778 புள்ளிகளை பெற்று தரவரிசையில் ஐந்து இடங்கள் முன்னேறி எட்டாவது இடம் பிடித்துள்ளார்.
- விவசாயிகளின் வருவாயை அதிகரிப்பதற்கான மாதிரி திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் மத்திய வேளாண் அமைச்சகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
- வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் விவசாயிகள் தொடா்ந்து போராடி வரும் சூழலில் மத்திய அரசு இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
- நாட்டிலுள்ள விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என்று பாஜக தலைமையிலான மத்திய அரசு உறுதியளித்திருந்தது. அதன் ஒரு பகுதியாக, விவசாயத்துக்கான உள்ளீட்டுப் பொருள்களுக்கான செலவைக் குறைத்தும் அறுவடைக்குப் பிறகான செலவைக் குறைத்தும் விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் வகையிலான மாதிரி திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
- அதற்காக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் மத்திய வேளாண் அமைச்சகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அந்த விழாவில் மத்திய வேளாண்துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் பங்கேற்றாா். இந்த மாதிரி திட்டமானது 6 மாநிலங்களில் உள்ள 100 கிராமங்களில் ஓராண்டுக்கு செயல்படுத்தப்படவுள்ளது.