Type Here to Get Search Results !

TNPSC 23rd DECEMBER 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

நடுத்தர ரக ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது இந்தியா

  • ஒடிசா கடற்கரைக்கு அருகே உள்ள சந்திப்பூர் ஒருங்கிணைந்த சோதனை தளத்திலிருந்து நேற்று பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் இந்த சாதனையை செய்தது.
  • விமானம் போன்ற ஆளில்லாத அதிவேக வான் இலக்கு ஒன்றை நேரடியாக வெற்றிகரமாக இந்த ஏவுகணை தாக்கி அழித்ததன் மூலம் முக்கிய மைல்கல்லை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் எட்டியது.
  • இந்திய ராணுவத்தின் பயன்பாட்டுக்காக தரையிலிருந்து வானுக்கு பாயும் நடுத்தர ரக ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், இந்தியா, மற்றும் ஐ ஏ ஐ, இஸ்ரேல் ஆகியவை இணைந்து உருவாக்கியுள்ளன.

கால்பந்து ஜாம்பவான் பீலே சாதனையை முறியடித்த மெஸ்ஸி

  • ஸ்பெயினில் நடைபெற்று வரும் பிரபலமான லா லிகா கால்பந்து போட்டியில், நேற்று முன்தினம் இரவு நடந்த ஒரு லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான பார்சிலோனா ரியல் வல்லாடோலிட்டை சந்தித்த்து. 
  • இந்த போட்டியில், 65-வது நிமிடத்தில் பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரரும், அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்தவருமான லயோனல் மெஸ்சி ஒரு கோல் அடித்தார். 
  • இதன் மூலம் பார்சிலோனா கிளப்புக்காக தனது 644-வது (749 ஆட்டம்) கோலை பதிவு செய்த மெஸ்ஸி, ஒரே கிளப்புக்காக அதிக கோல்கள் அடித்தவரான பிரேசில் ஜாம்பவான் பீலேவின் சாதனையை மெஸ்சி முறியடித்தார்.
  • பீலே, பிரேசிலைச் சேர்ந்த சான்டோஸ் கிளப்புக்காக மட்டும் 643 கோல்கள் (656 ஆட்டம்) 1956-ம் ஆண்டு முதல் 1974-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் அடித்திருந்தார். அவரது 46 ஆண்டு கால சாதனைக்கு மெஸ்சி இப்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

அமெரிக்க நிதி நிறுவனம் இந்தியாவில் ரூ.400 கோடி முதலீடு

  • கொரோனா வைரசால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவில், பொருளாதார வளர்ச்சி மந்தமாக உள்ளது. இதனால், உள்கட்டமைப்பு திட்டங்கள் முடங்கிக் கிடக்கின்றன.
  • இந்நிலையில், இந்தியாவுக்கு உதவ, அமெரிக்க நிதி நிறுவனம் முன்வந்துள்ளது. அதன்படி, இந்திய தேசிய முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு நிதியத்தில், டி.எப்.சி., எனப்படும், அமெரிக்க சர்வதேச வளர்ச்சி நிதி நிறுவனம், 400 கோடி ரூபாய் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது.

எஸ்சி மாணவர்களின் கல்வி உதவி தொகைக்கு ரூ.59,000 கோடி ஒதுக்கீடு

  • பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில், அடுத்த 5 ஆண்டுகளில் 4 கோடி எஸ்சி மாணவர்களின் மேற்படிப்பிற்காக ரூ.59,000 கோடி கல்வித் தொகை ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில், 60 சதவீதமான ரூ.35,534 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel