Type Here to Get Search Results !

TNPSC 30th NOVEMBER 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

பார்முலா 1 கார் பந்தயம் பக்ரைன் கிராண்ட்பிரியில் இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் வெற்றி

  • உலகம் முழுவதும் பல பகுதிகளில் 17 சுற்றுகளாக நடத்தப்பட்டு வரும் இந்த ஆண்டுக்கான பார்முலா 1 கார்பந்தயம் தற்போது வரை 15 சுற்றுகள் முடிந்துள்ளன. இதில் 15-வது சுற்றான பக்ரைன் கிராண்ட்பிரி பந்தயம் அங்குள்ள சகிர் ஓடுதளத்தில் நடந்தது. 
  • இதில் 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் பங்கேற்ற இந்த போட்டியில், கடந்த சுற்றிலேயே உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை உறுதி செய்து விட்ட இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) 2 மணி 59 நிமிடம் 47.515 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து முதலிடத்தை பிடித்தார்.
  • இந்த சீசனில் அவர் பெற்ற 11-வது வெற்றி இதுவாகும். இதுவரை நடந்துள்ள 15 சுற்றுகள் முடிவில் ஹாமில்டன் 332 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.
  • பின்லாந்து வீரர் வால்டெரி போட்டாஸ் 201 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் 189 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். 

இந்தியாவில் பிரிட்டிஷ் அகாடமி விருது விழா 

  • அமெரிக்காவின் ஆஸ்கர் விருதை போன்றது பிரிட்டிஷ் அகாடமி ஆஃப் பிலிம் அண்ட் டெலிவிஷன் விருது (பாஃப்டா). இங்கிலாந்து, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் நடந்து வந்த இந்த விருது வழங்கும் விழா இந்த ஆண்டு முதல் இந்தியாவிலும் நடக்கிறது. 
  • விருதுக்காக விண்ணப்பங்களை பாஃப்டா வெளியிட்டுள்ளது. இதன் தூதராக இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார்.
19வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டம்
  • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு 19-வது கூட்டம், டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தலைமை தாங்கினார். காணொலி காட்சி வழியாக நடைபெறுகிற இந்த கூட்டத்தில் ரஷியா, சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 6 நாடுகளின் பிரதமர் கலந்துகொள்கிறார்கள்.
  • பாகிஸ்தான் சார்பில் அதன் வெளிவிவகாரங்களுக்கான நாடாளுமன்ற செயலாளர் கலந்து கொண்டார். ஆப்கானிஸ்தான், பெலாரஸ், ஈரான், மங்கோலியா ஆகிய 4 நாடுகளின் பிரதிநிதிகள் பார்வையாளர்களாக கலந்துகொள்வார்கள். இந்த மாநாட்டில் இம்ரான் கான் பதிலாக பாகிஸ்தான் நாடாளுமன்ற செயலாளர் கலந்து கொண்டார்.
  • இந்த மாத தொடக்கத்தில் ரஷ்யா தலைமையில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி, இம்ரான் கான் மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் கலந்து கொண்டனர். 
  • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அரசாங்கத் தலைவர்களின் உச்சி மாநாட்டில் ரஷ்யா, சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் பிரதமர்கள் கலந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel