தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக தொடரை வென்றது பாகிஸ்தான்
- தென் ஆப்ரிக்க அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியில், 95 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற பாகிஸ்தான் அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது.
- பாகிஸ்தான் 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி மொத்தம் 120 புள்ளிகளை தட்டிச் சென்றது. ஹசன் அலி ஆட்ட நாயகன் விருதும், முகமது ரிஸ்வான் தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.
114 ஆண்டுகளுக்குப்பின் புதிய வரலாறு படைத்த அஸ்வின் & இசாந்த் சர்மா புதிய மைல்கல்
- அஸ்வின் வீசிய முதல் பந்திலேயே ரஹானேயிடம் கேட்ச் கொடுத்து ரோரி பர்ன்ஸ் ஆட்டமிழந்தார். இந்த விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தியபோது, உலகக் கிரிக்கெட்டில் புதிய வரலாற்றைப் படைத்தார். அதாவது, கடந்த 114 ஆண்டுகளாக 2-வது இன்னிங்ஸ் தொடக்கத்தில் முதல் ஓவர் முதல் பந்தில் எந்த சுழற்பந்துவீச்சாளரும் விக்கெட் வீழ்த்தியதில்லை.
- இந்த சாதனையை 14 ஆண்டுகளுக்குப்பின் அஸ்வின் நிகழ்த்தி புதிய வரலாற்றைப் பதிவு செய்துள்ளார். கடைசியாக கடந்த 1907-்ம ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக தென் ஆப்பிரிக்க சுழற்பந்துவீச்சாளர் பெர்ட் வோக்லர் 2-வது இன்னிங்ஸில் முதல் ஓவரில் முதல் பந்தில் விக்கெட் வீழ்த்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆட்டத்தின் 15-வது ஓவரை இசாந்த் சர்மா வீசினார். இசாந்த் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி லாரன்ஸ் 18 ரன்னில் வெளியேறினார். இந்த விக்கெட்டை வீழ்த்தியபோது, இசாந்த் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டினார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 300 விக்கெட்டுகளை எட்டிய 3-வது இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையையும், ஒட்டுமொத்தமாக 6-வது இந்திய வீரர் எனும் சிறப்பைப் பெற்றார்.
ஜனவரி மாத சிறந்த வீரர் ரிஷப் பந்த் ஐசிசி அறிவிப்பு
- ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஜனவரியில் நடைபெற்ற 2 டெஸ்ட் ஆட்டங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷப் பந்த் ஐசிசியின் ஜனவரி மாதத்துக்கான சிறந்த வீரராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- ஜனவரியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னி டெஸ்டில் 97 ரன்களும், பிரிஸ்பேனில் 89 ரன்களும் எடுத்து இந்திய அணி டெஸ்ட் தொடரை வெல்வதற்கு முக்கியப் பங்காற்றினார்.
- மாதத்தின் சிறந்த வீரர்/வீராங்கனை என்கிற பெயரில் புதிய விருதை ஐசிசி அறிமுகம் செய்துள்ளது. இதில் ஜனவரி மாதத்துக்கான சிறந்த வீரர்கள் பரிந்துரையில் இந்திய அணியின் ரிஷப் பந்த், இங்கிலாந்தின் ஜோ ரூட் மற்றும் அயர்லாந்தின் பால் ஸ்டிர்லிங் ஆகியோரது பெயர்கள் இருந்தன.
- 'அரசுப் பணிகள் திறம்பட மற்றும் செவ்வனே நடைபெற நிதி மற்றும் மனிதவள மேலாண்மையை ஒருமைப்படுத்தி ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் கடந்த 10.1.2019 அன்று தொடங்கி வைத்தார்.
- இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியதன் மூலம், மாநிலம் முழுவதும் உள்ள கருவூலம் மற்றும் சம்பளக்கணக்கு அலுவலகங்களில் தற்போது 19 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் நேரடியாக இணையத்தின் வாயிலாக பட்டியலை கருவூலத்தில் சமர்ப்பிக்கின்றனர்.
