வாருடாந்திர காலநிலை மாநாடு 2020
- பாரீஸ் காலநிைல மாறுபாட்டு ஒப்பந்தம் கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி 196 நாடுகளுக்கு இடையே ஒப்பந்தமானது. 2016-ம் ஆண்டு நவம்பர் 4-ம் தேதியிலிருந்து இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது.
- இந்த ஒப்பந்தத்தின்படி உலக வெப்பமயமாக்கலை 2 டிகிரி செல்சியஸுக்கும் கீழ் குறைப்பது அதிலும் 1.5 டிகிரி செல்சியஸுக்கும் கீழாக குறைக்க வேண்டும். அதாவது தொழிற்மயமாக்கலுக்கு முன்பிருந்த நிலைக்கு செல்ல இலக்குநிர்ணயிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பரில் பாரீஸ் காலநிலை மாறுபாடு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் நிறைவேறி 5 ஆண்டுகள் ஆகிறது. இதையடுத்து, வாருடாந்திர காலநிலை மாநாட்டை ஐ.நா.சபையுடன் சேர்ந்து பிரிட்டன், பிரான்ஸ், சிலி, இத்தாலி ஆகிய நாடுகள் சேர்ந்து இந்த ஆண்டு நடத்தின.
- காணொலி மூலம் நேற்று நடந்த இந்த மாநாட்டில், உலகத் நாடுகளின் தலைவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள் என பலர் பங்கேற்றனர்.
- இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். அதில் அவர் பேசியதாவது:
- காலநிலை மாறுபாட்டுக்கான பரரீஸ் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டு 5 ஆண்டு நிறைவடைகிறது. காலநிலை மாற்றுத்துக்கு எதிரான நமது போரில் முக்கியமான இலக்குகளை நோக்கி நாம் வைத்த அடியாகும்.
- இன்று நமது இலக்குகளையும், பார்வைகளையும் உயர்வாக வைத்திருக்கிறோம், கடந்த காலத்தில் கடந்த வந்த பாதைகளையும் நாம் மறந்துவிடக்கூடாது.
- நாம் நம்முடைய இலக்குகளை கண்டிப்பாக புதுப்பிக்க வேண்டும். இலக்குகள் ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டுள்ளதால் சாதனைகளையும் புதுப்பிக்க வேண்டும். அவ்வாறு செய்தால்தான் எதிர்காலத் தலைமுறையினருக்கு நாம் குரல் கொடுக்க முடியும்.
- பாரீஸ் காலநிலை மாறுபாட்டு ஒப்பந்தத்தின் இலக்குகளை அடையும் பாதையில் செல்வதோடு மட்டுமல்லாமல், அந்த இலக்குகளையும் தாண்டி எதிர்பார்ப்புகளையும் கடந்து இந்தியா பயணிக்கும்.
- இந்தியா இதுவரை கடந்த 5 ஆண்டுகளில் காற்றுமாசுவை 21 சதவீதம் குறைத்து, 2005-ம் ஆண்டு இருந்த அளவில் கொண்டுவந்துள்ளது. எங்களின் சூரியமின் உற்பத்தி திறன் கடந்த 2014ல் 2.63 ஜிகாவாட்ஸ் இருந்த நிலையில் 2020ல் 36 ஜிகாவாட்ஸாக உயர்ந்துள்ளது.
- உலகளவில் இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அளவு 4-வது இடத்தில் இருக்கிறது. 2022ம் ஆண்டுக்குள் 175ஜிகாவாட்ஸாக உயர்த்துவோம். 2030-ம் ஆண்டுக்குள் 450 ஜிகாவாட்ஸ்ஸை எட்டுவோம்.
- எங்களின் காடுவளர்ப்புத் திட்டமும், காட்டை பாதுகாப்பு உயிர்ச்சூழலை பாதுகாப்பதும் வெற்றிகரமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. உலகளவில் இந்தியா இரு முக்கிய விஷயங்களுக்கு முன்னோடியாக இருக்கிறது.
- சர்வதேச சோலார் கூட்டமைப்பு மற்றும் பேரிடர் மீள் உள்கட்டமைப்புக்கு முன்னோடியாக இந்தியா இருந்து வருகிறது. 2047-ம் ஆண்டில் இந்தியா நவீன, சுந்திரதினத்தை அதாவது 100-வது ஆண்டு சுதந்திரதினத்தைக் கொண்டாடும்.
- இந்த பூமியில் உள்ள அனைத்து இந்திய மக்களுக்கும் நான் அளிக்கும் வாக்குறுதி, நூற்றாண்டு இந்தியா இலக்குகளை அடைவதோடு மட்டுமல்லாமல், இலக்குகளைக் கடந்தும் எதிர்பார்ப்புகளை கடந்தும் பயணிக்கும்.
இந்திய தொழில் துறை கூட்டு சம்மேளனத்தின் 93வது ஆண்டு நிறைவு விழா மாநாடு
- இந்திய தொழில் துறை கூட்டு சம்மேளனத்தின் 93வது ஆண்டு நிறைவு விழா மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ' இந்தப் புதிய சட்டத்தின் மூலம், விவசாயிகள் இடைத்தரகர்களை தவிர்த்து தங்களது பொருட்களை நேரடியாக விற்கலாம்.
- மேலும், விவசாயிகள், தங்கள் வேளாண் பொருட்களை உள்ளூர் சந்தைகளைத்தவிர இதர இடங்களிலும் விற்கலாம்' என்று குறிபிட்டார்.
- கொள்கைகள் மற்றும் நோக்கங்கள் மூலம் விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்க மத்திய அரசு உறுதியுடன் செயல்பட்டு வருகிறது. சமீபத்திய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு புதிய சந்தைகளை விரிவாக்கம் செய்யும்.தொழில்நுட்பத்திற்கான அணுகல் மற்றும் விவசாயத்தில் முதலீடுகளை கொண்டு வர உதவும், 'என்றார்.