உலகின் முதல் இரட்டை அடுக்கு பெட்டக ரயில் போக்குவரத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி
- புதிய அட்டலி-புதிய கிஷன்கர்க் வரையிலான மின்சாரத்தால் இயங்கும் 1.5 கி.மீ நீள உலகின் முதல் இரட்டை அடுக்கு பெட்டக ரயில் போக்குவரத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
- இந்நிகழ்ச்சியில், ராஜஸ்தான், ஹரியாணா மாநில ஆளுநர்கள், முதல்வர்கள், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஜோ பைடன் வெற்றிக்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல்
- அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற அதிபா் தோதலில் ஜோ பைடன் மற்றும் துணை அதிபா் தோதலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றதை முறைப்படி அறிவிப்பதற்கான நாடாளுமன்ற கூட்டுக் கூட்டம் புதன்கிழமை தொடங்கியது.
- கீழவையான செனட் சபை மற்றும் மேலவையான பிரதிநிதிகள் சபையின் உறுப்பினா்கள் இதில் பங்கேற்றனா்.
- மக்கள் பிரதிநிதிகளின் வாக்குகள் எண்ணப்பட்டு, தோதல் முடிவுகளை அதிகாரப்பூா்வமாக அறிவிப்பதில் ஜனநாயக கட்சி மற்றும் பெரும்பாலான குடியரசுக் கட்சி உறுப்பினா்கள் உறுதியாக இருந்தனா்.
- அரிஸோனா மற்றும் பென்சில்வேனியா மாகாணங்களில் பதிவான வாக்குகள் குறித்து மட்டும் ஆட்சேபம் தெரிவிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
- அந்த ஆட்சேபனைத் தீா்மானங்களின் மீது 2 மணி நேரம் விவாதம் நடைபெற்று வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில், அந்த இரு தீா்மானங்களும் தோல்வியடைந்தன.
- செனட் சபையில் அரிஸோனா தோதல் முடிவுகளை எதிா்க்கும் தீா்மானத்துக்கு எதிராக 93 உறுப்பினா்களும் ஆதரவாக 6 உறுப்பினா்களும் வாக்களித்தனா்.
- பிரதிநிதிகள் சபையில் அந்தத் தீா்மானத்தை எதிா்த்து 303 உறுப்பினா்களும் ஆதரவாக 121 பேரும் வாக்களித்தனா்.
- அதே போல், செனட் சபையில் பென்சில்வேனியா தோதல் முடிவுகளை எதிா்க்கும் தீா்மானத்துக்கு எதிராக 92 உறுப்பினா்களும் ஆதரவாக 7 உறுப்பினா்களும் வாக்களித்தனா்.
- பிரதிநிதிகள் சபையில் அந்தத் தீா்மானத்தை எதிா்த்து 282 உறுப்பினா்களும் ஆதரவாக 138 பேரும் வாக்களித்தனா்.
- இந்திய அமெரிக்க எம்.பிக்களான ரோஹித் கன்னா, அமரீஷ் பேரா, ராஜா கிருஷ்ணமூா்த்தி, பிரமீளா ஜெயபால் ஆகியோா் இந்தத் தீா்மானங்களை எதிா்த்து வாக்களித்தனா்.
- இறுதியில், அதிபா் தோதலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதை நாடாளுமன்றம் அதிகாரப்பூா்வமாக உறுதி செய்தது.
உலகின் முதல் பணக்காரர் ஆனார் எலான் மஸ்க்
- மின்னல் வேக, 'ஹைப்பர் லுாப்' பயணம், செவ்வாயில் மனிதர்களை குடியேற்றும் முயற்சி, அதிவேக எலக்ட்ரிக் சூப்பர் கார்களை தயாரிப்பது என, கனவு திட்டங்களின் கதாநாயகனாக திகழ்கிறார்.
- எலான் மஸ்க். கடந்த சில வாரங்களாக, உலக பணக்காரர்கள் வரிசையில் இரண்டாவது இடத்திலிருந்த அவரது சொத்து மதிப்பு, நியூயார்க்கில் 188.5 பில்லியன் டாலராக இருந்தது.
- இது அமேசான் நிறுவனர் ஜெப் பிசோசாவை விட, 1.5 பில்லியன் டாலர் அதிகமாக சேர்த்துள்ளார். கடந்த 2017 அக்டோபர் மாதம் முதல், உலக பணக்காரர் பட்டியலில், தொடர்ந்து முதலிடம் வகித்து வந்தவர் பிசோசா.
கோவை - சத்தி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் ரூ. 1,200 கோடி திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்
- தமிழகத்தின் முக்கியமான தேசிய நெடுஞ்சாலைகளில் ஒன்றாக என்.எச். 209 உள்ளது. 456 கி.மீ., கொண்ட இந்த சாலையில் கோவை - சத்தி நெடுஞ்சாலை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது.
- கடந்த, 2019ல் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தனியார் நிறுவனத்துக்கு உத்தரவு பிறப்பித்தது. இதன்படி, தனியார் நிறுவனம் விரிவான திட்ட அறிக்கையை தயாரித்தது. கோவில்பாளையத்துக்கு, மேற்கே 2 கி.மீ., தொலைவில் துவங்கி, அன்னுார், புளியம்பட்டி, சத்தி, பண்ணாரி வழியாக, கர்நாடக எல்லை வரை 98 கி.மீ.,க்கு புதிய சாலை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
- இதில், 60 மீட்டர் அகலத்தில் சாலை அமைக்கப்பட உள்ளது. சில இடங்களில் ஏற்கனவே உள்ள சாலையை அகலப்படுத்தியும், பெரும்பாலான இடங்களில் புதிய புறவழிச் சாலை அமைக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- கோவை, ஈரோடு மாவட்டத்தில் இதற்காக, 731 ஏக்கர் நிலம் கையகப்படுத்த வேண்டி உள்ளது. இதில் குரும்பபாளையம், அன்னுார், புளியம்பட்டி, சத்தி ஆகிய நான்கு இடங்களில் புறவழிச் சாலை அமைய உள்ளது. நிலம் கையகப்படுத்த 620 கோடி ரூபாய் செலவாகும்.
- மொத்த மதிப்பீடு, 1,200 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.விரிவான திட்ட அறிக்கை, கடந்த மார்ச் மாதம் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இந்நிலையில், மத்திய அரசு இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
பிரத்யேக சரக்கு ரயில் தடச் சேவை: துவக்கி வைத்தார் பிரதமர் மோடி
- ஹரியானா - ராஜஸ்தான் வரை, கிழக்கு சரக்கு ரயில் தடச் சேவை திட்டத்தின் கீழ், 'நியூ ரிவாரி - நியூ மடார்' ரயில்வே ஸ்டேஷன்கள் இடையே, 306 கி.மீ., துாரத்திற்கு, சரக்கு ரயில் போக்குவரத்து தடம் அமைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, இந்த பிரத்யேக சரக்கு ரயில் தடத்தை, நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதாரம் -7.7% ஆக சரியும்
- கொரோனா ஊரடங்கால் நாட்டின் தொழில்துறைகள் அனைத்தும் முடங்கின. இதனால் நாட்டின் பொருளாதாரம் வரலாறு காணாத சரிவை சந்தித்தது. பொருளாதாரம் -23 சதவீதத்துக்கு மேல் சரிந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- அதாவது நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் பொருளாதாரம் -23.9 சதவீதம், 2ம் காலாண்டில் -7.5 சதவீதம் சரிந்திருந்தது. தற்போது ஊரடங்கு தளர்வு அறிவிப்புகளால் பொருளாதாரம் ஓரளவு மீளத் தொடங்கியதாக கூறப்பட்டாலும், தொழில்துறைகள் பழைய நிலைக்கு வர ஓராண்டுக்கு மேல் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இந்நிலையில், நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி தொடர்பான முதலாவது முன்கூட்டிய மதிப்பீட்டை தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ளது. இதில், விவசாயம் தவிர அனைத்து துறைகளிலும் சரிவு காணப்படுகிறது.
- கடந்த 2011-12 நிதியாண்டின் அடிப்படையில் கணக்கிடும்போது, நடப்பு 2020-21 நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 134.4 லட்சம் கோடியாக இருக்கும். முந்தைய ஆண்டில் இது 145.66 லட்சம் கோடியாக இருந்தது.
- இதன்படி நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) -7.7 சதவீதமாக இருக்கும். முந்தைய நிதியாண்டில் இது 4.2 சதவீதம் வளர்ச்சி அடைந்திருந்தது. கொரோனா ஊரடங்குதான் இதற்கு முக்கிய காரணம்.
- அதோடு நடப்பு நிதியாண்டில் உற்பத்தி துறை -9.4 சதவீதமாக சரியும். கடந்த நிதியாண்டில் இது 0.03 சதவீத வளர்ச்சியுடன் இருந்தது வர்த்தகம், ஓட்டல்கள், தொலைத்தொடர்பு சேவைகள், சுரங்கம் சார்ந்த துறைகளில் குறிப்பிடத்தக்க சரிவு காணப்படும்.
- விவசாய துறை மட்டுமே இதில் விதிவிலக்காக அமைந்துள்ளது. இந்த துறை நடப்பு நிதியாண்டில் 3.4 சதவீத வளர்ச்சியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விமானம் சுத்தம் செய்யும் ரோபோ: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிமுகம்
- ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் டில்லி விமான நிலையத்தில் விமான உட்புறங்களை சுத்தம் மற்றும் கிருமி நீக்கம் செய்வதற்கான ரோபோ தொழில்நுட்பத்தை இன்று தொடங்கியுள்ளது.
- இந்தியாவில் முதல் முறையாக தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த ஐசாட்ஸுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. யு.வி.-சி கிருமிநாசினி அமைப்பு உலகளவில் கிருமிநாசினியின் மிகவும் பயனுள்ள வடிவங்களில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
காஷ்மீர் தொழில் வளர்ச்சிக்கு ரூ.28,400 கோடி திட்டம்
- காஷ்மீரில், முதன் முறையாக, குக்கிராமம் முதல் நகர்ப்புறம் வரை தொழில், வேலைவாய்ப்பு, முதலீடு ஆகியவற்றை ஊக்குவிக்க, 28 ஆயிரத்து, 400 கோடி ரூபாய் மதிப்பிலான, தொழில் வளர்ச்சி திட்டத்திற்கு, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
- இதன் வாயிலாக உள்ளூரைச் சேர்ந்த, 4.50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அத்துடன், இந்த பகுதியில், சமத்துவ சமூக, பொருளாதார வளர்ச்சி ஏற்படும். அரசு வேலைகளை தாண்டி, தயாரிப்பு மற்றும் சேவைத் துறைகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.
- இத்திட்டத்தின் கீழ், கிராமப்புறங்களில், தயாரிப்பு தொழில் துவங்குவோருக்கு, இயந்திர தளவாட முதலீடுகளில், 50 சதவீதம்; நகர்ப்புறங்களில், 30 சதவீதம் மானியம் வழங்கப்படும்.
உலக வர்த்தக அமைப்பு இந்தியாவுக்கு பாராட்டு
- நேரடி துறைமுக வினியோகம் மற்றும் நேரடி துறைமுக நுழைவு வசதிகள், இடர் மேலாண்மை அமைப்பு, சுங்க நுழைவை மின்னணுமயமாக்கியது, ஒற்றைச் சாளர வசதிகள் என பல வர்த்தக வசதிகளை, 2015 முதல், இந்தியா அறிமுகம் செய்து வந்துள்ளது.
- மேலும், இந்தியாவின் வர்த்தக கொள்கைகளில் பெரிய மாற்றங்கள் எதுவுமின்றி, அவை அப்படியே தொடர்ந்து வருகின்றன.
- உள்நாட்டு உற்பத்தி, ஏற்றுமதி ஆகிய இரண்டையும் ஊக்குவிக்கும் வகையில், நேரடி மானியங்கள், விலை ஆதரவு திட்டங்கள், கட்டண சலுகைகள், விருப்பமான வட்டி விகிதங்கள் என, பல சலுகைகளை தொடர்ந்து அளித்து வருகிறது.வளர்ந்த நாடுகள், இந்தியாவில் வேளாண் துறையில் அதிக தாராளமயமாக்கத்தை விரும்புகின்றன.