- மேலும், சுமார் 9 லட்சம் அரசுப் பணியாளர்களின் பணிப் பதிவேடு பராமரிப்பு எளிமையான முறையில் கணினிமயமாக்கப்பட்டு சம்பளப் பட்டியல், பதவி உயர்வு, பணி மாறுதல்கள், விடுப்பு போன்ற மற்ற விவரங்கள் உடனுக்குடன் பதிவிடப்பட்டு வருகிறது.
- இந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டமானது, டிஜிட்டல் ஒப்பம் மற்றும் பயோமெட்ரிக் முறை மூலம் உறுதிப்படுத்தும் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டதாகும்.
- ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டத்தின் அடுத்த கட்டமாக, கருவூலத்தில் பெறப்படும் அரசின் வருவாய் இனங்களை மின்வரவாக மின் செலுத்துச்சீட்டு மூலமாக நேரடியாக பெறுவதற்கான நடைமுறையை தமிழ்நாடு முதல்வர் தொடங்கி வைத்தார்.
- இதன்மூலம், பொதுமக்கள் / அரசு துறை நிறுவனங்கள் / உள்ளாட்சி அமைப்புகள் போன்றவை அரசுக்கு செலுத்த வேண்டிய வரவினங்களை, மின்வரவுகளாக 24 மணிநேரமும் தங்குதடையின்றி இணையத்தின் மூலம் (www.karuvoolam.tn.gov.in) செலுத்த வசதிகள் ஏற்படுத்தப்படுவதால், அரசு நிகழ்நேர வருவாயை உடனுக்குடன் பெற இயலும்.
- இச்சேவைகளுக்காக, பாரத ஸ்டேட் வங்கி, பரோடா வங்கி, இந்தியன் வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகிய நான்கு வங்கிகளை திரட்டல் வங்கிகளாக தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
- இவற்றில் பாரத ஸ்டேட் வங்கி மற்றும் பரோடா வங்கி ஆகிய இரு வங்கிகள் இத்திட்டத்தில் ஒருங்கிணைப்பு பணிகளை முடித்துள்ள நிலையில் இவ்விரு வங்கிகளின் வாயிலாக முதற்கட்டமாக அரசின் வருவாய்கள் பெறப்பட்டு, அரசின் ரிசர்வ் வங்கி கணக்கில் வரவு வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
- ஏற்கெனவே நடைமுறையில் உள்ள வங்கிகளில் நேரடியாக பணம் செலுத்தும் திட்டமும் சிறிது காலத்திற்கு தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும்'.
- ராஜஸ்தான் மாநில மேற்கு பகுதியில் உள்ள மகாஜன் துப் பாக்கி சுடும் களத்தில் 16-ஆவது இந்தியா - அமெரிக்கா கூட்டு ராணு வப் பயிற்சி யூத் அபியாஸ்' திங்கள்கிழமை தொடங்கியது
- இந்திய ராணுவப் படையின் காலாட் படை தளபதி முகேஷ் பன் வாலா, அமெரிக்க படையை வரவேற்று, பயிற்சியின்போது, இரு நாட்டு படைகளும் இணைந்து மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.
- இப்பயிற்சியில் ராணுவத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட இலகுரக ஹெலிகாப்டரான டபிள்யுஎஸ்ஐ ருத்ரா, எம்ஐ-17, ஸ்ட்ரைக்கர் வாக னங்கள் உள்பட பல வான்வழி தாக்குதல் வாகனங்கள் பயன்படுத்தப்படு கின்றன. இப்பயிற்சி பிப்ரவரி 21-ஆம் தேதி வரை நடைபெறும்.
- இதேபோல், கடந்த ஜனவரி மாதம் இந்தியா - பிரான்ஸ் படையின் கூட்டுப் பயிற்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது