பார்முலா 1 கார் பந்தயம் பக்ரைன் கிராண்ட்பிரியில் இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் வெற்றி
- உலகம் முழுவதும் பல பகுதிகளில் 17 சுற்றுகளாக நடத்தப்பட்டு வரும் இந்த ஆண்டுக்கான பார்முலா 1 கார்பந்தயம் தற்போது வரை 15 சுற்றுகள் முடிந்துள்ளன. இதில் 15-வது சுற்றான பக்ரைன் கிராண்ட்பிரி பந்தயம் அங்குள்ள சகிர் ஓடுதளத்தில் நடந்தது.
- இதில் 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் பங்கேற்ற இந்த போட்டியில், கடந்த சுற்றிலேயே உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை உறுதி செய்து விட்ட இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) 2 மணி 59 நிமிடம் 47.515 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து முதலிடத்தை பிடித்தார்.
- இந்த சீசனில் அவர் பெற்ற 11-வது வெற்றி இதுவாகும். இதுவரை நடந்துள்ள 15 சுற்றுகள் முடிவில் ஹாமில்டன் 332 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.
- பின்லாந்து வீரர் வால்டெரி போட்டாஸ் 201 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் 189 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.
இந்தியாவில் பிரிட்டிஷ் அகாடமி விருது விழா
- அமெரிக்காவின் ஆஸ்கர் விருதை போன்றது பிரிட்டிஷ் அகாடமி ஆஃப் பிலிம் அண்ட் டெலிவிஷன் விருது (பாஃப்டா). இங்கிலாந்து, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் நடந்து வந்த இந்த விருது வழங்கும் விழா இந்த ஆண்டு முதல் இந்தியாவிலும் நடக்கிறது.
- விருதுக்காக விண்ணப்பங்களை பாஃப்டா வெளியிட்டுள்ளது. இதன் தூதராக இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார்.
19வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டம்
- ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு 19-வது கூட்டம், டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தலைமை தாங்கினார். காணொலி காட்சி வழியாக நடைபெறுகிற இந்த கூட்டத்தில் ரஷியா, சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 6 நாடுகளின் பிரதமர் கலந்துகொள்கிறார்கள்.
- பாகிஸ்தான் சார்பில் அதன் வெளிவிவகாரங்களுக்கான நாடாளுமன்ற செயலாளர் கலந்து கொண்டார். ஆப்கானிஸ்தான், பெலாரஸ், ஈரான், மங்கோலியா ஆகிய 4 நாடுகளின் பிரதிநிதிகள் பார்வையாளர்களாக கலந்துகொள்வார்கள். இந்த மாநாட்டில் இம்ரான் கான் பதிலாக பாகிஸ்தான் நாடாளுமன்ற செயலாளர் கலந்து கொண்டார்.
- இந்த மாத தொடக்கத்தில் ரஷ்யா தலைமையில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி, இம்ரான் கான் மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் கலந்து கொண்டனர்.
- ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அரசாங்கத் தலைவர்களின் உச்சி மாநாட்டில் ரஷ்யா, சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் பிரதமர்கள் கலந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.