Type Here to Get Search Results !

உலக நோபல் பரிசு தினம் / INTERNATIONAL NOBAL PRIZE DAY

 

  • இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவமும் உடலியங்கியலும், அமைதி, பொருளியல் ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவோருக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. 
  • இந்த பரிசு பெறும் ஒவ்வொருவரும், ஒரு தங்கப்பதக்கமும் ஒரு பட்டயமும், நோபல் அறக்கட்டளையின் அவ்வருட வருமானத்தைப் பொறுத்து பரிசுப் பணமும் பெறுவர்.
  • இந்த நோபல் பரிசு 1901-ஆம் ஆண்டு டிசம்பர் 10-ந் தேதி முதன்முதலாக வழங்கப்பட்டது. வேதியியலாளர் ஆல்ஃபிரட் நோபெல் என்பவரால் 1895-ல் தொடங்கப்பட்ட இந்த விருது ஒப்பற்ற ஆய்வு மேற்கொண்டவர்களுக்கும் பெரும் பயன் விளைவிக்கும் தொழில்நுட்பங்கள் அல்லது கருவிகளைக் கண்டுபிடித்தவர்களுக்கும் சமூகத்திற்கு அரிய தொண்டாற்றியவர்களுக்கும் வழங்கப்படும் உலகளவில் பெரிதும் மதிக்கப்படும் பரிசு இதுவாகும்.
  • வருடந்தோறும் நோபல் அவர்களின் நினைவு தினமான டிசம்பர் மாதம் பத்தாம் நாள் அன்று, அமைதிக்கான நோபல் பரிசு தவிர மற்ற அனைத்து நோபல் பரிசுகளும், சுவீடனில் உள்ள ஸ்டோக்ஹோம் நகரத்தில் வழங்கப்படுகின்றன. பரிசு பெறுவோரின் சொற்பொழிவு, இந்நிகழ்ச்சியின் முன்தினம் நடைபெறுவது வழக்கம்.
  • நோபல் பரிசினை இதுவரை மூன்று தமிழர்கள் பெற்றுள்ளனர். இந்தப் பெருமைக்குரியோர் ச.வெ. இராமன் (இயற்பியர்-1930), சுப்பிரமணியன் சந்திரசேகர் (இயற்பியல்-1983), வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் (வேதியியல்-2009) ஆவர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel