மதுரை எய்ம்ஸ் நிர்வாக குழுவுக்கு 2 எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், ரவீந்திரநாத் போட்டியின்றி தேர்வு
- மதுரையில் எய்ம்ஸ் சிறப்பு மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழா 2019-ல் முடிந்த பிறகும் அதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை. இதற்கு அதற்கான நிர்வாகக்குழு அமைக்கப்படாமல் இருப்பதும் ஒரு முக்கியக் காரணமாக இருந்தது.
- நாட்டிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கான சட்டம் 1959-ன் படி, அதன் ஒவ்வொரு மருத்துவமனையின் நிர்வாகக் குழுவிலும் இரண்டு எம்.பி.க்களும் நியமிக்கப்பட வேண்டும்.
- இந்நிலையில் மதுரை எய்ம்ஸுக்கு 2 எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிப்பை நாடாளுமன்றம் கடந்த பிப்ரவரி 12-ல் வெளியிட் டது. மக்களவை உறுப்பினர்களில் மதுரையின் சு.வெங்கடேசன், விருதுநகரின் மாணிக்கம் தாகூர், தேனியின் ஓ.பி.எஸ்.ரவீந்திரநாத் ஆகியோர் இப்பதவிக்கு நாடாளு மன்றத்தில் மனு தாக்கல் செய் திருந்தனர்.
- இந்நிலையில் கடைசி நேரத்தில் சு.வெங்கடேசன் தனது மனுவை வாபஸ் பெற்றார். இதனால், காங்கிரஸின் கொறடாவான மாணிக்கம் தாகூரும், அதிமுகவின் ஒரே மக்களவை எம்.பி.யான ரவீந்திரநாத்தும் போட்டியின்றி தேர்வாகி உள்ளனர்.
தொடங்கியது 'ஒலிம்பிக் சுடர்' ஓட்டம்
- ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்க உள்ளது. அதற்கு முன்னோட்டமாக பராம்பரிய ஒலிம்பிக் சுடர் ஓட்டம் நேற்று தொடங்கியது.
- அணு உலை வெடிப்பு, ஆழிப்பேரலை காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டதுதான் ஜப்பானின் வடக்குகிழக்கு நகரம் புகுஷிமா. அந்த நகரில் நடைபெற்ற விழாவில் ஒலிம்பிக் சுடர் ஓட்டம் தொடங்கியது.
- முதலில் ஜப்பான் கால்பந்து வீராங்கனை அசுசா இவாஷிமிசு ஒலிம்பிக் சுடரை ஏற்றினார். தொடர்ந்து விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் ஒலிம்பிக் சுடரை ஏந்தி ஓடுகின்றனர்.
- விழாவில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் தலைவர் செய்கோ ஹஷிமோடோ, விளையாட்டு பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
- கொரோனா பீதிக்கு இடையில் கடுமையான விதிமுறைகளுடன் ஒலிம்பிக் சுடர் தொடர் ஓட்டம் 121 நாட்களுக்கு ஜப்பானின் முக்கிய நகரங்களின் வழியாக செல்லும். இறுதியில் ஒலிம்பிக் போட்டி நடைபெறும் டோக்கியோ நகரை சென்றடையும்.
- கொரோனா பீதி, ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு ஜூலையில் தொடங்க வேண்டிய ஒலிம்பிக் போட்டி இந்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது.
- ஆனால் பண்டைய ஒலிம்பிக் போட்டிகள் நடந்த கிரீசில் இருந்து வழக்கம் போல் ஒலிம்பிக் சுடர் கடந்த ஆண்டு மார்ச் மாதமே ஜப்பான் வந்து சேர்ந்து விட்டது.
- இயற்கை, செயற்கை பேரிடர்களால் அதிகம் பாதிக்கப்பட்ட புகுஷிமாவில் இருந்து ஒலிம்பிக் சுடர் ஓட்டம் தொடங்கியிருப்பது,
- அந்நாட்டு மக்களிடையே புதிய நம்பிக்ைகயை ஏற்படுத்தியுள்ளது. கூடவே தள்ளிவைக்கப்பட்ட ஒலிம்பிக் இந்த ஆண்டு கட்டாயம் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பும் உலகம் முழுவதும் உருவாகி உள்ளது.
அடுத்த நிதி ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 12.8% ஆக உயரும் ஃபிட்ச் கணிப்பு
- அடுத்த நிதி ஆண்டின் வளர்ச்சி விகிதம் 11 சதவீதமாக இருக்கும் என முதலில் ஃபிட்ச் கணித்திருந்தது. தற்போது, சூழல் மேம்பட்டிருப்பதால் வளர்ச்சி விகிதத்தை ஃபிட்ச் உயர்த்தி இருக்கிறது.
- இந்தியாவைபோல துருக்கியும் வேகமாக வளர்ச்சி அடையும் நாடு என ஃபிட்ச் வகைபடுத்தி இருக்கிறது. 2020-ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் பொருளாதாரம் வேகமாக மீண்டு எழுந்தது.
- எதிர்பார்க்கப்பட்டதை விட வேகமான வளர்ச்சி இருந்ததால் 11 சதவீதத்தில் இருந்து 12.8 சதவீதமாக வளர்ச்சி இருக்கும் என கணித்திருக்கிறோம் என ஃபிட்ச் தெரிவித்திருக்கிறது.
காப்பீட்டுத் துறையில் 74% அந்நிய நேரடி முதலீடு
- காப்பீட்டுத் துறையில் (insurance sector) அந்நிய நேரடி முதலீட்டை (foreign direct investment) 74 சதவீதமாக உயர்த்த வழிவகுக்கும் காப்பீட்டு சட்டத் திருத்த மசோதா (2021) மக்களவையில் மார்ச் 22 அன்று நிறைவேற்றப்பட்டது
- இதன்மூலம் காப்பீட்டுச் சட்டம் 1938 மீண்டும் திருத்தப்பட்டு (Insurance (amendment) Bill 2021) காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீடு 49 சதவீத்தில் இருந்து 74 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.